Headlines News :
முகப்பு » , » மலையகத்திற்கான தனிப் பல்கலைக்கழகக் கோரிக்கை

மலையகத்திற்கான தனிப் பல்கலைக்கழகக் கோரிக்கை


மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் தேவைப்படுவதுடன் மலையக மாணவர்களின் உயர் கல்வியை மேம்படுத்த விசேட நடவடிக்கைகள் அவசியம். உயர் கல்வி அமைச்சரிம் கோரிக்கை.

பெருந்தோட்ட சமூக நடவடிக்கைக் குழுவானது 22.01.2015 அன்று உயர் கல்வி இராஜங்க அமைச்சரான  ரஜீவ விஜேசிங்க அவர்களுக்கு மலையக மாணவர்கள் உயர்ஃ பல்கலைக்கழக கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆவணம் ஒன்றை சமர்ப்பித்தது. பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணத்தை பெருந்தோட்ட சமூக நடவடிக்கைக் குழுவின் சார்பாக அதன் இணை இணைப்பாளரான சட்டத்தரணி இ. தம்பையா அமைச்சுக்கு சமர்ப்பித்திருந்தார். இந்த ஆவணத்தை பரிசீலித்த கௌரவ உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மலையக மக்களின் உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் பொருத்தமான நடவடிக்கைளை எடுக்கவும் உறுதி மொழி வழங்கியுள்ளார்.

இதன் முதற்கட்டமாக திறந்த பல்கலைக்கழக கற்கைகள் மற்றும் தொழில்நுட்ப கல்வியை மலையக மக்கள் முழுமையாக அணுகுவற்கு உயர் கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பரிந்துரைகளை உடனடியாக வழங்குமாறும் அத்தோடு மலையக மக்களிடத்தில் அவர்களின் உயர் கல்வி எதிர்பார்ப்புகள் தொடர்பாக கலந்துரையாட மத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யும்படியும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பெருந்தோட்ட சமூக நடவடிக்கைக் குழுவிடம் கோரியுள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பெருந்தோட்ட நடவடிக்கைக் குழுவின் இணை இணைப்பாளர் சட்டத்தரணி இ. தம்பையா மலையகத்தின் புத்திஜீவிகள் மற்றும் மக்களுடன் இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்பதாகவும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட நடவடிக்கைக் குழு உயர் கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்த ஆவணம் பின்வருமாறு அமைந்திருந்தது.

பின்னணி

இந்திய வம்சாவளி தமிழர்கள் பெருமளவில் பெருந்தோட்டங்களில் வாழ்வதுடன் அவர்களில் அதிகளவானவர்கள் தொழிலாளர்களர்களாவர்; மலையக மக்கள் என அடையாளப்படுத்தப்படுகின்ற இம்மக்கள் உயர் அல்லது பல்கலைக்கழக கல்வியை ‘தாமதித்து ஆரம்பித்தவர்கள்’ (‘டயவந ளவயசவநசள’) ஆவர். 1970கள் வரை மலையக பாடசாலைகளுக்கு உயர் கல்வி (யுஃடு) வகுப்புகள் அல்லது முன் பல்கலைக்கழக வகுப்புகள் இருக்கவில்லை. சில மலையக மாணவர்களுக்கு யுஃடு கல்வியை பெற யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டி இருந்தது. ஏறத்தள 800 பெருந்தோட்டப் பாடசாலைகள் ஆரம்பக் கல்வி வரை மட்டும் கல்வி வழங்குகின்றன. 1960களில் சில நலன்விரும்பிகளின் முயற்சிகள் காரணமாக பெருந்தோட்ட நகரங்களான பதுளை, நாவலப்பிட்டிய மற்றும் கம்பளை போன்றவற்றில் சில உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 1970களின் கடைசியிலும் 1980களின் ஆரம்பத்திலும் பெருந்தோட்ட பாடசாலைகள் கையேற்கப்பட்டப் பின்னர் மற்றும் மலையக பிரதேச அரச பாடசாலைகளுக்கு வந்த வெளிநாட்டு உதவிகள் (ளுஐனுயுஇ புவுணு) காரணமாக குறிப்பாக உட்கட்டுமான வசதிகள் வளர்ச்சி கண்டன.

இந்த பின்னணியில் க.பொ.த உயர்தரக் கல்வி 1980களின் பிற்பகுதிகளிலும் அதன் பின்னரும் விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது 20 1யுடீ பாடசாலைகளும் 109 1ஊ பாடசாலைகளும் க.பொ.த. உயர் தரக் கல்வியை மலையக மாணவர்களுக்கு வழங்குகின்றன.

முன்னர் குறிப்பிட்டது போல் மலையக தமிழ் மாணவர்கள் ‘தாமதித்து ஆரம்பித்தவர்கள்’ என்ற அடிப்படையில், பல தசாப்பதங்களாக பாடசாலை உயர் கல்வியை (யுஃடு) வழங்கும் ஏனைய பாடசாலைகளுடன் போட்டிப்போட முடியாதவர்களாக இருக்கின்றனர். இக்காரணிகளினாலும் பல்கலைக்கழகத்துக்கான திறமை அடிப்படை (அநசவை டியளந), தரப்படுத்தல் போன்ற அனுமதி முறைகள் மற்றும் தற்போதைய மாவட்ட அடிப்படையிலான பங்கீட்டு கொள்கைகள் காரணமாகவும் மலையக மக்கள் நியாயமான வீதத்தில் அதாவது 7 வீதம் என்று உரித்துடைய தமது இன வீதாசாரத்திற்கும் பல்கலைக்கழகத்துக்கு அனுமதியை பெற முடியாதுள்ளனர்.

அரசாங்கம் இந்திய தமிழர்களை ஒரு தனி இனமாக வகைப்படுத்தியுள்ள போதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புள்ளிவிபர புத்தகத்தில் அவர்கள் தனியாக அங்கீகரிக்கப்படாத அதேவேளை அவர்கள் வட கிழக்கு தமிழர்களுடன் சேர்த்து புள்ளி விபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ மூலங்களில் இருந்து பொருத்தமான, பயனுள்ள புள்ளிவிபரங்களையும் தரவுகளை பெற எந்த வாய்ப்புகளும் இல்லை. 14 பல்கலைக்கழகத்துக்கு வருடத்துக்கு 28900 வரை மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படும் போதும் அவர்களில் மலையக மாணவர்களின் எண்ணிக்கை 120- 150 மட்டுமே. இந்த எண்ணிக்கையானது மொத்த இன வீதத்திற்கு மிகவும் குறைவாகும். தெரிவாகும் 120-150 மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கலை மற்றும் வர்த்தக பிரிவை சார்ந்தவர்கள். இவர்களில் 25-30 வரையானவர்களே விஞ்ஞான கற்கைகள் சார் பீடங்களுக்கு தெரிவாகின்றனர்.

அத்தோடு மலையகத்தில் இருந்து தெரிவாகும் மாணவர்களில் மிகவும் குறைவானவர்களே 65 வீதமாக உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்கின்றனர் என்பது அவதானிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தேசிய பல்கலைக்கழகங்களுக்கு அப்பால் மூன்று பல்கலைக்கழகங்களும் உயர் தேசிய டிப்ளோமா, மருந்தக கற்ககைகள், உயர் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்து கற்கை வழங்கும் அரசு சார் நிறுவனங்களில் காணப்படும் அனுமதி அடிப்படைகள்ஃ கொள்கைகள் அவர்களின் அபிலாசைகளுக்கு அமைவாக இன்மையினால் மலையக மாணவர்கள் இவற்றை அணுக முடியாதுள்ளனர்.
தற்போது தொழில்நுட்பம், முகாமைத்துவம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் அரசு சாரா துறை நிறுவனங்கள் உயர் கல்வியை வழங்குகின்றனர். எனினும் இவைகள் அனைத்தும் கட்டணங்களை அறவிடும் நிறுவனங்களினால் வழங்கப்படும் நிலையில் மலையக மாணவர்கள் அந்த செலவை தாங்கும் வல்லமை அற்று இருக்கின்றனர்.
உயர் கல்வி தொடர்பில் மலையக தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

1970களில் இருந்து இலங்கையில் திறமை அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு முறை மாற்றப்பட்டு ஏனைய வகை நுழைவு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய நுழைவு முறையானது நாட்டின் பின்தங்கிய நிலையில் உள்ள (னளையனஎயவெயபநன) பிரிவினரை கவனிப்பதாக அமையும் என கூறப்பட்டது. எனினும் இலங்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மலையக தமிழ் மக்கள் தொடர்பில் இந்த புதிய நுழைவு கொள்கை நன்மையளிக்கவில்லை.

க.பொ.த. உஃத விஞ்ஞானக் கல்வியை வழங்கும் 15 1யுடீ பாடசாலைகளில் பல பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. மலையகத்தில் உள்ள ஒரு சில பாடசாலைகள் விஞ்ஞான மைய பீடங்களுக்கு அனுப்புவதற்கு சிறப்பாக செயற்பட்டு வருகின்ற போதும் ஏனைய பாடசாலைகள் பல பிச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன. அவையாவன்

• தரமான விஞ்ஞானத் துறை ஆசிரியர்கள் பற்றாக்குறை.
• விஞ்ஞான ஆய்வுகூடம் போன்ற உட்கட்டுமான வசதிகள் இன்மை.
• 20 1யுடீ பாடசாலைகள் இருக்கின்ற போதும் முக்கிய மூன்று மாவட்டங்களில் வாழும் மலையக மாணவர்கள் அனைவருக்கும் இதனை அணுக முடியாத நிலை காணப்படுகிறது.

சாரம்சமாக கீழ் வரும் பிரச்சினைகள் மலையக தமிழர்களின் உயர் கல்வியில் உள்ள பிரச்சினைகளாக அடையாளப்படுத்தலாம்.

• க.பொ.த. உஃத வகுப்புகளின் பலவீனங்கள்.
• க.பொ.த. உஃத வகுப்புகளை அணுகுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளமை.
• போதுமான பொருளாதார வசதியின்மை காரணமாக மலையக தமிழ் தொழிலாளர்களின் பிள்ளைகள் க.பொ.த. உஃத கல்வியை குறைவான அணுகுதலே காணப்படுகிறது.
• குறைவான மாணவர்ளே பல்கலைக்கழகத்துக்கு நுழைகின்றனர்.

உயர் கல்விக்கு அல்லது உயர் கல்வியை பெறுவதற்கான பல்கலைக்கழகத்துக்கு முன்னைய கல்விஃ க.பொ.த. உயர் தரக் கல்வி மிகவும் முக்கிய விடயமாக இருக்கின்றமையினால் மேற்குறித்த விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும். எனவே, குறித்த அமைச்சுகள் மலையக மக்களின் உயர் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மலையக தமிழர்களின் உயர் கல்வியை உயர்த்துவதற்கான முன்மொழிவுகள்.
1. இம் மாணவர்களை பல்கலைக்கழக கல்வியில் உள்வாங்குவதற்கு சாத்தியமாக்கல் நடவடிக்கைகளை (யககசைஅயவiஎந யஉவழைn) அல்லது நேர்கணிய பாகுபாட்டு கொள்கையை அரசாங்கம் அறிமுகம் செய்ய வேண்டும்.

2. மலையக மக்களுக்கு ஒரு தனியான பல்கலைக்கழகம் தேவை – இக் கோரிக்கையானது பல ஆண்டுகளுக்கு முன்னர் மலையக புத்திஜீவிகளினால் முன்வைக்கப்பட்டதுடன் முன்னால் மலையக தலைவர்கள் அதனை கவனத்திற் எடுத்துக் கொண்டிருந்ததுடன் இந்த முன்மொழிவானது அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஏனைய தமிழ் பேசும் சமூகங்களான வடக்கு, கிழக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு பல்கலைக்கழகங்கள் வழங்கப்பட்டிருப்பதுடன் அவை அப்பிரதேசத்தின் வரலாறு, கலாசார, மொழியியல், விவசாய, கைத்தொழில் மற்றும் கல்வி அபிலாசைகளை உறுதி செய்படுகின்ற வகையில் இருந்த போதும் மலையக மக்களுக்கு மட்டும் ஒரு பல்கலைக்கழகமோ அல்லது ஒரு பல்கலைக்கழக கல்லூரியோ இல்லை. அரச பல்கலைக்கழக முறைமை ஒரு இடத்தில் நிற்க போவதில்லை என்பதனால் இந்த எதிர்பார்ப்பு குழு மனப்பான்மையின் அடிப்படையிலானது அல்ல. இது மலையக மக்களின் உயர் கல்வி மட்டத்தை நிச்சயம் உயர்த்தக்கூடியதாகும். அவ்வாறான பல்கலைக்கழகமானது அனைத்து இன குழுக்களையும் உள்ளடக்கிய தேசிய நிறுவனமாக அமைதல் வேண்டும் என்பதோடு மலையக அடையாளத்தை வழியுறுத்துவதாக இருத்தல் வேண்டும்.

இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டப் போது பல்கலைக்கழக இயக்கத்தின் முன்னோடிகள் தேசிய கலாசாரம் மற்றும் மொழி ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்கு அது உதவும் என்பதை வழியுறுத்தினர். குறித்த தனிப் பல்கiலைக்கழகம் தாபிக்கப்படும் போது மலையகத்திலும் அதேமாதிரியான அபிவிருத்தி இடம்பெறுகின்ற வாய்ப்புண்டு.

3. தேசிய பல்கலைக்கழகங்களுக்கு மேலதிமாக ருNஐஏழுஊ, கடல் பல்கலைக்கழகம் மற்றும் ளுடுஐஐவு மற்றும் உயர் தேசிய டிப்ளோமா, மருந்தக, உயர் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ கற்கைளுக்கான ஏனைய அரச கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
4. போதுமான மனித மற்றும் பௌதீக வளங்களுடன் மலையக தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்கள் தாபிக்கப்பட வேண்டும்.

இன்று இலங்கை பல்வேறு உயர் கல்வி வாய்ப்புகள் மூலம் அறிவுமைய பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மலையக மக்கள் தாங்கள் அதில் பின்தள்ளப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ளனர்.

உயர் கல்வி தொடர்பிலான மலையக மக்களின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை உயர் கல்வியில் பாரபட்சங்கள் (னiளியசவைநைள) மற்றும் அசமத்துவத்திற்கு இட்டுச்செல்லும். அறிவுமைய பொருளாதாரத்தின் வினைத்திறனான உறுப்பினர்களாவதற்கு தேவையான தகைமை மற்றும் திறனை அவர்கள் இழந்து வருகின்றனர். எனவே இது அவர்களை கணினி மற்றும் விஞ்ஞான அறிவு இன்றி வாழும் சமூகத்தின் ஒரு பிரிவினரை உருவாக்கி எண்மிய பாகுபாட்டிற்கு (னபைவையட னiஎனைந) தள்ளப்படும் நெருக்கடிக்கு இட்டுச் செல்லும்.

நன்றி - http://inioru.com
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates