Headlines News :
முகப்பு » » மலையக மக்கள் குறித்து பௌத்த பிக்குவின் கரிசனை

மலையக மக்கள் குறித்து பௌத்த பிக்குவின் கரிசனை


இந்த நாட்டில் உழைக்கும் வர்க்கமாக வாழ்ந்து வரும் மலையக பெருந்-தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் பற்றி, அவ்வர்க்கத்திலிருந்து தோற்றம் பெற்ற அதிகார வர்க்கத்தினரே அதிகம் அலட்டிக்கொள்ளாது இருக்கும் போது இனவாத போக்குக்கொண்ட தென்னிலங்கைச் சமூகத்திலிருந்து இம்மக்களைப்பற்றிய அக்கறையுடனும் கரிசனையுடனும் குரல் கொடுக்க ஒரு பெளத்த பிக்கு முன் வந்திருக்கின்றமையானது மலையக மக்களின் அவல நிலையை மேலும் உணர்த்துவதாய் உள்ளது. கடந்த வெள்்ளிக்கி-ழமை 23 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழு அறையில் இடம்பெற்ற தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை பெருபித்தல் தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றிய தென்மாகாண சபை உறுப்பின-ரான வணக்கத்திற்குரிய பத்தேகம சமித்த தேரர் தென் மாகாணத்தில் வாழ்ந்து வரும் மலையக மக்களின் உரிமைகள் வாழ்க்கைத்தரம் பற்றி பல அரிய கருத்துக்களை கூறியது மட்டுமில்லாது இம்மக்களின் வாழ்க்-கைத்தரம் மாற வேண்டுமாயின் புதிய தலைமைகள் உருவாக வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.

சமூக அழுத்தம் என்ற விடயத்தை அவர் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கியிருந்தமை கோடிட்டு காட்ட வேண்டிய விடயமாகும். பல்வேறு நிர்பந்தங்களுக்கு மத்தியில் பெரும்பான்மை சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் பிரதேசங்களில் வசித்து வரும் இந்த மலையக தமிழர்கள் சிங்-களவர்களாக மாற்றப்படுகின்றனர். மேலும் தமது பிள்ளைகளை சிங்கள மொழியில் கற்க அனுமதிக்கின்றனர், மட்டுமில்லாது சிங்கள பெயர்களை வைக்கின்றனர். இந்த சமூக அழுத்தத்தை அவர்கள் மீது பிரயோகிக்க முடியாது.மலையக மக்களுக்கென்று இருக்கும் மொழி,மதம்,கலாசார பண்-புகள் என்பது அவர்களின் அடிப்படை உரிமையாகும். இதை எக்காரணம் கொண்டும் மாற்றுவதற்கு எவருக்கும் உரிமையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட கருத்தரங்கில் மலையகம் சார்ந்த பல கல்விமான்கள் பலர் வெவ்வேறு தலைப்புகளில் பெருந்தோட்ட சமூகம் பற்றி உரையாற்-றியிருந்தாலும் வேறு சமூகத்தைச்சேர்ந்த அதுவும் இலங்கை ஒரு பெளத்த நாடு பெளத்தர்களிலேயே ஏனையோர் தங்கியிருக்க வேண்டும் என அண்மைக்காலமாக குரல் கொடுத்து வரும் பிக்குகளின் வரிசையில் மலையக மக்கள் பற்றி மிகவும் கரிசனையுடன் உரையாற்றிய பத்தேகம சமித்த தேரர், சிறப்பான இடத்தில் வைத்து போற்றப்பட வேண்டிய ஒருவர் என்றால் மிகையாகாது. தென்னிலங்கை பிரதேசங்களில் வாழ்ந்து வரும் மலையக மக்களின் வாழ்க்கைதரம் எத்தகைய வறுமை நிலையில் உள்ளது என்பதை அவர் மிகவும் வேதனையுடன் எடுத்தியம்பினார்.கண் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள தனது நண்பர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த போது தான் தோட்டப்பகுதி ஒன்-றுக்கே அழைத்து சென்றதாகவும் அங்குள்ள சிறார்களை பரிசோதித்த அந்த வைத்திய நண்பர் கண் கலங்கி சொன்ன தகவலை கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டார் தேரர்.

இந்த சிறார்களுக்கு போஷாக்கான உணவுகள் இல்லை. ரொட்டியும் பாணுமே இவர்களது உணவாக இருக்கின்றது.பெற்றோர்களும் காலையில் வேலைக்குச்சென்று மாலை திரும்புவதால் இந்த சிறுவர்கள் கவனிக்கப்ப-டுவதில்லை. இதன் காரணமாகவே இவர்களின் கண்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை தனது நண்பர் வேதனையுடன் வெளிப்படுத்தியதை அவர் கூறினார். 

13 லயன் அறைகள் இருக்கும் ஒரு தோட்டக்குடியிருப்பில் வாழ்ந்து வரும் 30 மாணவர்கள் ஒரே மலசல கூடத்தையே பாவிக்கும் அவலத்தை கூறிய சமித்த தேரர் இவர்களிடம் சென்று வாக்கு கேட்பது எவ்வளவு வெட்கத்திற்குரிய செயல் என்று கூறியது மட்டுமல்லாது இந்த நாட்டில் ஜனநாயகம் உரிமை என்றெல்லாம் பேசுகிறார்கள் ஆனாலும் இந்த குறிப்-பிட்ட சமூகத்தினரின் அவலங்கள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே உள்-ளது என்ற கருத்தைத்தெரிவித்தார். 

ஆனாலும் தென் பிராந்தியத்தில் மட்டுமில்லாது 180 வருடங்களுக்கும் மேலாக ஏனைய பல இடங்களிலும் வாழ்ந்து வரும் மலையக பெருந்-தோட்ட சமூகத்தின் மலசல கூட பிரச்சினைகள் உட்பட ஏனைய அடிப்-படை அம்சங்கள் தீர்க்கப்படாமலேயே உள்ளதையும் ஆனாலும் வெட்கப்-படாமல் பிரதிநிதிகள் காலங்காலமாக அவர்களிடம் சென்று வாக்குறு-திகள் வழங்கி வாக்குகளை பெற்று வருவதையும் சமித்த தேரர் அறிந்தி-ருப்பாரோ தெரியவில்லை.

இன்று ஏனைய சமூகங்களுக்கு இந்த நாட்டில் கிடைக்கும் சலுகைகள் உரிமைகளை பெருந்தோட்ட சமூகமும் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கத்தினால் வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்பட அவர்கள் பக்கம் ஒட்டிக்கொண்டிருக்கும் அதிகாரம் படைத்தவர்களே வாய் திறக்க வேண்டும். 

எனினும் தனிப்பட்ட இருப்பு மற்றும் அதிகாரத்தை தக்க வைத்தல் கார-ணங்களுக்காக கிடைக்கவிருக்கும் சலுகைகளையும் நாட்டாற்றில் விட்-டுச்செல்லும் நிலைமைகளே அண்மைக்காலமாக மலையகத்தில் அதிக-ரித்து வருகின்றன. இந்திய அரசாங்கத்தின் நான்காயிரம் வீட்டுத்திட்-டத்தில் அரங்கேறியிருக்கும் தொழிற்சங்க குடுமி பிடி சண்டைகள் இதை நன்கு உணர்த்தி நிற்கின்றன. வறுமை வீதத்தில் நுவரெலியா மாவட்டம் நாளுக்கு நாள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு வருகி-றது. கைவசம் இருந்த பொறுப்பான அமைச்சுகள் மற்றும் திட்டங்கள் கைவிட்டுப்போய் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அதிக தமிழ் பாராளு-மன்ற மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்தை கொண்ட மாவட்டம் என மார் தட்டிக்கொள்வதில் இங்கு என்ன பெருமை உள்ளது? கடந்த 35 வரு-டங்களுக்கு மேலாக தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்ட மாவட்டத்திலேயே இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் போது தென் மாகாணத்திலுள்ள மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி புதிதாக எதுவும் கூறத்தேவையில்லை. குடிசன மதிப்பீட்டு கணக்கெ-டுத்தல் காலகட்டங்களிலும் மலையகமக்களை இந்திய வம்சாவளியினர் என பதியும் படி கூற எவரும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வில்லை. விளைவு இன்று இலங்கை தமிழர்கள் என்ற வகைக்குள் அவர்-களில் கணிசமானோர் அடங்கி விட்டனர். இதன் காரணமாக இந்த சமூ-கத்திற்கென பிரத்தியேகமாக கிடைக்கவேண்டிய சில உரிமைகளும் வாய்ப்புகளும் பறிபோய்விட்டன. அதே போன்றதொரு அபாயகரமான சமூக உருமாற்றம் தான் தென்பகுதி வாழ் மலையக மக்களிடத்தே இடம்பெற்று வருவதை சமித்த தேரர் ஆதாரபூர்வமாக கூறியிருக்கிறார். மேற்படி கருத்தரங்கில் கூறப்பட்ட விடயங்கள் குறித்து இனி ஒவ்வொரு நாளும் அறிக்கை விடுத்தப்பின்னர் அப்படியே அமைதி காத்து விடும் செயலை மட்டுமே இவர்களால் செய்ய முடியும்.

அந்த வகையில் தனக்குள்ள அரசியல் மற்றும் சமூக,ஆன்மீக பின்னணி இடையூறுகள் பற்றி கவலைப்படாமால் தனது பிரதேச மலையக மக்களின் நிலைமைகளையும் அதற்கான அரசியல் தீர்வையும் துணிகரமாக எடுத்துக்கூறிய சமித்த தேரரை பார்த்து நமது பிரதிநிதிகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates