Headlines News :
முகப்பு » » 'பச்சை ரத்தம்' ஆவண படம் தொடர்பாக – ப.விஜயகாந்தன்

'பச்சை ரத்தம்' ஆவண படம் தொடர்பாக – ப.விஜயகாந்தன்


திரு தவமுதல்வனின் முயற்சியின் பயன் வழி உருவான 'பச்சை இரத்தம்' ஆவணப்படத்தினை ஒவ்வொரு மலையகத்தவரும் பார்க்க வேண்டும். திரு தவமுதல்வனின் மேலான இந்த முயற்சி மிககுந்த வரவேற்புக்குரியது. தலைசிறந்த மனிதாபிகளின் மனிதாபத்தைக் கூட பெறாதிருந்த இலங்கை - இந்திய தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் துயரங்களை ஆவணப்படமாக்கி உலகறியச் செய்ய எடுத்த முயற்சி மேலானதே.

இலங்கையிலிருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் துயரங்களை இந்தியர்களோ இந்திய தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் துயரங்களை இலங்கையர்களோ சரியாக புரிந்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அற்றநிலையில் திரு.தவமுதல்வனின் இந்த முயற்சி தொப்புள் கொடி உறவுகளை இணைக்கும் உறவுப்பாலமாக கட்டாயம் திகழும்.

இரண்டு சமூகங்களிலும் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஒரே விதமானவையாக இருக்கின்றன. இலங்கையிலும் தொழிலாளர்கள் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை இறுதியில் கேலிகூத்துக்களாகவே முற்றுப்பெறுகின்றன.

முடிந்தவரை தொழிலாளர்களை எல்லோரும் பகடைக்காயாக பயன்படுத்தியே இருக்கின்றனர். தொழிலாளர்களின் உண்மையான நலன் சார்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் என அடையாளம் காட்டுவது மிக கடினம். தொழிலாளர்களும் தங்களின் பிரச்சினைகளைப் பேசி பேசி விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.

பச்சை ரத்தம் ஆவணப்படத்தின் இறுதியில் சேர்த்துள்ள குறிப்புக்கள் மிகப்பயனுடையவை.

அது சார்ந்து இன்னும் சில :
யுத்தத்தில் பெரும்பாலான மலையக தமிழர்கள் பங்கேற்றிருந்தாலும் அவர்கள் வெறுமனே பலிகடாக்களாக ஆக்கப்பட்டமை மாத்திரதே எஞ்சியுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்களும், சமுக நலன்சார்ந்து செயற்படுவதாக கூறிக்கொள்ளும் குழுக்களும், தொழிற்சங்களும், அரசியல் வாதிகளும்,  அரசும் மலையக மக்களை பணயமாக வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் பணம் ஈட்டி பிழைப்பு நடத்தும் ஈனச்செயல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

அரசாங்க தொழில்வாய்ப்புகள் என கூறி வெறுமனே ஆசிரியர் நியமனங்களை மாத்திரம் வழங்கி ஏனைய எல்லா துறைகளிலும் சமூகத்தின் முன்னேற்றத்தை எல்லா வழிகளிலும் வீணடிக்கின்றனர்.

கருவறைக் கொலைகளும் இனசுத்திகரிப்பு முயற்சிகளும் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டே இருக்கின்றன. புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதி, நீர்த்தேக்கத்திட்டங்கள், அபிவிருத்தி திட்டங்கள், அரசியல் சீர்த்திருத்தங்கள் (புதிய தேர்தல் தொகுதி நிர்ணயம்), கல்விச் சீர்த்திருத்தங்கள் (ஆயிரம் பாடசாலைகள் திட்டம்) போன்ற பல விடயங்கள் இவற்றிற்கு ஆதாரமாய் அமைகின்றன.

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கூலி உயர்வுக்கான போரடத்திலேயே இழுத்தடிக்கச் செய்வதனூடாக அரசியல் விடுதலை, சமுதாய விடுதலை, இனவிடுதலை பற்றிய பேச்சுக்கே வழியில்லாமலாக்கு தந்திரோபாயம் முன்னெடுக்கப்படுகின்றது.

தொழிலாளர்கள் நலன் சார்ந்த இத்தகைய முயற்சிகள் வெற்றியளிக்கும் வகையில் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழும் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் நலன் சார்ந்து இணைந்து இயங்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான கருத்தாடல்களை தொடங்குவதற்கான அவசியம் பரவலாக உணரப்படுகின்றது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates