Headlines News :
முகப்பு » » கல்வியில் செயல் நிலை ஆய்வு – கலந்துரையாடல்

கல்வியில் செயல் நிலை ஆய்வு – கலந்துரையாடல்


17.03.2014 திங்கட்கிழமை அட்டன் ஸ்ரீபாத சிங்கள வித்தியாலயத்தின் கணித அலகில் கல்வியில் செயல் நிலை ஆய்வு (Action Research in Education) எனும் தலைப்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் அட்டன் கல்வி வலயத்தின் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் உள்ளடங்களாக சுமார் இருபது ஆய்வாளர்கள் கலந்துக்கொண்டனர். மேற்படி கலந்துரையாடலானது அட்டன் கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு நாமல் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை மட்டத்தில் செயல்நிலை ஆய்வுக்களை மேற்கொண்டு அதனூடாக தற்கால கற்றல் - கற்பித்தல் முறைமையில் காணப்படும் இடர்பாடுகளை குறைத்தல், கற்றல் கற்பித்தலுக்கு தேவையான புதிய உபாயங்களை கண்டறிதல், தேசியமட்டத்தில் கல்விக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு பரிந்துரைகளை முன்வைத்தல், இளம் ஆசிரியர்கள் மத்தியிலும் பாடசாலை மட்டத்திலும் செயல்நிலை ஆய்வுகளை பரவலடையச்செய்தல் முதலான நோக்கங்களுக்காக மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. இருபது ஆய்வாளர்களால் இருபது தலைப்புக்கள் தெரிவு செய்யப்பட்டு இன்றுமுதல் ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

பொகவந்தலாவை ப. விஜயகாந்தன்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates