Headlines News :
முகப்பு » , » எடின்பரோ தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - எஸ்.தியாகு

எடின்பரோ தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - எஸ்.தியாகு



களனிவெளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நானுஒயா எடின்பரோ தோட்டத் தொழிலாளர்கள் 375 பேர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திங்கட்கிழமை பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தோட்டத்தில் தொழில் புரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஆரம்ப காலம்முதல் இலவசமாக மாதாந்தம் வழ்ங்கி வந்த தேயிலை தூள் இடையிறுத்தப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்தும் தோட்டத்தில் சுகாதார வசதி போக்குவரத்து வசதி வீடமைப்பு வைத்திய சேவை நலன்புரி திட்டங்கள் வயது வந்தவர்களுக்கான வேலைவாயப்பு உட்பட இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கான முறையான தீர்வ வழங்கப்படாதவரை தாம் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த பணிபகிஸ்கரிப்பு நடைபெற்ற தோட்டத்திற்கு சென்ற மத்திய மாகாண சபை உறுப்பினர் ராதாகிருஸ்ணன் ராஜாராம் தோட்ட முகாமையாளர் உஜித்த தென்னகோன் உதவி முகாமையாளர் நதுன் இருள் ஆராச்சி ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் குறித்தவிடயம் தொடர்பாக தொழிலாளர்களுக்கு சார்பான தீர்மானம் ஒன்றை தலைமைக்காரியாலயத்துடன் கலந்துரையாடி பெற்றுத்தருமாறு வேண்டுகோள் ஒன்றைவிடுத்தார்.

இது தொடர்பில் தோட்ட முகாமையாளர் சந்பந்தப்பட்ட கம்பனியின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி சாதகமான தீர்வு ஒன்றை பெற்றுத்தருவதாக தன்னிடம் தெரிவித்ததாக ராஜாராம் தொழிலாளர்களிடம் தெரிவித்தார்.தொழிலாளர்கள் தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.இன்றைக்குள் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக முகாமையாளர் உஜித்த தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates