Headlines News :
முகப்பு » , , » போராட்டம் எதற்கு? - சனத்

போராட்டம் எதற்கு? - சனத்


மலையகத்தை தாண்டி தொழிலை தேடி வந்த நாம் இன்று நம் சமூகத்திற்காக தலைநகரில் போராடி வருகிறோம் இன்று தொழிலாளி என்பதைவிட மலையக தாயின் பிள்ளைகளாக போரடிக்கொண்டிருக்கின்றோம்

களமிறங்குவோமா அல்லது கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? என்ற குழப்பத்தில் மூழ்கியிருப்பவர்களுக்காக....கட்டாயம் படிக்கவும்....!

கறுப்பாடுகளை களையெடுத்துவிட்டோம்
இனி கா(கூ)ட்டிக்கொடுப்புகளுக்கு இடமில்லை
களமாட துணிந்து வாருங்கள் தோழர்களே....!

ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் '1000' ஐ முன்னிலைப்படுத்தி - ஏனையவற்றையும் தேசிய மயப்படுத்துவோம்.

தேயிலை தேசத்துக்குள் முடங்கியிருந்த - மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெருந்தோட்டத்தொழிலாளர்களின் உரிமைக்குரல் இன்று சர்வதேசம்வரை ஓங்கி ஒலிக்கின்றது.
தொழிலாளர்களின் பிரச்சினையை தேசியமயப்படுத்தியதன் முதல் வெற்றி.

இலங்கையில் முதல் தடவையாக 36 அமைப்புகள், பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்காக தலைநகரில் களமிறங்குகின்றன.( அரசியல் நோக்கங்களுக்கு அப்பால்) நாம் ஓதுங்கி நின்று வேடிக்பை பார்க்கலாமா தோழர்களே?

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் நேசக்கரம் நீட்டியுள்ளனர். எனவே, ' 1000' கிடைக்குமா, கிடைக்காதா? என மனதுக்குள் முணுமுணுப்பதைவிடுத்து, களத்துக்குவந்து உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்துங்கள்!

போராட்டம் வெற்றிபெரும், தோல்வியடையும், பயனற்றதா என மனதுக்குள்ளேயே நீங்கள் நடத்தும் கருத்துக் கணிப்பால் சமூகத்துக்கு நடக்கப்போவது என்ன?

எம் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதற்காக தென்னிலங்கை சக்திகளின் ஆதரவு எமக்கு அவசியம். அதற்கான ஆரம்ப புள்ளியாக இந்த போராட்டத்தை பாருங்கள். ( ப்ளீஸ் இலக்கங்களில் தொங்கிநிற்கவேண்டாம்)

கூட்டு ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட வேண்டும். அந்த அடிமை சாசனத்துக்கு பதிலாக மாற்று பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டும். புத்தி ஜீவிகளுடன் இணைந்து மாற்று பொறிமுறையையும் தயாரிப்பதும் எம் கடமையாகும். அதற்கான களமாக இதை பயன்படுத்துவோம்.

மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் தொழிற்சங்கங்களுக்கு எதிரான போராட்டம் அல்ல இது. மக்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையிலும், அவர்களின் பிரச்சினையை தேசிய மயப்படுத்தும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் போராட்டமாகும்.

உங்களுக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அதில் இந்த '1000' மும் ஒன்று, எனவே, விமர்சனங்களை ஒதுக்கி வையுங்கள். அல்லது சந்தேகங்கள் இருந்தால் களத்தில் வந்து துணிந்து கேட்குமாறு வேண்டுகின்றேன்.

இந்த போராட்டம் குறித்து மாற்று கருத்து இருப்பின், பகிரங்க விவாதமொன்றை ஏற்பாடு செய்வோம். ஆரோக்கியமான முறையில் கருத்தாடலில் ஈடுபடுவோம். அதற்கு களம் அமைத்துக்கொடுக்க நான் தயார்.

எனவே, வீழ்ந்தே வாழ்ந்து மாண்டதுபோதும் விடியலுக்காக கைகோர்க்கவும் தோழர்களே.
மலையக இளைஞர்கள் நினைத்தால் ஒரு நாள் கொழும்பை முடக்கிவிட முடியும் என்ற சிந்தனை எல்லோருக்கும் உண்டு அதற்கான நாளாக ஜனவரி 23ஆம் திகதி நாளை உறுதிப்படுத்துவோம்.

ஊடகவியலாளர் சனத்

நன்றி - மலைநாடு
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates