தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வை அலட்சியப்படுத்த முடியாத நிலையில் மலையக தொழிற்சங்கங்கள், கட்சிகள்
தோட்டத் தொழிலாளர் களின் கூட்டு ஒப் பந்தம் கடந்த மாதம் 31 ஆம் திகதி காலாவதியானது. இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கைச்சாத்திடப்படும் இக்கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை தொழி லாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பல தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு ஆகியன கைச்சாத்திட்டு வருகின்றன.
முதலாவது கூட்டு ஒப்பந்தம் 17 வருடங்களுக்கு முன்னர் 1998 ஆம் ஆண்டளவில் கைச்சாத்திடப்பட் டது. இது இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது. ஒன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம். மற் றையது தொழிலாளர்களின் நலன் சார்ந்த விடயங்கள். கடந்த காலங் களில் நலன் சார்ந்த விடயங்கள் கைவிடப்பட்ட நிலை யில் உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இம்முறையும் வழமை போலவே முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கொழும்பு ராஜகிரியவில் உள்ள தலைமையகத்தில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம் பமானது. வழமை போலவே தொழி ற்சங்கங்கள் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு, அடிப்படை வசதிகள், வேலை நாட்கள் போன் றவற்றை முன்வைத்தன. அதே போன்று முதலாளிமார் சம்மேள னமும் தங்களுக்கு உள்ள சிரமங்கள் நஷ்டம் போன்றன குறித்து பழைய புராணமே பாடியதாக தெரிவிக்கப் படுகிறது.
மலையகத்தின் பாரிய தொழிற் சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤க்கு ஏனைய தொழிற்சங்க பேச்சு வார்த்தைகளை விட இம் முறை மிகவும் அழுத்தம் நிறைந்த மிக சவால் மிக்க ஒரு பேச்சு வார்த்தை யாக இது உள்ளது. தோட்டத் தொழி லாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை இ.தொ.காவுக்கு உள்ளது. காரணம் கூட்டு ஒப்பந்தம் ஆரம் பிப்பதற்கு முன்னரே நடைபெற வுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தொழி லாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுப்பதாக இ.தொ.கா. அறிவித்து விட்டது.
ஏனைய தொழிற்சங்கங்கள் அனை த்தும் ஆயிரம் ரூபா சம்பள உயர் வினை பெற்றுக்கொடுக்க தாமும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்து விட்டன. இந்நிலையில் இ.தொ.கா.வுக்கு 1000 ரூபா சம்பள உயர்வினை பெற் றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடும் சவாலும் கூடவே உள்ளன என்று தான் கூறவேண்டும்.
அதேவேளை இதற்கு முன் நட ந்த பேச்சுவார்த்தைகளிலெல்லாம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤க்கு அமைச்சுப் பதவிகள் இருந்தன. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤க்கு எந்த ஒரு அமைச்சுப் பதவியும் இல்லாத நிலையிலேயே பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எந்தளவுக்கு இந்த கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் வெற்றிபெறும் என்று இப்போது கூற முடியாது. அத்தோடு பாராளுமன்றம் கலைக்கப்படுவதற் கான வாய்ப்பு உள்ள நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்காவிட்டால் தேர்தல் மேடையில் சம்பள விடயம் தொடர்பாக சாடும் விடயங்களும் அதிகரித்தே காணப்படும். அத்துடன் இது தேர்தலில் வாக்களிக்கும் வீதத்தைக் குறைப்பதுடன் அது இ.தொ.கா.விற்கு பாதகமாகவே அமையக்கூடும்.
தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரம் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கில்லை. இதற்கு இணையாக பாரிய சவால்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி. திகாம்பரத்திற்கும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைப் பொறுப்பாளரும் கல்வி ராஜாங்க அமைச்சருமான வி. ராதாகிருஷ்ணன் பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சரான வேலாயுதம், மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரை ஆகிய அனைவருக்கும் உள்ளன. ஏனென்றால் தொழிலாளர்கள் மீது அதிக அக்கறை கொண்டவராக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பி.திகாம்பரம் இருக்கிறார். அத்துடன் ஆளும் கட்சியில் இவர்கள் தொழிலாளர்களின் நன்மை கருதியே இணைந்ததாக பல இடங்களில் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் சம்பள உயர் விற்காக பல போராட்டங்களையும் செய்துள்ளனர். அத்துடன் பொதுத் தேர்தல் ஒன்று நெருங்கியுள்ளதால் தொழிலாளர்களின் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதேநேரம் தோட்டத் தொழிலாளர்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தி யிலேயே வாழ்ந்து வருகின்றனர். நாளுக்கு நாள் இவர்களின் பொருளாதார சுமைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. நுவரெலியா மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் அதிகமானவர்கள் குறைந்த போஷாக்கு மட்டத்தில் இருப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின் றன. இதனால் கல்வி, சுகாதாரம் போன்றனவும், பாதிப்புக்குள்ளாகியுள் ளன. இந்நிலையில் இந்த சம்பளத் தினைப் பெற்றுக்கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.
இதேபோன்று தான் மலையகத்தில் உள்ள தொழிற்சங்கங்களில் ஒன்றாக மலையக மக்கள் முன்னணி உள்ளது. அதில் அரசியல் துறைப் பொறுப்பா ளரும் கல்வி ராஜாங்க அமைச்சருமான வி. ராதாகிருஷ்ணன் உள்ளார். அத் துடன் மத்திய மாகாணத்தில் பல வருடங்கள் கல்வி அமைச்சராக இருந்தவர் என்ற வகையில் அவருக்கும் இதில் பாரியளவில் பொறுப்பு இருக் கின்றது என்றே கூறவேண்டும்.
பதுளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் வேலாயுதம் தொழிற்சங்க வரலாற்றில் பாரிய அனுபவமும் பல பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்த வருமாக காணப்படுகிறார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமாக இருப்பவராக அவர் இருக்கிறார். எனவே, தொழிலாளர்களைப் பற்றி நன்கு உணர்ந்தவர் என்ற வகையில் இந்தச் சம்பளம் மற்றும் தொழிலா ளர்களின் நலன் விடயங்களை முன் னெடுக்க வேண்டிய பாரிய சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிலே இவரும் இருக்கிறார்.
பெருந்தோட்டத்துறையினை பொறுத்த வரையில் பலர் வேலையின்றி உள்ள துடன் அடிப்படை வசதிகள் இன்றி எத்தனையோ தோட்டங்கள் உள்ளன. பல தனியார் தோட்டங்கள் படுமோச மான நிலையில் உள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைத் தேவை களை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. நலன் சார்ந்த விட யங்களிலும் சம்பள விடயத்திலும் கூடிய அளவில் அக்கறை செலுத்த வேண்டியது பாரிய சவாலாகும்.
மனோகணேசன் பிரதமருடன் நெருக்கமான உறவைப் பேணிவருபவர்.
தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் சம்பளமே அவர்களின் முக்கிய விடயம். பிரதமர் தொழிலாளர் களின் நலன் விடயத்தில் மிகவும் அக்கறையுடையவர். எனவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அவர்களின் வாழ்க்கைச் செலவுக்குப் போதுமான சம்பளத்தினைப் பெற் றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய சவால் இவர்கள் அனை வருக்குமே உள்ளது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க சிபாரிசு செய் யப்பட்டுள்ளது. ஆகவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வும் தனியார் துறையினரின் சம்பள உயர் வையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலையிலேயே அனைவரும் உள்ளனர்.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் உள்ள குறைபாடுகளை நீக்கி அதனை நிவர்த்தி செய்து நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைவரினதும் கடமையாக காணப்படுகிறது.
சுமார் 17 வருடங்களில் எட்டுத் தடவைக்கு மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் இன்னமும் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவினால் கூட உயர்த்த முடியாமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை இனிவரும் காலங்களில் வரவு செலவுத் திட்டத்திலேயே அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாளுக்கு நாள் மாறிவரும் பொருளாதார நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்குவது என்பது பொருத்தமற்றதாகவே உள்ளது. பொதுத் தேர்தலினை கருத்தில் கொண் டும் தோட்டங்களில் உள்ள அடிப்படை வசதிகளை கருத்தில் கெண்டும் தோட்ட மக்களின் பொருளாதார சுமையினை நீக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மலையக தொழிற்சங்கங் களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுக்கும் தொழிற்சங்க தலைமைகளுக்கும் உள்ளது.
மலைவேலன்
நன்றி - தினகரன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...