Headlines News :
முகப்பு » » கருத்தரங்கு: தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை பெருபித்தல்

கருத்தரங்கு: தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை பெருபித்தல்


தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை பெருபித்தல் தொடர்பான கருத்தரங்கு ஒன்று நாளை (23) வௌ்ளியன்று இடம்பெறவுள்ளது. 

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழு அறையில் நாளை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இந்த கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. 

பாத் பைண்டர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்விற்கு நிறுவனத்தின் தலைவரும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளருமாகிய பேர்நாட் குணதிலக தலைமை தாங்கவுள்ளார். 

நிகழ்வின் பிரதான உரையை தோட்ட வீடமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.வாமதேவன் ஆற்றவுள்ளார். 

´தோட்ட சமூகமும் சமத்துவமும்´ என்ற தலைப்பில் தென் மாகாண சபை உறுப்பினர் வணக்கத்திற்குரிய பத்தேகம சமித்த தேரர் உரையாற்றவுள்ளார். 

´உள்ளூராட்சி சேவைகளும் தோட்டத்துறை சமூகமும்´ என்ற தலைப்பில் புனித மார்க்ஸ் தேவாலயம் பதுளை மற்றும் கிறிஸ்ட் தேவாலயம் மொனராகலை ஆகியவற்றின் வதிவிட போதகர் பிதா அன்ட்ரூ தேவதாசன் உரை நிகழ்த்தவுள்ளார்.

´தோட்ட இளைஞரை ஏனைய துறைகளில் தொழிற்படுத்துவதினை பெருப்பித்தல்´ என்ற தலைப்பில் திறந்த பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். சந்திரபோஸ் உரையாற்றவுள்ளார். 

தமிழ் மற்றும் சிங்களத்தில் சமகால மொழி பெயர்ப்புடன் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

(அத தெரண - தமிழ்) 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates