Headlines News :
முகப்பு » » மலையக தமிழ் ஒலிபரப்பை மீண்டும் ஆரம்பிக்க பணிப்பு

மலையக தமிழ் ஒலிபரப்பை மீண்டும் ஆரம்பிக்க பணிப்பு


இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனத்தின் கீழ் இயங்கிவரும் கண்டி மலையக ஒலிபரப்பு சேவையில் இடைநிறுத்தப்பட்ட தமிழ் ஒலிபரப்பை ஒருவார காலத்தில் மீண்டும் ஆரம்பிக்குமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று புதன்கிழமை காலை ஊடகத்துறை அமைச்சின் காரியாலயத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் போது மலையக மக்கள் கடந்த 30 வருடங்களாக செவிமடுத்துவந்த கண்டி மலையக ஒலிபரப்பு தமிழ் சேவை இடைநிறுத்தப்பட்டமை மலையக மக்களின் கல்வி, கலை, கலாசார, பாரம்பரியம், ஆலய உற்சவங்கள், பண்டிகைகள், விளையாட்டு, பொழுது போக்கு அம்சங்கள் தொடர்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு இந்த சேவையை உடனடியாக தொடர்ந்து கடந்த காலங்களைப் போல ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எனவே இராதாகிருஷ்ணன் எம்.பி. அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்தே, இந்த ஒலிபரப்பு சேவையை ஒருவார காலத்திற்குள் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த ஒலிபரப்பு சேவை இடை நிறுத்தப்பட்டமை தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். ராஜாராம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (04.03.2014) மத்திய மாகாண சபை கூடியபொழுது தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிலும் இது தெடர்பான செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து தான் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப் பட்டு மீண்டும் இந்த ஒலிபரப்பு சேவையை ஆரம்பிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் மேலும் குறிப் பிட்டுள்ளார்.

நன்றி - தினகரன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates