Headlines News :
முகப்பு » , , , , , » இலங்கையில் நாடற்றவர் எதிர்காலம் ! - செ.வைத்திலிங்கம்

இலங்கையில் நாடற்றவர் எதிர்காலம் ! - செ.வைத்திலிங்கம்

 

செ.வைத்திலிங்கம் அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமன்றி ஒரு தமிழர் விடுதலைக்காக பல வழிகளிலும் தனது கருத்துக்களை உலகலாவிய ரீதியில் கொண்ட சென்ற ஒருவர். 1958 ஆம் ஆண்டு கலவரம் பற்றி அவர் எழுதிய "இலங்கையில் 16000 தமிழர் கப்பலேறிய கதை" நூல் 1966 இல் வெளியானது. அதில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் பற்றி எழுதிய பகுதி இது. பிற்காலத்தில் செ.வைத்திலிங்கம் இங்கிலாந்திலேயே குடியேறிவிட்டார். அவரைப் பற்றி தமிழ்ச் சமூகம் அவ்வளவாக பதிவு செய்தததாகத் தெரியவில்லை. ஆனால் அவரின் செயற்பாடுகளும், எழுத்துக்களும் போற்றத்தக்கவை.

இலங்கையில் நாடற்றவர்கள் எதிர்கால வாய்ப்பிலும் ஒரு துயருதவியும் இல்லை 

இந்தியாவிலிருந்து சென்று குடியேறியவர்களின் இடுக்கண் நிலை இலங்கையில் நாடற்றவர்கள் பிரச்சனையை எல்லோ ரும் தட்டிக் கழிப்பதும் தவருகக் கருதுவதும், இலங் கையில் வாழ்பவர்களில் பெரும்பாலோர் இந்தியாவின் 62 பூர்வீகக் குடிமக்கள்! என்பதால், அஃதன்றி இன்று அல்லது பண்நெடுங்காலமாக இருப்பவர்களுடைய தந்தை தாத்தா அந்த தாத்தாலின் தாத்தாக்கள் கூட இந்திய துணைக் கண்டத்திலிருந்து சென்று குடியேறியவர்கள் தாம் அவ்வாறு இலங்கையிலுள்ள பல இலட்ச மக்களாகிய இந்திய குடிமக்கள் நிரத்தரமாக வாழ்ந்து வருபவர் எல்லாம் இலங்கையிலேயே பிறந்து-தேயிலை புதரிலும் ரப்பர் மரங்க ளிடையே வளர்ந்து வந்தவர்தாம். அத்தகையவருள் பல்லாயிரக்கணக்கானவர், அவர் தம் முன்னோர்களின் தாய அத்தைச் கண்டதுமில்லை - வந்ததுமில்லை என்பதைக்காட்டிலும், அவர்கள் கொழும்புக்கு வரும்போது (அதுவும் பண மிருக்கிறவர்களாயிருப்பின்) கடலைப் பார்க்கும் போது தான் அப்பக்கத்தில் தமது தாயகம் இருப்பதாக அறிந்திருப்பரே தவிர மற்றபடி அல்ல!

ஆனால், அவர்களுள் சிலர் சுற்றுப் பயணத்திற்கென் றும், புண்ணிய பயணம் செய்வதற்கென்றும், மதவழக்குப் படி தமது நோம்புக்காக கோயில்களுக்கு வருவதற்கென்று தென்னிந்தியாவிற்கும் வந்ததும் உண்டு அஃதும், அடை யாளச் சீட்டு அல்லது செல் சீட்டு (Pass Ports) கட்டளைப் படி--சட்டப் பிரிவுப்படி தவிர, ஆதீனம் அல்லது பண்ணை அடையாளச் சீட்டுக்கொண்டு வந்து செல்வதும்கூட ஆள் அடையாளச் சீட்டுக்கொண்டு வந்து செல்வதும் கூட தடை விதிக்கப்பட்டுவிட்டது அதன் மூலம், இலங்கை வாழ் இந்தியர்தம் மூதாதையர் காலந்தொட்டு வந்த தம் உறவுமுறை அத்துணையும் இழக்க வேண்டியதாயிற்று என்பதோடல்லாது அவர்தம் உழைப்பு முழுதையும், வாழ் நாள் இறுதிவரை இலங்கை மண் செழிப்புறவே காணிக்கை யாக்கினார்கள் என்றால் மிகையல்ல!

1949 ம் ஆண்டின் இந்திய பாகிஸ்தான் குடிமை சட்டப்படியும், 1948-ம் ஆண்டின் குடிபுகல் - குடியேற்றம் சட்டப்படியும் இலங்கை வாழ் இந்தியர்கள் இந்தியா வுக்கும் இலங்கைக்கும் இடையே சென்று வருகின்றதை பெரிதும் தடுத்து விட்டன !

1952-ல் இந்திய பேரரசு ஆதின தொழிலாருக்கான சட்டத்தை கொண்டு வந்ததைக் கொன்டு ஆதின உரி மைச் சீட்டு பெற்று வந்ததுங்கூட இப்போது செல்லாததாகிவிட்டது. இந்தியாவுக்கு வரவேண்டுமாயிலும் 63 கொழும்பு நகரத்திலிருக்கும் இந்திய ஹைகமிஷனரிடமோ அல்லது இலங்கை குடிபுகல் கட்டுப்பாடு அதிகாரியிடமோ பயண அமைதி -உரிமைப் பத்திரம் பெறவேண்டியது அவசியமாகப்பட்டுவிட்டது அவ்வாறு பயண அனுமதி பத்திரம் வழங்குவதற்குக்கூட இலங்கை நிர்வாகத்துறை விரும்பவில்லை, ஒருகால அவ்வாறு வழங்கப்படுகின்ற பயண அனுமதி உரிமை பத்திரம் அவர்களை இலங்கை குடிமக்களுக்கு சமமாக கருத இடமளித்துவிடுமே என்ற உள்கருத்துடன்தான் அஃதும் வழங்கப்படாது மறுக்கப்பட்டன மற்றோர்புறம் இந்திய ஹைகமிஷன், தனது பாட்டாளி அல்லது அப்பாவி மக்கள் - அவர்களுடைய நியாயமான (பிரஜா) உரிமைகூட மறுக்கப்படுகின்ற நாட்டிற்கு அவர்கள் செலுத்துகின்ற - செலுத்தித்தீர வேண்டிய சுங்கத்தை தட்டிக்கழிக்க முடியாததைக் கண்டு பொறாதலால், போக மட்டுமே ஒரு வழி பயண அமைதி மட்டும் கொடுத்து வர முன் வந்தது இதன் பொருட்டே இலங்கை வாழ் இந்தியர் பெரும்பாலோர் இந்தியாவை கண்டறியாதவர் ஆயினர்.

1939 க்கு பிறகு இலங்கையில் புதிதாக வந்து குடியேறவில்லை.

மேலே குறிப்பிட்ட ஒரு துறை பயண அனுமதி சீட்டுகூட ஹை கமிஷன் கொடுக்க முன் வந்ததென்றால் இந்திய நாட்டுரிமையை வலுக கட்டாயமாக அல்லது தானாக முன்வந்து கோரியவர்களுக்கு, இந்திய நாட்டுரிமைமை பெற்றே தீரவேண்டும் என்ற முடிவு செய்துல் வதை மெய்ப்பிக்கும் தகுதி உடையவர்களுக்கு மட்டுமே இந்திய குடிமக்களின் கைத்திரன் பெற்றவர் மட்டும் (ஆதீனத் தொழிவாளர்) இந்திய குடியுரிமை கோரியவர்களுக்கும் இந்திய ஹைகமிஷன் ஒரு துறை பயண அனு மதிச் சீட்டு வழங்கியது. பெரும்பான்மையோர் மட்டும் உலகமெங்கிலும் [பேசப்படுகின்ற தமிழ் மக்களிடையும் தம்மிடையும் பல நூற்றண்டுகளாக வளர்ந்து உறவுகொண் டுவிட்ட பண்பாடு கலை -மதக் கோட்பாடுகள் தவிர. மற்ற தொடர்பு-உறவை துணித்துக் கொண்டு தமது வாழ்விடமாக இலங்கையை ஆக்கிக்கொண்டு நிலைத்துவிட்டனர்.

நாடற்றவர்கள் எனப்படும் இந்திய குடி மக்களுள் பெரும் பான்மையோர் குடியேற்றும் குடியுரிமை சட்டப்பிரகடனத்திற்குப் பிறகு, மேற்குறிப்பிட்ட சிறிதளவு உறவினையும் முழுக்க விடுத்தனர். மேலும், 1939-ல் திறனற்ற தொழிலாளர்களை இலங்கைக்கு அனுப்புவதை தடை விதித்த பிறகு, புதியதாக இலங்கைக்கு வந்து குடியே றியவர்கள் யாரும் இல்லை! ஆகவே, இலங்கை தேயிலை ரப்பர் தோட்டத் தொழிலாளராகயிருக்கும் இந்திய குடி மக்கள் எல்லாம், குறைந்தது 1939 லிருந்தே தமது தாயகமாக்கிக் கொண்டு அங்கேயே வாழ்ந்து வருபவர்களாவர் என்பதை நாம் ஏற்றுத் தீரவேண்டும்.

மூவகை !

இலங்கைத் தீவில் குடியேறிய இந்திய குடிமக்களை பெருவாரியாக மூவகைப்படுத்தலாம். முதல் வகை இலங்கையிலேயே பிறந்து வளர்ந்து இந்தியாவுடன் தொடர்பு கொள்ளாது அங்கேயே வாழ் நாள் கழித்து வருபவர்கள் என்பதால் குடியுரிமை பெறும் தகுதி படைத்தவர்கள். இரண்டாம் வகை, இலங்கைக்கே தம்மை காணிக்கையாக்கிவிட நினையாது இருப்பவர்கள், தமக்கு குடியுரிமை பெறாதவர்கள் ! மூன்றும் வகை: கடைசிவரை இலங்கையிலேயே இருப்பதா அல்லது இந்தியா செல்வதா என்ற முடிவுக்கு வராதவர்கள்.

முதல் வகையினருள் 1949-ம் ஆண்டின், இந்திய பாக்கிஸ்தான் (தங்குகிறவர்கள்) குடியுரிமை சட்டத்தின் படி, எட்டு லட்சம் மக்களுக்குமேல் தம்மை இலங்கை குடியுரிமை பெற்றவராக ஏற்கக் கோரி மனுச் செய்துக் கொண்டதில் இரண்டு லட்சம் மக்கள் மட்டுமே இலங்கை குடியுரிமை பெற்றவராக ஏற்கப்பட்டனர். மற்றவர் நாடற்றவராக்கப்பட்டனர். இரண்டாம் வகையினருள் இரண்டு லட்ச மக்களுக்குமேல், இலங்கையிலிருந்து முடிவாக வெளியேறிலிட்டவர்கள் குத்துமதிப்பாக பார்த்தால் 60,000 லிருந்து 70,000 இந்திய குடிமக்கள் மட்டுமே இன்னும் அங்கு இருப்பவர்கள். 1948ல் கொண்டு வந்த குடிபுகல் குடியேற்றம் திட்டத்தின் கீழ், எதிர்வரும் நாளில் - அடுத்த சில ஆண்டுகளுள்- இந்த அறுபதிலிருந்து எழுபதாயிரம் பேர் மட்டுமின்றி மொத்தத்தில் 2 00,000 பேரை வெளியேற்றப்படவிருக்கின்றார்கள் ஆனால் இதற்கு இந்தியப் பேரரசு எந்த நியாய விசாரணையையும் மேற்கொள்ள முடியாது மொத்தத்தில் ஏனெனில் இந்திய பேரரசு இலங்கை அரசு விரும்பும் வரை இந்திய குடிமக்கள் அங்கே இருந்து வரலாம் என்ற இலங்கை அரசின் கோட்பாட்டுக்கு இணங்கிவிட்டது.

மூன்றாம் வகையினருள் குறைந்த சதவிகிதத்தினர் தாம் இலங்கைத் தீவில் படும் இன்னலை தாங்கொணாதபடியால் இந்திய குடியுரிமை பெற முனைந்தும் - பெற்று இந்தியாவுக்கே திரும்பவும் முயன்று வருகின்றனர் மீதமுள்ள வர்கள், குடியுரிமை பதிவு அதிகாரியினால் தமது இலங்ககை குடியுரிமை கோரிக்கையை மறுக்கப்பட்டதால் நாடற்றவர்களாக்கப்பட்டவர்கள்.

இன்றுள்ள சிக்கலான பிரச்னை எல்லாம், இலங்கையில் உள்ள இந்திய குடிமக்களுக்கு என்ன நேருமோ என் பதைக் காட்டிலும், அங்குள்ள 8,00,000 மக்கள் தம் குடியுரிமைப் பிரச்னையே ஒரு நிலையற்றதாக உள்ளதுதான். இலங்கையைப் பொறுத்தமட்டில் அவர்கள் இயற்றிய சட்டத்தினால் அங்குள்ள இந்திய குடிமக்களை நாடற்றவர்களாக்கிவிட்டது.

இந்தியாவைப் பொறுத்த மட்டில், மேற்குறிப்பிட்டவர்கள் இலங்கை அரசினராலேயே நாடற்றவர்கள் எனக் கருதி ஏதாவது செய்ய வேண்டுமென்பதுதான் இந்த எதிர்பார்த்தல் - இலங்கையில் நாடற்றவர்களாக்கப்பட்டவர், இந்தியக் குடியுரிமையையேனும் பெற்றளர்களாக கருதப்படாதவர்களாயினர் ஆகவே மேற்குறிப்பிட்ட மூவகை இந்திய குடிமக்கள்தாம் 'நாடற்றவர்கள்' எனப்படுபவர். இந்நிலைமை உறுவாகுமென்று இந்தியா அல்லது இலங்கையிலுள்ள யாரும் எந்த தலைவருமே எதிர்பார்த்ததில்லை பார்த்திருக்கமுடியாது! 1940-ம் ஆண்டு தொடக்கத்தில், குடியேற்ற அரசின் துணைத் தலைவரும், அரசவைத் தலைவருமாகவிருந்த காலஞ் சென்ற திரு, டி.எஸ் சேனநாயகா அவர்கள் டில்லியில் கூடி சந்தித்த குழுவிற்கு 65 தமை வகித்த சர்.கிரிஜா சங்கர் பாஜ்பாய் அவர்களுடன் தொடங்கிய பேச்சு வார்த்தையில் எடுத்த முடிவானது இலங்கையில் உள்ள இந்திய குடிமக்களுள் குறிப்பிட்ட எண்ணிக்கைவரை இலங்கை குடிமக்களாக்கிக் கொண்டு மீதமுள்ளவரை அவர்கள், பணி-தொண்டு இலங்கைக்கு தேவையில்லை என்னும்போது இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவார் என்பதாகும்! ஆனால் அந்த நிலமையை இந்தியா ஒத்துக்கொள்ளவில்லை. காலஞ்சென்ற திரு சாலமன் டயஸ் பண்டாரநாயகாவின் 'புதிய சகாப்தம்' என்ற நூலில் 559.ம் பக்கத்தில் குறிப்பிடுள்ளார். அந்த, அந்த நோக்கம்தான் திரு. டி. எஸ். சேனநாயகாவால் 1953 மார்ச் திங்கள் 2-ம் தேதியன்று!

"எவ்வகையிலும் இலங்கையிலிருந்து நான்கைந்து லட்சம் மக்களை இந்தியாவுக்கு திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது என்று, இந்தியாவில் உயர் பதவிலிருந்தவர். 1940-ல் நடந்த பாஜ்பாய்-சேனநாயகா பேச்சில் கண்ட முடிவினை எடுத்துரைத்தார். காலஞ்சென்ற திரு. பண்டாரநாயகா! இந்திய துணைக் கண்டத்தில் மக்கள் தொகையுடன் இலங்கையில் நாடற்றவர்களாக கருதப்படும் மக்கள் கடலில் ஒரு துளி போன்றது எனலாம். அதே நேரத்தில் இந்தியர் திருப்பி அழைத்துக் கொள்ள மறுப்பதை மதிப்பதை போன்று இலங்கை சர்க்கார் தமிழர்களை அங்கேயே நீடிக்க வைத்திருப்பது தன் நாடு செழிப்புற! அந்த செழிப்புக்கு உழைக்க நாடற்றவர்கள் என்ற பெயரோடு மற்ற பெறவேண்டிய உரிமைகள் அனைத்தும் இழந்துவிட்டு இருக்க!

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates