Headlines News :
முகப்பு » , , » ஹிருனிகா பிரேமச்சந்திர பாராளுமன்றத்தில் ஆற்றிய முழு உரையின் தமிழ் வடிவம்

ஹிருனிகா பிரேமச்சந்திர பாராளுமன்றத்தில் ஆற்றிய முழு உரையின் தமிழ் வடிவம்

21. ஜனவரி அன்று ஹிருனிகா பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஆவேசமான உரை இது. உரையின்இறுதியில் "நான் எனது புரண்ட் சைட் - பேக் சைட் இரண்டையும் என் கணவருக்கு மட்டுமே கொடுத்துள்ளேன். ஆனால் வருத்தமான உண்மை ..... இங்குள்ள அநேகர் இவர்களது பேக் சைட்டை ரேண சில்வாவுக்கு கொடுக்கிறார்கள்."
என்று கூறியது மட்டும் ஊடங்கங்களால் முக்கியத்துவப்படுத்தி காட்டப்பட்டது. ஒரு பெண்ணாக அவர் எந்தளவு சிக்கல்களையும், அவதூறுகளையும் சுமக்க வேண்டியிருக்கிறது அதையும் மீறி போராடியபடி அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை இந்த உரையில் நாம் காணலாம்.
சமீப காலத்தில் ஆற்றப்பட்ட சிறந்த பாராளுமன்ற உரையாக இதை கருத முடியும். ஹிருணிகா என்கிற பெண் ஆளுமைக்கு சிரம் தாழ்த்தி வாழ்த்தவேண்டும். இப்பேர்பட்ட துணிச்சல் மிக்க ஒரு உரையை வரலாற்றில் வேறெவரும் ஆற்றியிருக்க முடியுமா என்று என்று தோன்றுகிறது.
இந்த உரையை தமிழுக்கு கொண்டுவந்தவர் - ஜீவன் (சுவிஸ்)

இன்றைய பாராளுமன்ற விவாதம் குறித்து நான் பேசப் போவதில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய திரை நாடகமான பிரிசின் பிரேக் 2 (சிறை உடைப்பு 2) குறித்தே பேசப் போகிறேன்.

ஒரு சகோதரன் , சிறையிலுள்ள இன்னொரு சகோதரனை சிறையிலிருந்து விடுவிப்பதற்காக சில ஒளி நாடாக்களை களத்தில் இறக்கியுள்ளார்.

எடிட் செய்யப்பட்ட ஒலி வடிவங்கள். வேறு குரல்களை திணித்த ஒலி வடிவங்கள் என பல வெளிவந்துள்ளன. இவை குறித்தே பேச உள்ளேன். இந்த தூள்காரர்கள் , தூள் ஊடகங்கள் முழு நாட்டுக்கும் ஹிருணிகா குறித்து தவறான ஒரு கருத்தை பரப்புரை செய்துள்ளது.

நான் அரசியலில் இருந்தாலும் ஒன்று - இல்லாவிட்டாலும் ஒன்று. ஒரு பெண்ணாக நடப்பவை குறித்த அனைத்து தகவல்களையும் இங்கு பகிர உள்ளேன். யாரும் எனக்காக பேச முன்வராத போது நானே எனக்காக நானே பேசி, வாதாடி உண்மைகளை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

இன்று எல்லோரும் என்னை நோக்கி கற்களை எறிகிறார்கள். இரவு குடித்து விட்டு வந்து அவர்களது மனைவிமாரைத் தாக்கும் , மனைவியரது முகத்தை சுவரில் மோத வைக்கும் சிலரும் , தங்களது கணவன்மாரின் பாலியல் இயலாமை குறித்து பேசுவோரும், நான் எனது கணவரை ஏமாற்றியதாக சொல்கிறார்கள். தவிர ஆண்களுடன் கும்மாளம் போடும் சில பெண்களும் கூட சேர்ந்து எனக்கு ரஞ்சனோடு தொடர்பு என சொல்கிறார்கள்.

நான் இங்குள்ளோரைப் பார்த்து கேட்கிறேன். இங்குள்ள அனைவரும் பரிசுத்தமானவர்களா? இந்த கறுப்பு மனிதர்கள்தான் , அடுத்தவர்களது வெண்மையை - பரிசுத்தத்தை தேடுகிறார்கள். இங்கிருக்கும் கரும் புள்ளிகள் இப்போது பரிசுத்தமானவர்களாகிவிட்டனர். இவர்கள் எல்லோரும் தனி ஒரு பெண்ணை வளைத்து நின்று கல்லெறிகிறார்கள்.இப்படி 1 - 2 அல்ல, ஒலி நாடாக்கள் 100 வந்தாலும் நான் இறந்த பின்தான் என் வாயை மூட முடியும். அதுவரை என் வாயை அடக்க முடியாது.

இந்த தூள்காரருக்கு எதிராக , இந்த அரசின் குற்றவாளிகளுக்கு எதிராக , வெளியில் விடுதலை செய்து எடுக்கப் போகும் துமிந்த சில்வாவுக்கு எதிராக , அவரின் அண்ணன் ரெனோ சில்வாவுக்கு எதிராக , அன்று பலமே இல்லாது மோதிய எனக்கு ...... மகிந்த ராஜபக்சகளோடு மோதிய எனக்கு .... அன்று பலமில்லா காலத்தில் துமிந்த சில்வாவை சிறைக்கு அனுப்ப முடிந்த அதே முதுகு பலம் இன்றும் என்னிடம் உள்ளது.

எனக்கு ஏன் சேறடிக்கிறீர்கள்? நான் திருடினேனா? நான் தூள் விற்றேனா? மணல் கடத்தினேனா? விபச்சார விடுதி நடத்தினேனா? எதுக்காக சேறடிக்கிறீர்கள்?

எனது சம வயதையுடைய ஒரு நண்பனோடு தொலைபேசியில் விவாதித்திருக்கிறேன். நாங்கள் பேசியதை எடிட் செய்து - இடை குரல் சொருகல்களைச் செய்து, அவற்றை பகிரங்கமாக வெளியிட்டு எனக்கு சேறடிக்கிறார்கள். அப்படியில்லாமல் நான் திருடியதோ , கொலை செய்ததோ , தூள் விற்றோதோ இல்லையே?

நாட்டில் உள்ள மக்கள் சாப்பாடு இல்லாமல் இருக்கும் நேரத்தில் , இந்த ஒலி நாடாக்களை ரசித்து ரசித்து கேட்கிறார்கள். அவற்றை கேட்டுதான் பசியை தணித்துக் கொள்கிறார்கள்.

நான் நேற்று சீஐடியினரிடம் புகார் அளித்தேன். 2007ல் பிறப்பிக்கப்பட்ட கணனி குற்றவியல் சட்டத்துக்கு அமைய 27/4ல் இருவரது தொலைபேசி உரையாடலை அவர்களது அனுமதியின்றி பதிவு செய்வது அல்லது வைத்திருப்பது அல்லது விற்பது அல்லது வெளியிடுவது குற்றச் செயல் என உள்ளது.

இன்று ஹிரு - தெரண - ரூபவாஹினி - ஐடிஎன் எனும் இந்த தொலைக்காட்சிகளுக்கு எதிராக நான் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளேன். இந்த ஊடகங்களிடம் 1 பிலியன் கேட்டு வழக்கு தொடுக்க உள்ளேன். முடிந்தால் மோதிப் பாருங்கள். யார் வெல்வது என பார்ப்போம். இவை அனைத்தும் எடிட் செய்யப்பட்டவை என நான் ஒப்புவிப்பேன். 1 பிலியன் நஸ்ட்ட ஈடு கேட்பேன். அவர்களிடமுள்ள பணம் தூள் விற்ற பணம். அதை வாங்கி ஏழைகளுக்கு பகிர்வேன். எனக்கு ஒரு சதமும் தேவையில்லை.

இவை எப்படி வெளிவந்தது என சொல்கிறேன். போலிசார் ரெனொவிடம் கொடுத்தார்கள். ரெனோவுக்கு போலீசார் விற்றார்கள். இராஜ் என ஒரு உதவாக்கரைக்கு உல்லாச பயணத்துறையை மேம்படுத்தும் டைரக்டர் பதவியொன்றை கொடுத்துள்ளார்கள். அவனிடம் ரெனொ அதையெல்லாம் கொடுத்தான். அவனோடு 15 பேர் வரை உள்ளார்கள். அவனது நொயிஸ் டிவீ செய்யும் அறைகளிலிருந்து கொண்டு , இப்போது கூட ....... 24 மணி நேரமும் அந்த ஒலிகளை எடிட் செய்து சமூக வலைத்தலங்களில் பரப்பி வருகிறார்கள்.

ரஞ்சன் என்னோடு மட்டுமல்ல , இங்குள்ள 225 ல் பாதிக்கு மேற்பட்டோரோடு ரஞ்சன் பேசியுள்ளார். வெளியே வருவது என்னுடையவை , வெளியே வருவது ஷானியுடையவை , பத்மினி ரணவக்கவினுடையவை. ஏன் ?

இப்போது நடக்கும் பிரிசின் பிரேக் 2 எனும் நாடகத்தின் பிரதான கதாபாத்திரங்கள் நாங்கள் ........ இவற்றை வெளியிட்டு மக்களிடம் ஒரு மன நிலை மாற்றத்தைக் கொண்டு வர முயல்கிறார்கள். துமிந்த பேபி. துமிந்த அப்பாவி. துமிந்த நடந்து போகும் போது எனது அப்பா தானே தனக்கு வெடி வைத்துக் கொண்டார். அப்படி ஒரு கதையை சோடிக்கப் பார்க்கிறார்கள். இங்கே பிரதான கதாபாத்திரங்கள் நாங்கள் ....... எனக்கு ஏதாவது வழக்கு இருக்கிறதா என பார்க்கிறார்கள். கைது செய்ய வழி தேடுகிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை.

பெண்களை அடக்குவதற்கு அந்த பெண்ணின் ஒழுக்கத்தை கீழ் தரமாக விமர்சிப்பதால் வீழ்த்த முடியும் . எனது ஒழுக்கத்தை விமர்சித்து என்னை வீழ்த்தப் பார்க்கிறார்கள் . நான் அரசியலுக்கு வந்த காலத்தில் நாமலுடன் உறவு என கதை பரப்பினார்கள். இந்த பாராளுமன்றத்தில் இருக்கும் அநேக ஆண்களோடு என்னை இணைத்து கதை பரப்பினார்கள் . நான் வீழ்ந்தேனா? நாமலிடம் கேளுங்கள் எனக்கும் அவருக்கும் உறவு இருந்ததா என்று ...... அவரது காதலிகளின் தூதாக உதவியுள்ளேன் . நாங்கள் நண்பர்கள் . ஒரு நாளாவது அவரோடு உறவு வைத்துக் கொண்டேனா என கேளுங்கள் ...... ஒரு பெண் பாராளுமன்றம் வரும் போது இப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது . இதற்கெல்லாம் நானா வீழ்வது! எனக்கு பக்க பலமாக முதுகு பலமுள்ள ஒரு ஆம்பிளை - திடமான மனிதர் உள்ளார். இந்த சேறடிப்புகளுக்கு எதிராக நிமிர்ந்து நிற்க அவர் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்.

இந்த நொய் டிவியில் நடக்கும் எடிட்டிங் வேலை எப்படி ...... ஒரு தொலைபேசி உரையாடலில் ரஞ்சன் ஹலோ என்கிறார். இந்த ஹலோவுடன் வேறெங்கோ பேசியதை கொண்டு வந்து இதோடு சொருகுகிறார்கள். இதோ ரஞ்சன் இருக்கிறார். நான் திலிப் (தெரண உரிமையாளர்) தூள் கொண்டு வருவதாக எப்போதாவது பேசியுள்ளேனா? இல்லை. இந்த நாட்டுக்குள் தூள் கொண்டு வருவது திலிப்பா என எனக்கு தெரியாது. ஆனால் இந்த நாட்டுக்கு தூள் கொண்டு வருவது துமிந்தவும் அவரது அண்ணனும் என முழு நாட்டுக்கும் தெரியும். திலிப் குறித்து ரஞ்சன் ஒரு போதும் என்னோடு பேசியதேயில்லை. நாங்கள் தூள் குறித்து - ரேன குறித்து - துமிந்த குறித்து பேசியுள்ளோம். ஏன் அதெல்லாம் வெளிவரவில்லை?

நாங்கள் பேசியதிலிருந்து அவர்களுக்கு சார்பானதை மட்டும் போட்டு சார்பு இல்லாதவற்றை வெட்டியுள்ளார்கள். இவை தொடர்ந்தும் வரும்.

இதன் பாரதூர விளைவுகளை உணர வேண்டும். அக் காலத்தில் தயாசிரி ஜெசேகர போன்றோர் ..... திலங்க சுமத்திபால போன்றோர் ...... எனது அப்பா கொலையான போது தூள்காரனென துமிந்துவை வசை பாடினார்கள். இப்போது திலங்க , துமிந்த தூள் விற்கவில்லை என்கிறார். தயாசிரி , துமிந்த அப்பாவி. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார். ஏன் இப்படி?
இன்று நாட்டின் பிரதானி - நாட்டை நடத்திச் செல்வது கோட்டாபய ராஜபக்ச அல்ல. இன்று அரசியல் பலம் மகிந்த ராஜபக்சவிடம் இல்லை. முழு நாட்டையும் ரேண ஆட்டிப்படைக்கிறார். ரேணவிடம் இவர்களது கடிவாளமான தகவல்கள் உள்ளன. நாளைக்கோ அல்லது மறுநாளோ ரேணவுக்கு ஒரு சிறு வேலை மட்டும்தான் செய்ய உள்ளது. ரேணவின் தம்பி சார்பாக நீங்கள் பேசாது போனால் இங்கிருக்கும் யாருடையதாவது ஒரு கிளிப்பை ( ஒலி - ஒளி) வெளியிட்டால் இவர்கள் நாய்க் குட்டி போல வாலை ஆட்டிக் கொண்டு ரேணவிடம் சரணடைவார்கள்.
நாளை ரேண பாராளுமன்றம் போக வேண்டும் என நினைத்தால் மகிந்தவிடம் போய் சொல்வார் தெரியும்தானே என்னிடம் உள்ள தகவல்கள். எனக்கு தேர்தலில் நிற்க டிக்கட் தாருங்க என்றால் மகிந்த தேர்தலில் நிற்க அனுமதிப்பார். விமல் - கம்மன்பிலவுக்கு சொல்வார் நீங்க ரெண்டு பேரும் ஒதுங்கியிருங்க . நான் கொழும்பில் முதலாவது தேர்வாக வர வேண்டும். நாய் மாதிரி இருங்கடா என்பார். ரேணவுக்கு பாராளுமன்ற பெரும்பான்யை பெற்று பிரதமராகவும் முடியும்.
ரேணவிடம் சாமான்கள் ( தகவல்கள் ) உள்ளன. ரேண பிரதமராகலாம். ஒரு தூள்காரன் பிரதமராவான். அது எப்படி ? இப்போது ரேணவிடம் பலம் உள்ளது. அதனால் இங்கிருக்கும் எல்லோரும் வெட்கப்பட வேண்டும். இங்கிருக்கும் அநேகர் என் அப்பா இறந்த போது வருந்தினார்கள். துமிந்தவை திட்டித் தீர்த்தார்கள். இவனை சிறைக்கு அனுப்ப வேண்டும் எனச் சொன்னவர்கள். இன்று துமிந்த அப்பாவி என்கிறார்கள்.

துமிந்த அப்பாவி இல்லை. நான் எங்குமே துமிந்த எனது அப்பாவை சுட்டதாக சொன்னதில்லை. ஷானியும் சொல்லவில்லை. ஷானி பெற்ற சாட்சிகளில் துமிந்த என் அப்பாவுக்கு வெடி வைத்ததாக இல்லை. துமிந்தவுக்கு முதல் சூடு விழுந்தது என உள்ளது. அதுவும் உண்மை. ஆனால் இப்படியான ஒரு சம்பவத்தை உருவாக்க துமிந்த காலை முதல் கொலை நடக்கும் வரை அங்கிருந்தவர்களை கிளர்ந்தெழ வைத்தார். அதற்கான வியூகத்தை வகுத்தார். இது பிளான் செய்த திட்டுமிட்ட கொலை. சாவு!

இந்த கொலைக்காக ஒரு வாகனத்தில் இருந்த ஆயுதங்களை இன்னோர் வாகனத்துக்கு மாற்றினர்கள். அதற்கான உத்தரவை துமிந்த பிறப்பித்தார். இவை அத்தனையையும் துமிந்த செய்தார். அந்த கொலையை செய்ய , ஆரம்பம் முதல் திட்டமிட்டு செயல்படுத்தியதற்காகத்தான் துமிந்தவுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. காரணம் அந்த திட்டம் , ஒரு படு கொலையில் முடிவுறுவுதால்தான் ...... இதுவே உண்மை.

இங்கே மறைப்பதற்கு ஒன்றுமில்லை. அப்படியில்லாமல் துமிந்த ஒன்றுமறியா பாலகனா? என் அப்பாவும் 3 பேரும் தங்களுக்கு தாங்களே தலையில் சுட்டுக் கொண்டார்களா? இங்கிருக்கும் அனைவருக்கும் அத்தனை உண்மையும் தெரியும். சொல்லவே வெட்கமாக உள்ளது . எல்லோரும் இப்போது வாலை சுருட்டி உள்ளே ஓட்டிக் கொண்டு ஒதுங்கியிருக்கிறார்கள்.

ஏன்? இவர்களது கள்ள பொண்டாட்டிமார் பற்றி ...... வெளிநாடுகளுக்கு போய் யார் யாரோடு இருந்தார்கள்? எப்படி பணம் சுரண்டி உழைத்தார்கள் எனும் அனைத்து விபரங்களும் ரெணோவுக்கு தெரியும். யாரை கொலை செய்தார்கள் - யார் உத்தரவிட்டது .....என அனைத்து விபரங்களும் ரெணோவுக்கு தெரியும்.

உண்மையாகவே வருத்தமாக உள்ளது. அச்சப்பட வேண்டியது எதிர்க் கட்சியில் இருக்கும் நாங்கள் அல்ல .... எமது நற்பெயருக்கு சேறடிப்பதை விட வேறெதுவும் இவர்களால் செய்ய முடியாது. ரேண , எங்களுக்கு சேறடிக்கும் அதே நேரம் உங்களுக்கு இன்னோர் உண்மை முகத்தை ரேண காட்டுகிறார். இனி ரேண தட்டும் தாளத்துக்கு நீங்கள் எல்லோரும் ஆட வேண்டி வரும். போய் மகிந்த ஐயாவிடம் சொல்லுங்க . அவரையும் ரேண கையில் வைத்து ஆட்டுவார் என ..... அது இப்போதே நடக்கிறது. இல்லாவிட்டால் துமிந்தவுக்கு தூக்கு தண்டனை கொடுத்தவர்களை தூக்கிலிட வேண்டும் என நேற்று மகிந்த சொல்வாரா? கொலையாளி பத்மினி ரணவக்கவை தூக்கிலிட வேண்டும் என கொழும்பு முழுவதும் போஸ்ட்டர் ஒட்டியுள்ளார்கள். அவர் செய்த குற்றம் அவர் நீதிபதியாக நீதி வழங்கியதற்காகவா?

ரஞ்சன் ராமநாயக்க எங்காவது அந்த வேலையை இப்படி செய்யுங்கள் என நீதிபதி பத்மினி ரணவக்க அவர்களுக்கு எங்கே அழுத்தம் கொடுத்துள்ளார்? சொல்லுங்க பார்ப்போம். என்ன நடக்கிறது என மட்டுமே கேட்கிறார். அதனால் இந்த பிரசின் பிரேக் 2க்காக மக்களை முட்டாள்கள் ஆக்க முடியாது. இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு தெரியும். துமிந்த சில்வாவை சில நாட்களுக்குள் விடுவிக்க உள்ளார்கள் என்பது......

இல்லாமல் போனது என்னுடைய அப்பாதான்...... இங்குள்ள எவனுடைய அப்பாவும் இல்லாமல் போகவில்லை. அந்த வேதனை எனக்கு மட்டும்தான் இருக்கிறது. அந்த வேதனை இங்குள்ள எவனுக்குமே இல்லை. துமிந்த சில்வாவை வெளியில் விடப் போவதாக சொல்லும் போது அதற்கு எதிராக குரல் கொடுக்க இருப்பது நான் மட்டும்தான். எனது வாயை அடக்கி, இந்த பெண் ஒரு மோசமான கேடு கெட்ட பெண் என என்னை வெளியில் தூக்கி எறிந்த பின்னர் இவங்களுக்கு இவங்களுடைய வேலையை செய்து கொள்வது மிக சுலபம்.

ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஒன்றாலும் என்னை வீழ்த்த முடியாது. யாராவது இவளை வீழ்த்தலாம் என நினைத்துக் கொண்டிருந்தால் , இந்த மனுசி இப்படி , இவளுடைய நடத்தை இப்படி , இவளுக்கு இவரோடு உறவு ,இப்படி - அப்படி என கதை கட்ட நினைத்தால் , இதைவிட பெரிய பிரச்சனைகளுக்கு நான் முகம் கொடுத்துள்ளேன். இந்த தொலைபேசி உரையாடல் வழி நான் மோதுவது தூள்காரர்களோடு ...... கொலையாளிகளோடு ... நாட்டின் ஜனாதிபதிமாரோடு ...... இவர்களை போன்றவர்களோடு முட்டி மோதிய எனக்கு , இந்த தொலைபேசி உரையாடல்கள் எந்த மூலைக்கு ... ரேணோ என்றால் , எவன்டா அவன்? இராஜ் என்பவன் யார்? அவன் மதம் - கலாச்சாரம் குறித்து பேசுகிறான். மதம் - கலாச்சாரம் பேசுறவன் படையினர் குறித்தும் பேசினான். பாதிக்கப்பட்ட படையினரோடு போய் உட்கார்ந்து கொண்டு இராஜ் எங்கள் அரசு, படையினர் சார்பாக பேசவே இல்லை எனச் சொன்னார். ஒரு கதை சொல்லட்டுமா .....இராஜ் படையினர் குறித்து அன்று எப்படி பேசினார் என்று ..... பிரிகேடியர் ஒருவர் இருக்கிறார்.......

சனத் : (குறுக்கிட்டு) இது மீனவ பிரச்சனை குறித்து பேசும் நேரம். இது அவரது தனிப்பட்ட கதை பேசும் நேரமல்ல. இங்கில்லாதோர் பெயர்களை குறிப்பிட்டு இவர் பேசுகிறார். இது முடியாது. பாராளுமன்ற வரப்பிரசாதத்தின்படி இவரை பேச விட முடியாது..

தலைமை தாங்கும் சபாநாயகருக்கு பதிலாக அமர்ந்திருப்பவர் : அவரது பெயர் இங்கே குறிப்பிடப்பட்டதால் அவருக்கு பேச வாய்பளிக்கப்படுகிறது.

ஹிருணிகா: எனக்கு முடியும். எனக்கு அந்த உரிமை உள்ளது. நீங்கள் துப்பாக்கியை காட்டியதெல்லாம் அங்கே இருக்கிறது. ரொம்ப அன்பிலதான் இருக்கறீங்க. அப்படி சும்மா இருங்க. இப்ப நான் சொல்ல வருவது ... ரவீந்ர மீகம ஆரச்சி பற்றி...... அவர் ஒரு பிரிகேடியர். கோட்டாபய ராஜபக்ச அவர்கள் சார்பாக தொடர்ந்து பேசி , அவருக்கு ஆதரவளித்து வந்த ஒருவர்..... இராஜ் என்பவர் கட்சி ஒன்றில் இருப்பவர் கூட இல்லை. நல்லாட்சி வந்ததும் இராஜ் , அவரது லெப்டொப்பை எடுத்துக் கொண்டு வேலை ஒன்று தேடி மைத்ரிபால சிரிசேன ஜனாதிபதியை சந்திக்க போனார். அங்கிருக்கும் வேலைகளை செய்து தர என சொல்லிக் கொண்டு நுழைந்தார். அங்கு போனதும் இராஜ் செய்தது என்ன .... கோட்டாபய அவர்களோடு இருந்த இராணுவ வீரர் ரவீந்திரவை பாதுகாப்பு அமைச்சிலிருந்து கிளிநொச்சிக்கு மாற்றினார். இதுதான் இராஜின் வேலை. அப்படி மாற்றிய போது மைத்ரிபால ஜனாதிபதி அவர்கள் நல்லதொரு வேலை செய்தார். அப்படி செய்த மாற்றத்தை மைத்ரி அவர்கள் தடுத்து இவரை துரத்திவிட்டார். அதனால்தான் இராஜூக்கு நல்லாட்சி வேண்டாதாகிறது. அதனால் அவருக்கு தேவையான வியாபாரங்களை, அன்றைய அந்த அரசுக்குள் செய்ய முடியாமல் போகிறது. அதனால்தான் அவர் திரும்பி கோட்டாவிடம் போனார். அப்படியில்லாமல் இராஜ் நாட்டுக்கு இருந்த நேசத்தினால் கோட்டாவிடம் போகவில்லை.

இராஜ் , அவர் வாயால் இப்படிச் சொல்லியுள்ளார் " நான் கலாச்சாரத்தை அழிக்கிறேன். எனக்கு இந்த கலாச்சாரத்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை. எமது நாட்டிலுள்ள மக்கள் மோட்டு தனமான மக்கள் " என இராஜ் சொல்லியுள்ளார். இப்படிச் சொன்ன இவரைத்தான் நீங்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள். இவர்தான் கலாச்சார - உல்லாச பயணத்துறையை மேம்படுத்தும் இயக்குனர்...... இராஜ் பெண்களை நிர்வாணப்படுத்தி , எந்த அளவு யூடியுப்பில் காட்டியுள்ளார். ஓரினச் சேர்க்கை குறித்து யூடிப்பில் காட்டியுள்ளார். நாங்கள் விக்டர் ரத்னாக்க அவர்களுடைய பாடல்களை எப்படியெல்லாம் ரசித்து கேட்கிறோம். அவருடைய தனிப்பட்ட வாழ்கையை எடுத்து யூடிப்பில் வீடியோ ஒன்று போட்டார். இவரா நாட்டையும் - கலாச்சாரத்தையும் நேசிப்பவர்? தனது தேவைக்கும் - தான் பணம் சம்பாதிக்கவும் வீடியோ செய்த ஒரு ஊதாரி. இவனுகளை வைத்தா இலங்கையின் உல்லாசத் துறையை மேம்படுத்தப் போகிறீர்கள்? இன்னும் அதிகம் உள்ளது.

எங்களுக்கு எடிட் செய்து சேறடிக்கிறார். இராஜ் பொடியனுக்கு சொல்றேன் .... உன் அம்மாவும் - தங்கையும் கிளப்களுக்கு போய் விடிய 1 -2 மணிக்குதான் வீட்டுக்கே வருகிறார்கள். ஆகக் குறைந்தது இரவு 10 மணிக்காவது அவர்களுக்கு வீட்டுக்கு வரச் சொல்லவும் ..... எப்படியும் அவர்களும் பெண்கள்தானே? இராஜூக்கு சொல்ல சொல்லுங்க. அதுபோல இராஜின் அப்பா பிரீத்திராஜ் வீரரத்னவும் - மல்ராஜ் வீரரத்னவும் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார்கள்? ஏன்? அந்த கதையெல்லாம் எனக்கு தெரியும்!

கடைசியா சொல்றன். தூள்காரனை வெளியே விட்டாலும் சரி. உள்ளே வைத்தாலும் சரி. இங்கு இருக்கிற நீங்களெல்லொம் ரேணவின் கை அசைவுக்கு ஒருநாள் ஆடப் போறீர்கள் என வெட்கப்படுங்கள். நான் ஒரு மகளாக எனது கடமையை செய்து முடித்து விட்டேன். அதனால் இந்த நாட்டு மக்களுக்கு சொல்கிறேன். இரண்டு நண்பர்கள் பேசிய ஒரு விடயத்தை எடுத்து வைத்துக் கொண்டு, என் நடத்தை சரியில்லை என தோலுரிக்க நினைத்தால், இங்கிருக்கிற எல்லோரும் போய் கண்ணடியில் உங்கள் முகங்களை பாருங்கள் எனச் சொல்கிறேன். பணத்துக்கும் - தொலைக்காட்சியில் வந்து போகவும் கொலையாளிகள் முன் உங்களது மரியாதையை இழக்காதீர்கள். உங்கள் நிர்வாணம் உங்களுக்கே கண்ணாடியில் தெரியும் எனச் சொல்வதோடு , கடைசியா ஒன்றை சொல்ல வேண்டும்.

ரஞ்சன் ராமநாயக்க அவர்களே! நீங்கள் செய்த வேலையால் .... நீங்கள் தவறான ஒரு வேலையை செய்தீர்கள். என்னோடு பேசிய தொலைபேசி உரையாடல்களை , எனக்கு சொல்லாமல் ரெக்கோட் பண்ணியுள்ளீர்கள். ஆனால் ரஞ்சன் எனக்கு ஒரு சகோதரன். ஒரு நண்பன். இங்கு உள்ள அனைவரும் என் சகோதரர்கள். நண்பர்கள். நாங்கள் பெண்களாக அரசியலில் ஈடுபடும் போது அதிகமாக ஆண்களோடுதான் பழகுகிறோம். இல்லாமல் ...... இங்கு பெண்கள் அதிகமாக இருக்கிறார்களா? இல்லை! ஆண்களோடுதான் பழக வேண்டியுள்ளது. ஆண்களோடுதான் பேச வேண்டியுள்ளது. அவர்களோடு இணைந்து மகிழ்கிறோம். பேசுகிறோம். நாங்கள் வேறெதுவும் செய்யப் போகவில்லை. எங்கள் குடும்ப வாழ்கையையும் நன்றாக கவனித்துக் கொள்கிறோம். அதனால் ரஞ்சன் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இங்கு வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்களுக்கு எங்கள் நட்பு என்ன? நாங்கள் பேசியவை என்ன ..... என உங்கள் வாயை திறந்தே சொல்லுங்கள். இப்படி எடிட் செய்த ஒலிகளை வெளியிட நினைத்துக் கொண்டிருப்போருக்கு நான் இறுதியாக ஒன்றை சொல்கிறேன்.

நான் எனது புரண்ட் சைட் - பெக் சைட் இரண்டையும் என் கணவருக்கு மட்டுமே கொடுத்துள்ளேன். ஆனால் வருத்தமான உண்மை ..... இங்குள்ள அநேகர் இவர்களது பேக் சைட்டை ரேண சில்வாவுக்கு கொடுக்கிறார்கள். அது குறித்து எனக்கு மிக வருத்தமாக உள்ளது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates