Headlines News :
முகப்பு » , » மலையகத்தின் உயர்கல்வியில் அரசியல் (அழகப்பா முதல் அல்முஸ்தப்பா வரை) - அருள்கார்க்கி

மலையகத்தின் உயர்கல்வியில் அரசியல் (அழகப்பா முதல் அல்முஸ்தப்பா வரை) - அருள்கார்க்கி

பாடசாலைக் கல்வியை தொடர்ந்து மாணவர்கள் நிறுவனமயப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் தமது கல்வியை தொடர்வது வழமை. மலையகத்தைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகங்களுக்கும்இ கல்வியல் கல்லூரிகளுக்கும் உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு புறம்பாக பெருந்தொகையானவர்கள் தனியார் உயர்கல்வி நிறுவனங்களையும்இ தொழிற்கல்வியையும் தெரிவு செய்கின்றனர். குறிப்பாக பொருளாதார காரணங்களை மையமாக கொண்டு இன்று பெரும்பாலான  மாணவர்கள் தொலைக்கல்வி மற்றும் பகுதி நேர பாடநெறிகளை பின்பற்றுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதனை ஒரு வரையறைக்குள் கொண்டுவருவதும் புள்ளிவிபரமிடுவதும் சற்று நடைமுறை சார்ந்து சவாலான விடயமாகும். காரணம் எவ்வித நிறுவன கட்டமைப்பிற்குள்ளும் அடங்காத உயர்கல்வியை வழங்கும் கடைகள் இன்று மலிந்து காணப்படுகின்றது.  

முன்னர் தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படும் மாணவர்கள் தவிர்ந்த ஏனைய உயர்தரம் சித்திபெற்றோரின் நிலை கேள்விக்குறியாக இருந்தமையும் உண்டு. ஆனால் சமகாலத்தில் போட்டித்தன்மையும் மாணவர்களின் கற்றல் ஆர்வமும் அதிகரித்ததன் காரணமாக அவ்வார்வத்தைக் காசாக்குவதற்கு தனியார் பல்கலைக்கழகங்கள் வாய்ப்புகளை வழங்கின. 

அரச பல்கலைக்கழகங்களின் வரையறைஇ பௌதீக வளங்கள்இ ஆளணி மற்றும் கற்கை நெறிகளை அடிப்படையாக வைத்து நோக்கும் போது நாட்டின் பட்டதாரிகளின் தேவையை ஈடு வெய்வாற்கு அரச பல்கலைக்கழகங்களுக்கு புறம்பாக தனியார் பல்கலைக்கழகங்களின் அவசியம் ஏற்பட்டது. இந்நோக்கத்திற்காக நாட்டினுள் நுழைந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகம் பேசப்படுகின்றது. கடந்த காலங்களில் மலையகத்திலும் இந்திய பல்கலைக்கழகங்கள் பட்டப்படிப்புகளை வழங்கின. குறிப்பாக அழகப்பா பல்கலைக்கழகம்இ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்இ இந்திரா காந்தி பல்கலைக்கழகம்  என்பன முக்கியமானவைகளாகும். இப்பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை தொடர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் இன்று ஆசிரியர் நியமனங்கள் பெற்றுள்ளனர். 

தேசிய பல்கலைக்கழகங்களுடன் தொடர்பான புள்ளிவிபரங்களை ஆய்வு செய்யும் போது சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். அதில் மலையக மாணவர்களின் பங்களிப்பு 1.5மூ சதவீதமாக உள்ளது. இவ்வாறான நிலையில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்பட்டன. குறிப்பாக ரூ.60000.00 கட்டணத்துடன் ஒரு பட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் பெரும்பாலான மலையக மாணவர்கள் இந்தியப் பல்கலைகழகங்களை நாடினர். 

ஆரம்பத்தில் இப்பல்கலைக்கழகங்களின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டாலும்இ பின்னர் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெற்றவை என அறிவிக்கப்பட்டது. மலையக அரசியல்வாதிகளும் இது தொடர்பாக ஊடக அறிக்கைகளை வெளியிட்டு தமது பங்களிப்பை சமூகத்துக்கு வழங்கினர். எனினும் நடைமுறையில் அவற்றின் கற்கைநெறிகள்இ கற்பித்தல் முறைகள்இ பரீட்சை நடைமுறைகள் தொடர்பாக விமர்சனங்கள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டன. 

அரச பாடசாலை ஆசிரியர்கள் விரிவுரைகளை நகரங்களில் தனியார் வகுப்புகளில் நடத்தினர். பரீட்சைகளும் அவ்வாறே நடத்தப்பட்டன. எவ்வாறாயினும் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொண்டனர். இவ்விடத்தில் அரசியல்வாதிகள் முக்கியப்பங்கினை நியமனங்களின் போது வழங்கினர். அரசியல் தலையீடுகள் மூலம் நியமனம் பெறும் பாடசாலைகள் தீர்மானிக்கப்பட்டன. 

தேசிய பல்கலைக்கழகங்களில் சுமார் 03 வருடங்கள் என்ற காலப்பகுதியில் 06 செமஸ்டர்கள் என்று சொல்லப்படும் கற்கை உபபிரிவுகள் இந்திய பல்கலைகழகங்களில் பெறும் 02 இரண்டே வருடங்களில் முடிக்கப்பட்டன். எது எவ்வாறோ எமது சமூகத்துக்கு ஒரு நன்மை கிடைக்கிறது என்று அனேகர் இது தொடர்பாக மறை விமர்சனங்களை முன்வைக்கவில்லை. எனினும் ஆசிரியர் நியமனங்களைத் தவிர்ந்துஇ அபிவிருத்திஇ பொது நிர்வாகம் போன்ற எவ்வித ஏனைய துறைகளுக்கும் அழகப்பா பட்டதாரிகள் உள்வாங்கப்படவில்லை. இது பெரும்பான்மை இனத்தின் குறுகிய சிந்தனையையும் சிறுபான்மையினர் மீதான ஏற்றத்தாழ்வையும் காட்டுகின்றது. 

அரச பல்கலைக்கழகங்களுக்கு இணையான பட்டப்படிப்பு எனின் அனைத்து துறைகளுக்கும் செல்வதற்கும் தகுதி இருக்க வேண்டும் அல்லவா. எனினும் இவ்வாறு நியமனம் பெற்றுக் கொண்டவர்கள் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களாகவே உள்ளமை சற்று வருத்தமானது. எனினும் அவர்கள் இளங்கலைமானி (டீ.யு) விஞ்ஞானமானி (டீ.ளஉ)இ வர்த்தக முகாமைத்துவமானி (டீ.உழஅ) கல்விமானி (டீ.நுன) போன்ற உயரிய அடைவுகளை கொண்டவர்கள் என்பது அபத்தமானது. 

மலையகத்துக்கு மட்டுமே இவ்வாறான கேலிக்கூத்துகள் அரசியல்வாதிகளால் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. தேசிய கல்வித்திட்டத்தின் தராதரத்துக்கு ஈடுகொடுக்க கூடிய பாடசாலை கல்வியை தரமுயர்த்துவதை விட்டுவிட்டு தரம் குறைந்த சலுகை அடிப்படையிலான உயர்கல்வி வாய்ப்புகளை கேட்டு பெறுகின்றனர். இதன் மூலம் சில வரையரைகளை எம்மவர்களுக்கு கடக்கமுடிவதில்லை. தமிழர்களின் கல்வியை திட்டமிட்டே தரம் குன்றியதாக வைத்திருப்பதன் மூலம் ஏனைய இனங்களுக்கு கீழேயே மலையக சமூகத்தை வைத்து அடக்கியாளும் நுண்ணரசியல் இது என்பது மலையக தலைமைகளுக்கு நன்கு தெரியும். அவர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். 

அண்மையில் ஊவாமாகாணத்தில் அரசியல்வாதி ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட ஈரானிய சர்வதேசப் பல்கலைகழகமான அல் - முஸ்தபா பல்கலைகழகம் தொடர்பான சலசலப்பு சூடுபிடித்திருந்தது. சுமார் 500 மாணவர்களின் பட்டப்படிப்பு நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபடுத்தப்பட்டு பிரிதொரு அரசியல்வாதியால் தேசத்துரோகத்துக்கு எதிராக முன்னெடுப்புகள் இடம்பெற்றது. இங்கு அரசியல்வாதிகளின் வாக்குச்சேகரிப்பில் 500 மாணவர்கள் பலிகடாவாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதே நிதர்சனம். 

அல்-முஸ்தபா பல்கலைக்கழகமானது ஒரு சர்வதேச பல்கலைக்கழகமாகும். ஈரான் நாட்டை தலைமையகமாகக் கொண்டு பல்வேறு நாடுகளின் பட்டப்படிப்புகளை வழங்கிவருகின்றது. இலங்கையில் இலவசமாக 500 மாணவர்களுக்கு பட்டப்படிப்பை வழங்க முன்வந்ததையும் அவ்வாறான ஒரு நடைமுறையே. எனினும் எந்த ஒரு பல்கலைகழகமும் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு (ளழஎநசநபைn) உட்பட்டே இயங்க வேண்டும். அடிப்படைவாதத்தையோ அல்லது பிரிவினைவாதத்தையோ வளர்க்கும் வகையிலும் அல்லது குறிப்பிட்ட மதசார்பான கருத்துக்களை திணிப்பதையோ செய்யமுடியாது. 

சாதாரணமாக ஒரு உணவுப்பண்டம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலே அதன் தரம்இ விலைஇ பெறுமானங்கள் என்பன பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் நிர்ணயம் செய்யப்படுகின்றன. எனவே ஒரு பல்கலைக்கழகம் தன்னிச்சையாக நாட்டினுள் வரமுடியுமா? பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனைத்து பொறுப்புகளையும் ஏற்க வேண்டும். 

ஒரு அரசியல்வாதி முன்மொழிகின்ற காரணத்தினால் மாணவர்கள் குழு நம்பிக்கையுடன் இப்பல்கலைக்கழகத்தில் இணைந்தனர். அரச பாடசாலை அதிபர்இ ஆசிரியர்கள்இ விரிவுரைகளை நடத்தினர். எனவே இது நிச்சயம் அரச அங்கீகாரம் பெற்றது என அனைவரும் நம்புவது சரளமானதே. எனினும் இதனை பிரிதொருவர் கேள்விக்கு உட்படுத்தி அங்கீகாரம் இல்லை என நிராகரிக்கும்போது சமூகம் முட்டாளாக்கப்படுகின்றது. தம்மை புத்திசாலிகளாக காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தமக்கு இடையிலான போட்டிகளை முன்வைப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். அதற்கு அவர்கள் தமக்குச் சார்பாக ஆதாரங்கள் என சில தரவுகளையும் முன்வைக்கின்றனர். 

அல்-முஸ்தபா பல்கலைக்கழகம் எவ்வாறான நடைமுறைகளுக்கு உட்பட்டு வந்தது அல்லது எவ்வாறு சட்டவிரோதமானது என்றோ அரசியல்வாதிகள் விளக்கம் கொடுக்க தேவையில்லை. அது அரச நிர்வாக கட்டமைப்பின் அடிப்படையில் மானிய ஆணைக்குழு தான் விளக்கமளிக்க வேண்டும். அது நியதிகளின் படி கொண்டுவரப்பட்டது எனின் கொண்டு வந்த அரசியல்வாதி வீதி வீதியாக விளக்கமளிக்க தேவையில்லை. அது சட்டவிரோதமானது எனின் அதனை குறிப்பிடும் அரசியல்வாதி மானிய ஆணைக்குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாகாண சபையிலும் பிரேரணை கொண்டு வருவதும்இ மாணவர்கள் சூழ செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவதும் மக்களை ஏமாற்றுவதற்கு என்று தெளிவாக புலப்படுகிறது. மலையகத்துக்கு மட்டுமே இவ்வாறான சாபக்கேடுகள் இடம்பெறுகின்றன. தேயிலை தொழில்துறை தொழிலாளர்கள் குறைவடைவதால் இப்போது மாணவர்களின் மீது கைவைத்துள்ளனர் அரசியல்வாதிகள். இவை எதிர்கால அரசியல் இருப்புக்களின் அத்திவாரங்கள். 
மானிய ஆணைக்குழு கட்டுப்பாடுகளையும் ஒழுக்கக்கோவைகளையும்இ தொடர் கண்காணிப்புகளையும் வெளிநாட்டு பல்கலைகழகங்கள் மீது செலுத்தியிருக்க வேண்டும். அது அவ்வாறு இடம்பெற்றிருந்தால் இம்மாணவர்கள் நடுவீதியல் நிற்கவோஇ அரசியல்வாதிகளை நம்பியிருக்கவோ தேவையில்லை. ஆனால் இது மலையகத்துக்கான விடயமாகையால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளமை புலனாகின்றது.

உண்மையில் அரசியல் நோக்கங்களுக்காக சமூகத்தை கூறுபோடுவதை எவ்வாறும் ஏற்க முடியாது. மாணவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். சிவில் அமைப்புகளும் கல்விச்சமூகமும் இவ்வாறான விடயங்களை அவதானிப்பு செய்ய வேண்டும். மலையகத்தைப் பொருத்தவரை இலவசமாக தகரம் கொடுக்கப்படுவதையும் பட்டம் கொடுக்கப்படுவதையும் சமாந்தரமாகவே நோக்கவேண்டியுள்ளது. 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates