Headlines News :
முகப்பு » , , , » இந்திய, இலங்கைப் பிரச்சினைகள் (சச்சிதானந்தம் பழனிச்சாமியின் பதிவுகள்)

இந்திய, இலங்கைப் பிரச்சினைகள் (சச்சிதானந்தம் பழனிச்சாமியின் பதிவுகள்)


திரு சச்சிதானந்தம் பழனிச்சாமி அவர்கள் தன்னிடம் இருக்கும் முக்கிய பல தகவல்களையும், ஆவணங்களையும் பதிவு செய்துவருகிறார். அவரது மூத்த சகோதரி சிவபாக்கியம் அண்மையில் தான் மறைந்தார். சிவபாக்கியம் அவர்கள் மீனாட்சியம்மைக்குப் பின் அன்றே முக்கிய மலையக ஆளுமையாக அறியப்பட்டவர். இலங்கை இந்திய மாதர் ஐக்கிய சங்கத்தின் தலைவியாக செயற்பட்டவர். அவர் விட்டுச் சென்ற ஆவணங்கள் பலவற்ரில் உள்ள தகவல்கள் பலவற்றை சச்சிதானந்தம் அவர்கள் வெளிக்கொணர்ந்துகொண்டிருக்கிறார். இங்கு தொடராக அவரது பதிவுகளைப் பகிர்கிறோம்.
07--12--1941ல் திரு பழனிசாமியின் ஆலோசனையோடு சிவபாக்கியம் மாதர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்தபோது அவரைத் தலைவியாக பிரேரிக்கபட்டபோதும் அவர் தனக்கு மூத்த சட்ட ஆலோசகராக உதவிய அட்வகேட் திருமதி லட்சுமி ராஜரட்ணத்தை தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக்கொண்டார்.

வலதுபுறம் அட்வகேட் ராஜலட்சுமி,சிவபாக்கியத்துக்குப் பின்னால் சி வி வேலுப்பிள்ளை, அதற்கடுத்து ராஜலட்சுமியின் பின்னே பெரி சுந்தரம் என்ற பெரியண்ணன் சுந்தரம்! மற்றும் ஏனைய தலைவர்கள்.
குறிப்பு:
பின்னர் சிவபாக்கியம் தலைமை பொறுப்பை ஏற்றார்.
**அடுத்து.... மாதர் காங்கிரஸ் தனது இரண்டாவது மாநாட்டைக் கண்டியில் நடத்தியபோது...
**தோட்டத் தொழிலாள மகளிரிடையே முதன்முதலாக...
பெண் தொண்டர் அணியொன்றைத் திரட்டி, கண்டி அசோகா ஹாஸ்டலில் (பி டி ராஜனின் அசோகா வித்தியாலயம்) இரண்டு வாரங்கள் அவர்களுக்கு தீவிர பயிற்சியளித்தனர்.
**இதில் திருமதி ஜெயமேரிதாசன் இவர்களுக்குப் பெரும் ஒத்தாசையாக இருந்தார்.
**பெண்கள் அனைவரும் தூய வெள்ளை கதராடை அணிந்துதனிப் பெண்கள் படையணியாய் ஊர்வலத்திலும் மாநாட்டிலும் பங்குபற்றியது....
வெள்ளையருக்கு மட்டுமல்லாது 
**தீவிர சிங்கள சுதேசிகள் மத்தியிலும் கடுப்பைஏற்படுத்தியது.
1943 ல் மாதர் சங்க பொதுக்கூட்டம் கலகாவில் நடந்து அதன்பிறகு..
கம்பளை கதிரேசன் ஆலயத்தில்
இந்தியாவில் காந்தியின் விடுதலைக்காக சிவபாக்கியம்,திருமதி ராமசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் 35 பேர் பங்குபற்றினர்.
13--03--45 ல் பெரி சுந்தரம் தலைமையில் ஒரு தூதுகோஷ்டி மலையக மக்களின் பிரச்சினை பற்றி பேச சென்றபோது அதில் மகளிர் பிரிவின் சிவபாக்கியமும் இணைக்கப்பட்டது அந்த பெண்கள் அமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.
**சோல்பரி கமிசனுக்கு கையளித்த அறிக்கை பின்வருமாறு கூறியது.
அது...
"சோல்பரி கமிசன் எங்களுக்கு அநீதி இழைக்கிறது.இந்த நாட்டையே நிரந்தரமாக தாயகமாகக் கொண்டு வாழும் எமக்குஅரசியல் உரிமை,பிரஜா உரிமை, வாக்குரிமைமறுக்கப்படல் பெரும் அநீதியாகும்.
இலங்கைவாழ் இந்திய வம்சாவளியினர் தெளிவில்லா வெள்ளையரின் நிபந்தனைச் சட்டமானது கூடிய விரைவிலேயே தளர்ந்து இந்நாட்டுப் பிரஜைகளாக எல்லா உரிமையோடு வாழ்வதற்கு வழிவகை செய்யப்படுமென எதிர்பார்க்கிறோம்.
இலங்கை இந்தியா இரு நாடுகளும் நேசமாக வாழ்வதே எமது அவாவாகும்"

குறிப்பு:
ஆணாதிக்கம் என்று கூறப்பட்ட அன்றைய இந்தியத் தமிழரிடையே பெண்களை முன்னிலைபடுத்தியதான பல நடவடிக்கைகள்,இராப்பகல்
போராட்ட சேவையில் இவர்கள் எந்தவித ஊதியத்தையும் பெறாமல் முழு தொண்டராகவே பணியாற்றினர்.
**இவர்களுக்கு தொழிற்சங்கவாதியும்,அரசியல்வாதியுமான கவிமணி சி வி வேலுப்பிள்ளை பெரும் ஒத்தாசையாக இருந்தார்.
**இத்தகைய அர்ப்பணிப்புகளால் இந்திய இலங்கை காங்கிரஸ்...
28--04--46 ல் கூடிய தனது 5 வது மாநாட்டு செயற்குழுவில் ஒரே பெண் அங்கத்தவராக சிவபாக்கியத்தை இணைத்துக்கொண்டனர்.
** 1949 ல் மலையக மக்களின் குடியுரிமையைப் பறிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது நடந்த கொழும்பு கால்பேஸ் சத்தியாகிரகப் போராட்டத்தில் மகளிர் பிரிவும் பங்கேற்றது.
**அதில்...
அன்றைய நாளில் மாதர் காங்கிரஸ் செயற்குழுவின் அங்கத்தினராக சிவபாக்கியத்தால் இணைத்துக்கொள்ளப்பட்ட கொழும்பு உப மேயரான ஆங்கில பட்டதாரியான
☆☆ திருமதி.ஆயிஷா ரவூப் சத்தியாக்கிரகத்தில் தனது பெரும் ஒத்துழைப்பை வழங்கினார்.
**பின்னாளில் சிவபாக்கியத்தோடு தோட்டக்கமிட்டி கூட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு தனது பேச்சாற்றல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
**அதேபோன்று பன்விலை கெங்கையம்மாளும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார்.

குறிப்பு:
1.அன்றைய நாளில் தமிழரோடு முஸ்லிம் பெண்களும்கூட கைகோர்த்திருந்தனர் என்பதை பெருமையோடு நினைவு கூறுவோம்.
2. இங்கே நான் இந்த பெண்கள் அமைப்பை முன்னிலைபடுத்தும் விசேட காரணம்....
(அ) இந்தியத் தமிழர் ஆணாதிக்கத்தினர் என்ற முத்திரை இருந்த அந்த நாளிலேயே பெண்களுக்கு சமஉரிமையைத் தந்தனர்.
(ஆ) தமிழ் பெண்களின் இந்த புரட்சிகர துணிவு நடவடிக்கைகள்கூட ஆங்கிலேயரது மனதில் மட்டுமன்றி சிங்கள தீவிரவாதிகள் மத்தியிலும் கடுப்பையும்,வெறுப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியதுடன்..அதன் தாக்கம்/மறைமுகமாக இன்றளவும்கூட ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளிலும்கூட தொடர்வதாகும்.!

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates