கெளரவ மதத் தலைவர்களே, அன்பார்ந்த தாய், தந்தையரே, சகோதர, சகோதரிகளே,
1978ம் ஆண்டு ஏகாதிபத்தியத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஜே.ஆர். ஜயவர்தனாவினால் கொண்டுவரப்பட்ட எதேச்சதிகார ஜனாதிபதி அதிகாரத்தை கடந்த 40 வருட காலமாக பெரும்பாலும் நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமாக இல்லாமல் பாதகமானதாகவே செயற்படுத்தியுள்ளது.
இதனாலேயே இந்த ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற ஆணித்தரமான கருத்தியல் சமூகத்தில் எழும்பி வந்தது. ஆரம்பத்திலிருந்தே மக்கள் விடுதலை முன்னணி இக்கருத்தியலில் இருந்தது. 1994 ஜனாதிபதியாக பதவியேற்ற சந்திரிக்கா குமாரதுங்க அவர்களும் அதன்பின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ அவர்களும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக எல்லா ஜனாதிபதித் தேர்தல்களிலும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவ் வாக்குறுதிகள் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை . 2015 ஜனாதிபதியான மைத்திரிபால சிரிசேனா அவர்களின் பிரதான வாக்குறுதியானதும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வேன் என்றாகும், எனவே வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் கனிசமானோர் அவருக்கு வாக்களித்தனர். ஆனால் அவரும் அவ்வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற அறிகுறியேனும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை .
மக்கள் விடுதலை முன்னணி இந்த எதேச்சதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்காக பாராளுமன்றத்துக்கு 20வது அரசியலமைப்பு திருத்தத்தை சமர்பித்தது இவ்வாறான சூழலிலாகும். ஆனால் இப்போது கடந்த காலங்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்தவர்களும் சில தமிழ், முஸ்லிம் தலைவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களை திசைதிருப்ப முயற்சி செய்து வருகின்றனர். ஆகவே மக்கள் 20வது திருத்தம் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டியது சாலப்பொறுத்தமானதாகும்.
நிறைவேற்று அதிகாரத்தின் கரும் புள்ளிகள்
இலங்கையில் பதவிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் தமது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு எதிராக பலமுறை செயல்பட்டுள்ளனர். அவற்றுள் சில முக்கியமான சந்தர்ப்பங்கள் கீழ்வருமாறு,
ஜனாதிபதி ஜே.ஆர், ஜயவர்தனா அவர்களின் காலகட்டத்தில் 1980 ஜூலை வேலை நிறுத்தம் ஆகிய இந்த நியாயமான போராட்டத்தை அடக்கு முறைக்குட்படுத்தி ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அத் தொழில்களிலிருந்து விலக்கப்பட்டனர். 1981ல் யாழ்ப்பாணத்தில் நடந்த மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலின் போது கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட காடையர்களை ஏவிவிட்டு அத்தேர்தலை குழப்பியடித்ததோடு ஆசியாவிலேயே அறிவுப் பொக்கிஷங்களில் ஒன்றான யாழ் நுாலகசாலையை தீயிட்டுக் கொழுத்தினர். 1983ல் இந்நாட்டில் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய இனக்கலவரத்தை மூட்டி ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்து. உடமைகளை தீக்கிரையாக்கியதோடு அதன் திரைமறைவில் நின்று மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட 13 கட்சிகளை அன்று தடைசெய்யப்பட்டது, இந்நாட்டு வரலாற்றில் பாரிய அழிவை ஏற்படுத்திய இலட்சக் கணக்கான உயிர்களை பலியெடுத்து இன்றும் அதன் தாக்கம் பல தாய்மார்களின் முன் எதிரொலிக்கும் 30 வருட யுத்தத்துக்கு வித்திட்டதும், அதன்பின் பயங்கரவாத ஒழிப்புச் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களை கொண்டு வந்ததும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியே ஆகும். அதன்பின் ஜனாதிபதி ஜயவர்தனா அவர்கள் 1987ல் தான்தோன்றித் தனமாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் விளைவாக இந்திய இராணுவம் வடக்கு, கிழக்குக்கு வந்திரங்கியதோடு அவர்களால் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதும் பல இளைஞர்களை கொள்ளப்பட்டதும் எவராலும் மறந்துவிட முடியாது.
ஜனாதிபதி பிரேமதாசவின் காலகட்டத்தில் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி புலிகளின் தலைவர்களை கொழும்புக்கு வரவழைத்து ஹில்டன் ஹோட்டலில் தங்கவைத்து ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்கப்பட்டமையும், 1990ம் ஆண்டு காலகட்டத்தில் அப்பாவி தமிழ் இளைஞர், யுவதிகளை கைது செய்து கொலை செய்யப்பட்டதோடு பலர் காணாமலாக்கப்பட்டதால் அவர்களின் பெற்றோர்கள் இன்றும் கண்ணீர் சிந்திக்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் காலகட்டத்தில் நாட்டுக்கு பாதகமான முறையில் அரசு நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு தாரைவார்த்தல், நி. யாயமான வேலைநிறுத்த போராட்டங்களை அடக்குமுறை செய்து அன்சல் லங்கா நிறுவனத்தின் தொழிலாளரை சுட்டுக்கொலை செய்தமை, அளவுக்கு மீறிய அமைச்சரவையை நியமித்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத் தி 18வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து குடும்ப ஆட்சிக் கு வழிவகுத்தது, யுத்தம் நிறைவடைந்தாலும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவ ஆட்சியை நடத்தி ஜனநாயக ரீதியில் செயற்பட்ட அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்தி வன்முறையை கட்டவிழ்த்தியதோடு நின்று விடாமல் வெள்ளைவான் கடத்தல் போன்ற நிகழ்வுகளும் நடந்தது மறந்துவிட முடியாது. அதேபோன்று அலுத்கம, தர்காநகர் போன்ற பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை யை கட்டவிழ்த்து விட்டு பல கடைகளையும் வீடுகளையும் தீக்கிரையாக்கப்பட்டதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை யின் கீழ் ஆகும், நீதியரசர் சிரானி பண்டா ரநாயக்க அவர்களை விலக்கியமை, ஊடகவியலாளர்களை தாக்கியமை, ஊடக நிறுவனங்களை தீக்கிரையாக்கியமை, நிராயுதபாணி மக்களை சுட்டுக் கொலை செய்தமை, ஜனாதிபதி மன்னிப்பு வழங்களுக்கு ஏற்ப குற்றவாளிகளை, கொலை காரர்களை விடுதலை செய்தமை போன்றவற்றை நிறைவேற்று ஜனாதிபதி முறையை பயன்படுத்தியே செய்தனர். எனவே தனிநபர் ஒருவர் வசமுள்ள இந்த எதேச்சதிகார நிறைவேற்று அதிகாரத்தை தோற்கடிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
20வது திருத்தம் என்றால் என்ன?
20வது திருத்தம் என்பது ஜனாதிபதி முறையை முற்றாக இல்லாதொழிப்பதற்கு கொண்டுவரப்பட்ட யோசனைகள் அல்ல. ஜனாதிபதி பதவியில் உள்ள எதேச்சதி காரத்தை கட்டுப்படுத்துவதற்கு கொண்டுவரப்படுகின்ற யோசனைகளாகும். தொடர்ந்தும் ஜனாதிபதி அரசத்துறை பிரதானியும், நிறைவேற்றின் பிரதானியும், ஆயுதப்படைகளின் தளபதியுமாவார். ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது பாராளுமன்றத்தினாலாகும். ஒரு நாட்டின் ஆட்சித்துறையில் சட்டவாக்க, நிறைவேற்று, நீதி மன்றம் ஆகிய 03 பிரதானமான துறைகள் காணப்படும். இதில் அரசாங்கத்தின் பிரதானி பிரதமராவார். சட்டவாக்க துறை, சட்டங்களை தீட்டும் முழு உரிமையும் பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்றத்துக்கு கிடைக்கும். 20வது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றின் அதிகாரம் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் உள்ளது. ஆனால் ஜனாதி பதி எப்பொழுதும் பாராளுமன்றத்தின் மற்றும் அமைச்சரவையின் கவனத்தின்கீழ் இருப்பதே இப்போதிருக்கும் நிலையைவிட மாற்றமானதாகும். எனவே ஜனாதிபதி. க்கு எதேச்சதிகாரமாக ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.
20வது திருத்தம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகுமா?
20வது திருத்தத்துக்கு அமைய அரசத்துறையின் பிரதானி ஜனாதிபதியாவார். அதேபோன்று ஜனாதிபதி நிறைவேற்றின் பிரதானியும், ஆயுதப்படையின் தளபதியுமாவார். இதற்கேற்ப அரசின் பாதுகாப்பு முக்கியமாக ஜனாதிபதியிடம் தங்கியிருக்கும். அரசுக்கு எதிராக ஜனாதிபதிக்கு தடையின்றி தலையிட முடியும். அவருக்கு தொடாந்தும் யுத்தத்தை பிரகடனப்படுத்துவற்கோ அல்லது சமாதானத்தை பிரகடனப்படுத் துவற்கோ உரிமையுள்ளது. எனவே 20வது திருத்தத்தின் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளது.
20வது திருத்தத்தால் பிரதமர் எதேச்சதிகாரமாக நடப்பாரா?
20வது திருத்தத்திற்கு அமைய அரசத்துறையின் பிரதானி ஜனாதிபதியாவார். அரசாங்கத்தின் பிரதானி பிரதமராவார். பிரதமருக்கு இன்றைய ஜனாதிபதியைப் போன்று எதேச்சதிகாரமாக செயல்படுவதற்கு பாராளுமன்ற முறையில் ஒருபோதும் முடியாது. எனவே அவருக்கு எதேச்சதிகாரமான அதிகாரங்கள் கிடைக்காது.
இத்தருணத்தில் இன்னமும் இத்திருத்தங்கள் சட்டவரைவாக காணப்படுவதால் இதன் உள்ளடக்கத்தின் அடிப்படை விடயங்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் ஆரோக்கியமான திருத்தங்களை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.
இன்று பொருளாதார, சமூக, அரசியல் ஆகிய துறைகளில் பாரிய சரிவி னை நாடு எதிர்கொண்டுள்ளமை நாம் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். மக்கள் முகம் கொடுத்துவரும் எந்தப்பிரச்சினைக்கும் தீர்வு வழங்குவதற்கு அதிக காரத்திலுள்ள எந்த குழுவுக்கும் முடியாது என்பது இன்று நன்கு உறுதியாகியுள்ளது. கடந்த 70 வருட ஆட்சி காலம் இதற்கு சிறந்த சாட்சியாகும். தீர்வுகளை கொடுக்க முடியாத ஆட்சியாளர்கள் சர்வாதிகார எதேச்சதிகாரத்தின் நிழலை தேடுவது வியக்கத்தக்க ஒன்றல்ல. எதேச்சதிகாரத்துக்கு செய்ய முடிவது, உரிமைகளை கோரி போராடும் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதும், பிரமாண்டமான நிதி மோசடிகளை செய்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதும், குடும்ப ஆட்சியை ஏற்படுத்தலும், இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி மக்களை பிளவுபடுத்தலும், நாட்டை இன்னும் இன்னும் அதள பாதாளத்தில் தள்ளுவதுமாகும். எனவே நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடிவது ஹிட்லர் பாணியிலான ஆட்சியாளனை தேர்ந்தெடுப்பதால் அல்ல. பிரச்சினைகளை தீர்க்க முடிவது உண்மையான மக்கள்மய வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதால் ஆகும். அதற்காக ஜனநாயக அவகாசம் மிகமுக்கியமானதாகும். இதனாலேயே 20வது திருத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது இச்சமயத்தில் சமூக பொறுப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- நாகரீகமான சமூகத்திற்காக எதேச்சதிகார நிறைவேற்று முறையை தோற்கடிப்போம்!
- ஜனநாயகத்திற்காக போராடுவோம்!
- 20வது திருத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!
2018.07.02
மக்கள் விடுதலை முன்னணி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...