Headlines News :
முகப்பு » » மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி (பாகம் -1) - மல்லியப்புசந்தி திலகர்

மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி (பாகம் -1) - மல்லியப்புசந்தி திலகர்



அறிமுகம் 
மலை­யகக் கவிதை இலக்­கியம் பற்­றிய பார்­வையை செலுத்­த­வ­தற்கு ‘மலை­யகம்’ எனும் தொடர் பற்­றிய சிறு அறி­மு­கத்தைச் செய்­து­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. ‘இலங்­கைத்­தமிழ் வழக்கில் இன்று மலை­யகம் என்­பது இலங்­கையின் மலைப்­பி­ர­தே­சங்­களில் உள்ள பெருந்­தோட்­டங்­க­ளிலும் அவற்­றைச்­சார்ந்த நக­ரங்­க­ளிலும் வாழும் இந்­திய வம்­சா­வளி தமி­ழரைக் குறிப்­ப­தாகும். மலை­யகப் பகு­தி­க­ளைச்­சா­ராத பகு­தி­க­ளி­லுள்ள பெருந்­தோட்­டங்­களில் அதா­வது மேல், தென் மாகா­ணங்­களைச் சார்ந்த இறப்பர் பெருந்­தொட்­டங்­களில் வாழ்­ப­வர்­க­ளையும் மலைசார் பகு­தி­களில் இருந்து சென்று வட­கி­ழக்கு பகு­தியின் விவ­சாய பிர­தே­சங்­க­ளிலும் (கிளி­நொச்சி, வவு­னியா மாவட்­டங்­களில்) கொழும்­பிலும் வாழ்­ப­வர்­க­ளையும் கூட மலை­ய­கத்­த­மிழர் என்ற தொடர் கொண்டே சுட்டும் மரபு இன்று வழக்கில் உள்­ளது’ என்­கிறார் பேரா­சி­ய­ரியர் கார்த்­தி­கேசு சிவத்­தம்பி. (இலங்கை மலை­ய­கத்­த­மி­ழரின் பண்­பாடும் கருத்­து­நி­லையும் - தொகுதி 1 (1993-உதயம் வெளி­யீடு) ஆய்வு முன்­னுரை பக்.11-). மலை­யகப் பண்­பாட்­டுத்­தளம் பற்­றிய முற்­றி­லு­மாக கவனம் செலுத்­தப்­பட்டு செய்­யப்­பட்ட ஆய்­வுத்­தொ­குப்பு என்ற வகையில் நாம் ‘மலை­யகம்’ எனும் தொட­ருக்­கான விளக்­க­மாக இந்த கூற்­றினைக் கொள்ள முடியும். எனினும் இந்த ஆய்­வு­கூற்­றுக்கு மேல­தி­க­மாக பின்­வரும் வகு­தி­யி­ன­ரையும் ‘மலை­யகம்’ என்ற தொட­ருக்குள் உள்­ள­டக்­கிப்­பார்க்க வேண்­டிய தேவை எழுந்­துள்­ளமை தற்­கா­லத்தில் விவா­திக்­கப்­பட்­டு­வரும் விட­ய­மா­கி­றது.

அவை­யா­வன, 
1964 ஸ்ரீமா சாஸ்­திரி ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இந்­தி­யா­வுக்கு திருப்பி அனுப்­பப்­பட்டும் இன்­று­வரை இந்­திய தமிழ்­நாட்டில் சிலோன்­கா­ரர்­க­ளாகப் பார்க்­கப்­படும் ‘மலை­ய­கத்­த­மி­ழர்கள். இலங்­கையில் இடம்­பெற்ற மூன்று தசாப்த கால உள்­நாட்டு யுத்­தத்­தினால் (மேற்­கூ­றிய ஆய்­வுக்­கூற்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள) வட­கி­ழக்கு பகு­தியில் வாழ்ந்த மலை­யக மக்­களின் புலப்­பெ­யர்வு. இவர்கள் அக­தி­க­ளாக இந்­தி­யா­வுக்கு சென்று இன்­றைய நாள் வரை இந்­தி­யா­விலும் ‘மலை­ய­கத்­த­வர்­க­ளாக’ அக­தி­ வாழ்க்கை வாழ்­கின்­றமை. இதில் குறிப்­பி­டத்­தக்க அம்சம் இந்த மக்கள் தொகை­யினர் ஏறக்­கு­றைய முப்­ப­தி­னா­யிரம் அள­வி­ன­ருக்கு 2009 ம் ஆண்டு 5ம் இலக்க நாடற்­ற­வ­ருக்­கான பிர­ஜா­வு­ரிமை வழங்கும் (திருத்தச்) சட்­டத்தின் பிர­காரம் ‘இலங்­கைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளமை.

இப்­ப­டி­யாக இந்­தி­யாவில் வாழும் இலங்கை குடி­யு­ரிமைப் பெற்ற ‘மலை­யக மக்கள்’.  சுதந்­தி­ரத்­துக்­குப்­பின்­னான காலப்­ப­கு­தியில் இலங்­கையில் இடம்­பெற்­ற­தான புலப்­பெ­யர்­வுகள் வடக்கு, கிழக்கு மற்றும் பூர்­வீ­கத்­த­மி­ழர்­களை மலை­யகம் நோக்­கியும் மலை­ய­கத்­த­மி­ழர்­களை வட­கி­ழக்கு மற்றும் மேற்­கு­லக நாடுகள் நோக்­கியும் இடம்­பெ­ய­ரச்­செய்­ததன் விளை­வாக தோன்­றி­யி­ருக்­கக்­கூ­டிய சமூ­கக்­கு­ழு­மங்கள். 
இதில் மலை­யகம் நோக்­கிய இலங்கை பூர்­வீ­கத்­த­மி­ழர்­களின் புலப்­பெ­யர்வை இரண்­டு­வி­த­மா­கப்­பார்க்­கலாம்.

ஒன்று, பிரித்­தா­னியர் காலம்­தொட்டே வியா­பாரம் மற்றும் தொழில் நிமித்தம் மலை­யகம் நோக்கி புலம் பெயர்ந்து அங்­கேயே தம்மை நிலை­நி­றுத்­திக்­கொண்டும் அங்­கி­ருந்து வெளி­யே­றியும் மலை­யக அர­சியல், சமூக,  இலக்­கிய துறையில் இவர்கள் ஆற்­றி­யி­ருக்­கக்­கூ­டிய பங்­க­ளிப்பு.

இரண்­டா­வது, இலங்­கையில் இடம் பெற்ற மூன்று தசாப்த கால உள்­நாட்டு யுத்­தத்­தினால் மேற்­கு­லக நாடுகள் நோக்கி புலம் பெயர்ந்­தது போன்று மலை­யகம் நோக்­கிய இலங்கை பூர்­வீ­கத்­த­மி­ழர்­களின் புலப்­பெ­யர்வும் அங்கு (மலை­ய­கத்தில்) அவர்கள் தனிப்­பட்­ட­ரீ­தி­யா­கவும் சமூ­கக்­க­கு­ழு­ம­மா­கவும் மலை­யக அர­சியல், சமூக,  இலக்­கிய துறையில் கொண்­டி­ருக்கும் வகி­பாகம். மற்­றை­யது மலை­ய­கத்­தைச்­சார்ந்­த­வர்கள் மேற்­கு­லக நாடு­க­ளுக்குச் சென்று அங்கு மலை­யக மக்­களின் குழு­ம­மாக செயற்­ப­டு­வதன் மூலம் மலை­யக அர­சியல், சமூக, இலக்­கிய துறை­களில் வகிக்­கக்­கூ­டிய பங்கு. 

(இது பற்­றிய விரி­வான கட்­டுரை: இந்­திய வம்­சா­வளி மலை­யக மக்கள் - ஒரு மீளாய்வு எனும் தலைப்பில் ‘இந்­திய பூர்­வீக  இலங்கை தமிழர் பேரவை கனடா’ கன­டாவில் வெளி­யிட்ட ‘குறிஞ்­சி­மலர் 2012’ எனும் இதழில் இதே கட்டுரை ஆசி­ரி­யரால் எழு­தப்­பட்­டுள்­ளது. பின்னர் நோர்­வேயைத் தள­மா­கக்­கொண்டு இயங்கும் நம­து­ம­லை­யகம்.கொம் எனும் இணை­யத்­த­ளத்தில் அந்தக்­கட்­டுரை பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த கட்­டு­ரையில் எடுத்­தா­ளப்­பட்டுள்ள விட­ய­தானம் அந்­தக்­கட்­டு­ரையில் குறிப்­பி­டப்­படும் சமூ­கக்­கு­ழு­மங்­களின் செயற்­பா­டு­களின் விளை­வாக எழுந்த பிர­சுர செயற்­பா­டு­க­ளி­னூடே வெளி­வந்­தி­ருப்­பது இங்கு முக்­கி­யத்­து­வ­மா­னது)

மலை­யகக் கவிதை இலக்­கியம் பற்றி பேச­வந்­த­வி­டத்து மேற்­சொன்ன ‘மலை­யகம்’ என் தொடர் பற்­றிய ஆய்வு கூற்றும் அதன் பின்­ன­ரான அந்த சமூக்­க­கு­ழுமம் கண்­டி­ருக்­கக்­கூ­டிய ‘மலை­ய­கத்தின்’  வீச்சு எல்லை சம்­பந்­த­மா­கவும் சற்று விரி­வாக நோக்­கி­யதன் தேவை யாதெனில், இந்த உள்­ள­டக்­கத்­திற்குள் வரு­வோ­ரிடம் இருந்து வரக்­கூ­டிய ஆக்க இலக்­கிய படைப்­பு­களும் ‘மலை­யக இலக்­கியம்’ என்ற பரப்­புக்குள் உள்­ள­டங்­கி­வி­டு­வதன் அல்­லது உள்­ள­டக்­க­ப­டுவதன் தேவை இருப்­ப­த­னா­லாகும். மலை­யக இலக்­கி­யத்தில் இப்­ப­டியானதொரு செல்­நெறி தொடர்ச்­சி­யா­கவே இட­ம­பெற்­று­வந்­துள்­ளமை அவதானிக்­கத்­தக்­கது.. எதிர்­வரும் காலங்­களில் ‘மலை­யக’ வீச்­செல்­லையை மையப்­ப­டுத்தி ஆய்­வுகள் வெளி­வ­ர­வேண்­டி­யதன் தேவையை வலி­யு­றுத்­தியே இந்­தக்­கு­றிப்பு இங்கு சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

மலை­யக கவிதை இலக்­கி­யத்தின் தோற்­றுவாய்:

இலக்­கி­யத்தில் மூத்­தது கவிதை என்­பார்கள். ஆக்க இலக்­கியம் உணர்­வு­களின் பிரக்­ஞை­யின்­பாற்­பட்­டது. எனவே உணர்ச்­சியின் வெளிப்­பா­டாக ஒன்றை சொல்ல வரு­கின்­ற­போது அதன் முதல் உந்­து­த­லாக கவிதை அமைந்து விடு­கின்­றது. பல எழுத்­தா­ளர்கள் தாம் முதலில் கவிதை எழு­து­ப­வர்­க­ளா­கவே வெளிப்­பட்­டுள்­ள­மையை அவ­தா­னிக்­கலாம். 

மலை­யக கவிதை இலக்­கி­யமும் இதற்கு விதி­வி­லக்­கா­ன­தல்ல. மலை­யக இலக்­கி­யத்தின் மூத்­த­தா­கவும் முதன்­மை­யா­ன­தா­கவும் கவிதை இலக்­கி­யமே அமை­கின்­றது எனலாம். எனினும் நேர­டி­யாக எடுத்த எடுப்­பி­லேயே ‘கவிதை’ என்ற கட்­டு­கோப்­புக்குள் வந்­து­வி­டாமல் வாய்­மொழி பாரம்­ப­ரி­யத்­துக்குள் இருந்து புறப்­படும் ஒரு சிறப்­புத்­தன்­மையை மலை­யகக் கவிதை இலக்­கி­யத்தில் தரி­சிக்­கலாம். அதா­வது மலை­யக நாட்டார் பாடல்­களே மலை­யகக் கவிதை இலக்­கி­யத்தின் ஊற்­றுக்­கண்­க­ளாக இருந்­துள்­ளன. 
மலை­யகக் கவி­தைப்­பா­ரம்­ப­ரி­யத்தில் நாட்டார் பாடல்­களின் சாயல் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கி­றது என்­கின்ற குற்­றச்­சாட்டு அல்­லது சிறப்­புப்­பண்பு அதன் வேர் அது­வா­கவே அமைந்­து­வி­டு­வ­த­னா­லாகும் என கொள்­ளலாம்.

இந்த மலையயக நாட்டார் பாடல்கள் பற்­றிய பார்­வையை செலுத்­தாமல் மலை­யகக் கவிதை இலக்­கியம் பற்­றிய பார்­வைக்குள் வர­மு­டி­யாது. இந்த அம்­சத்தை மலை­யகக் கவிதை இலக்­கி­யத்தின் பல­மாக பார்ப்­போரும் பல­வீ­ன­மாகப் பார்ப்­போரும் உள்­ளனர். எது எவ்­வா­றா­யினும் மலை­யக இலக்­கியம், மக்கள் இலக்­கி­யத்­தி­லி­ருந்து  மாறு­பட்டு நிற்க முடி­யாத அள­வுக்கு ஒன்­றிப்போய் உள்­ளது. மக்கள் இலக்­கியம் படைக்­காத மலை­யக இலக்­கி­ய­வா­தி­களை யாரும் கவ­னத்தில் எடுத்துக் கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. மலை­ய­கத்தின் மூத்த இலக்­கியம் என்­ற­வ­கையில் மலை­யக நாட்டார் பாடல்­களே மலை­யகக் கவிதை இலக்­கி­யத்தின் ஆரம்­ப­மாக அமை­கின்­றன.

தொடரும்
Share this post :

+ comments + 1 comments

....yaa superb. continue .....

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates