தரமான முன்பள்ளிக் கல்விப் பயிற்சியை அதாவது முன்பள்ளிக் கல்வி டிப்ளோமாவை இலகுவாகப் பெறக்கூடிய ஒரே இடமாக விளங்கியது திறந்த பல்கலைக்கழகம் மட்டுமே. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளிலுள்ள திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையங்களில் தமிழ் மொழி மூலமான முன்பள்ளி ஆசிரியைகளுக்கான டிப்ளோமா பயிற்சி கள் பல வருடங்களாக நடத்தப்பட்டு வந்தாலும் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்தப் பயிற்சிநெறி ஆரம்பிக்கப் படவேயில்லை
இந்த நாட்டில் முன்பள்ளிக் கல்வி ஆரம்பித்து எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்திருந்தாலும் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் பெருந்தோட்டப் பகுதிகளில் முன்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆனாலும் அதற்கு முன்னர் பெருந்தோட்ட பகுதியிலும் முன்பள்ளிகள் உள்ளன என்ற அங்கீகாரத்தைப்பெற பல வருடங் கள் போராடவேண்டியிருந்தது.
இன்னும் கூட நூற்றுக்கணக்கான தோட்டங்களிலுள்ள பாலர்களுக்கு இதுவரை முன்பள்ளிக் கல்வி கிடைக்கவில்லை.
பெருந்தோட்டங்களில் முன்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட முன்பள்ளி ஆசிரியைகளுக்கு பயிற்சி வழங்குவது என்பது பாரதூரமான சவாலாக மாறியது. அதற்கான வசதி வாய்ப்புகளும் இருக்கவில்லை.
தரமான முன்பள்ளிக் கல்விப் பயிற்சியை அதாவது முன்பள்ளிக் கல்வி டிப்ளோ மாவை இலகுவாகப் பெறக்கூடிய ஒரே இடமாக விளங்கியது திறந்த பல்கலைக்கழகம் மட்டுமே.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளிலுள்ள திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையங்களில் தமிழ் மொழி மூலமான முன்பள்ளி ஆசிரியைகளுக்கான டிப்ளோமா பயிற்சி கள் பல வருடங்களாக நடத்தப்பட்டு வந்தாலும் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்தப் பயிற்சிநெறி ஆரம்பிக்கப் படவேயில்லை.
இதற்குக் காரணம், பெருந்தோட்டப் பகு திகளிலும் முன்பள்ளிகள் நடத்தப்படுகின்றன என்பது தேசிய அளவில் அறியப்படாமலும் அங்கீகரிக்கப்படாமலும் இருந்தமையே ஆகும்.
இந்தப் பின்னணியிலேயே பெருந்தோட் டப்பகுதிகளிலுள்ள திறந்த பல்கலைக்கழக கற்கை மண்டபங்களில் இந்தப் பயிற்சி நெறியை ஆரம்பிக்குமாறு ஆறு வருடங் களுக்கும் மேலாக பிரிடோ நிறுவனம் தொடர்ச்சியாக பரிந்துரைகளை முன்னெடுத்தது.
இந்த கோரிக்கைக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரபோஸ், பேராசிரியர் தனராஜ் ஆகியோர் மேல்மட்டத்தில் ஆதரவு வழங்கினர்.
இந்த பரிந்துரையின் விளைவாக 2010ஆம் ஆண்டில் ஹட்டனிலும் அதன் பின்னர் கண்டியிலும் இந்தப் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டது.
இது பெருந்தோட்ட முன்பள்ளிக் கல்வி தொடர்பாகப் பெறப்பட்ட பாரிய வெற்றியாகும். கடந்த 5 வருடங்களில் சுமார் 150 முன்பள்ளி ஆசிரியைகள் இந்தப் பயிற்சியினை பெற்றுள்ளனர்.
இந்த டிப்ளோமா பயிற்சிநெறியை நிறைவு செய்தவர்களுக்கான தமிழ் மொழி மூலமான உயர் டிப்ளோமா பயிற்சிநெறியும் தற்போது ஹட்டன் திறந்த பல்கலைக்கழக கற்கை நிலையத்தில் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இந்த முயற்சிகளுக்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகும்.
உயர் டிப்ளோமா பயிற்சி நெறியை நிறைவு செய்த பின்னர் முன்பள்ளிக் கல் வித்
துறையில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பும் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் 2015/2016ஆம் ஆண்டுக்கான முன்பள்ளி ஆசிரியைகளுக்கான ஆரம்ப டிப்ளோமா பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பம் திறந்த பல்கலைக்கழகத்தால் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி ஜனவரி 29 ஆகும். ஆயினும் ஹட்டன் கற்கை நிலையத்தில் போதியளவு விண்ணப்பதாரிகள் இருந்தால் மட்டுமே பயிற்சிநெறி ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஒரு அபாய எச்சரிக்கையாகும். இந்தப் பயிற்சி ஆரம்பித்த காலத்திலிருந்து விண்ணப்பதாரிகளின் எண்ணி க்கை படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்த அபாய அறிவிப்புக்கு காரணமாக இருக்கலாம்.
ஏற்கனவே இந்த பயற்சி நெறியை பது ளை, பண்டாரவளை, இரத்தினபுரி போன்ற மலையகப் பகுதிகளில் ஆரம்பிக்குமாறு பிரிடோ பரிந்துரை செய்து வந்தபோதும் இப்பகுதிகளிலுள்ள அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் ஆகியோர் தரமான முன்பள்ளி
ஆசிரியைகளாக வரவிரும்பும் இளம் பெண் களோ இது விடயத்தில் எதுவித அக்கறை யும் காட்டாததால் இந்த முயற்சி இதுவரை வெற்றிபெறவில்லை.
பிரிடோ பணிசெய்யும் பகுதிகள் தவிர மற்றெந்த பெருந்தோட்டப் பகுதிகளிலும் தரமான முன்பள்ளிகளை ஆரம்பிக்க எவரும் அக்கறை காட்டாதிருப்பதும் பெரிதும் கவலைக்குரிய விடயமாகும்.
பெருந்தோட்டப் பகுதிகளில் அதிலும் விசேடமாக, நுவரெலியா மாவட்டத்தில் தரமான முன்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது எல்லோ ராலுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தா கும். முன்பள்ளிகள் இல்லாத இடத்தில் முன் பள்ளிகளை ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் தரமான முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கேள்வி அதிகரித்து வருகிறது. எனினும் பயிற்சிபெற்ற தரமான முன்பள்ளி ஆசிரியைகளுக்கு சிறப்பான சுயதொழில் வாய் ப்பு முன்பள்ளிகள் மூலமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை பலர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
தற்போது முன்பள்ளி ஆசிரியைகளுக்கான தரமான பயிற்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திறந்த பல்கலைகழக கற்கை நெறியை பெருந்தோட்ட பகுதிக ளில் தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது.
ஆகவே கோரப்பட்டுள்ள கல்வித் தகமை களை கொண்டுள்ள இளம் பெண்கள், இந்தப் பயிற்சிநெறிக்கு விண்ணப்பித்து இந்த பாடநெறியை கற்பதன் மூலம் நல்லதொரு சமூக அந்தஸ்துள்ள தொழில் வாய்ப்பை பெறுவதுடன், மலையக பெருந் தோட்ட மக்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் பாரிய பங்களிப்பை செலுத்தலாம்.
அது மட்டுமல்ல, மலையகப் பெருந்தோட்ட மக்கள் சார்பில் கடும் பிரயத்தனத் தின் பின்னர் பெறப்பட்ட இந்த உரிமையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
திறந்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்ப டும் இப் பாடநெறி, விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவு காரண மாக பெருந்தோட்ட பகுதிகளில் நடத்தப்ப டுவது நிறுத்தப்பட்டால் அதனை மீண்டும் பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமான விடயமாக அமையும்.
எனவே இந்தப் பயிற்சிநெறிக்கு விண் ணப்பிக்குமாறு இளம் பெண்களை கேட் டுக் கொள்வதுடன் சமூக அமைப்புக்களும் பெருந்தோட்ட கல்வி வளர்ச்சியில் ஆர்வ முள்ள சமூக ஆவலர்களும் இது விடயத் தில் மக்களை ஊக்கு வித்து பெறப்பட்ட இந்த உரிமையை தக்கவைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...