பாடசாலையில் ஆசிரியர்களின் கவனிப்பின்மை, ஆசிரியர்கள், பெற்றோர்களின் அணுகுமுறை, பெற்ேறார்களின் அன்பு, பாசம், அரவணைப்பு, பாதுகாப்பு கிடைக் காமை, அதிகமான வீட்டு வேலைகள் அதாவது அனைத்து பாடங்களிலும் பாட ஆசிரியர்கள் வீட்டில் பாடங்களை செய்து கொண்டு வரும்படி அடிக்கடி கூறுவதால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்
நாட்டில் இன்று 9,774 பாடசாலைகளில் 44,00,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 2,25,000 ஆசிரியர்கள் உள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தேசியப் பரீட்சைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் மேற்கூறிய தேசிய பரீட்சைகளில் பல மாணவர்கள் சித்திபெறத் தவறிவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரீட்சைகளில் சித்திபெறத் தவறுகின்ற சில மாணவர் கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். பரீட்சைகளில் சித்தியடைந்து உயர்கல்விக்கு செல்வது அல்லது பல்கலைக்கழகத்திற்கு செல்வது மட்டும்தான் வாழ்க்கை என்று நினைக்கின்றனர்.
இதனைவிட பாடசாலைக்கே போகாதவர்கள் எத்தனையோ பேர் இன்று வாழ்க்கையில் முன்னேறி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களுடைய தைரியம், நம்பிக்கை, கடின உழை ப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகியன இவர்களை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதை அவதானிக்க லாம்.
இன்று பாடசாலையில் கல்வி கற்பதைவிட டியூசன் வகுப்புகளுக்குச் சென்று அதிக பணத் தைச் செலவு செய்து படித்தால்தான் சிறப்பாக சித்தியெய்த முடியும் என மாணவர்களும், பெற்றோர்களும் நினைக்கின்றார்கள்.
இது தவறான விடயமாகும். மாணவர்கள் தினமும் பாடசாலைக்கு வந்து ஆசிரியர்கள் கற்பிப்பதை வகுப்பிலிருந்து கவனமாகப் படித்தால் திறமையாகச் சித்திபெறலாம்.
சில மாணவர்கள் (குறிப்பாக உயர்தர மாணவர்கள்) பாடசாலையை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. டியூசன் வகுப்பையே முழுமையாக நம்பி இருப்பதால் இம்மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். பெரும்பாலான மாணவர்கள் டியூசன் கல்வியை நம்பி தங்களுடைய தேசியப் பரீட்சைகளில் எப்படியாவது சித்தி பெற்றுவிட வேண்டும் எண்ணி தங்களுடைய உடல், உள தேவைகளையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு (உணவை கூட) ஏட்டுக் கல்வியை நம்பி தங்களுடைய வாழ்க்கையை இழந்து விடுகின்றார்கள்.
விளையாட்டு, ஓய்வு, பொழுதுபோக்கு, நித்திரை, சமய சம்பிரதாயங்கள் போன்றவற்றில் எல்லாம் ஈடுபடுவது மிகக்குறைவு. இதற்கெல்லாம் இலங்கையின் பரீட்சை மையக் கல்வியும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது.
மாணவர்களுக்கு உளநள நிலையங்களைக் கொ ண்டு ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தத்துடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
குடும்ப வறுமை, பிரச்சினைகள், வாழும் லயத்து சூழல், பெற்றார் வெளிநாட்டில் இருத்தல், பெற்ேறார் பிரிந்து வாழ்தல், பிள்ளைகள் விடுதியில் தங்கிப்ப டித்தல், பிள்ளைகளின் உடல் உளத் தேவைகள் கவனிக்கப்படாமை அல்லது புறக்கணிக்கப்படல், பாடசா லையில் ஆசிரியர்களின் கவனிப்பின்மை, ஆசிரியர் கள், பெற்றார்களின் அணுகுமுறை, பெற்ேறார்களின் அன்பு, பாசம், அரவணைப்பு, பாதுகாப்பு கிடைக்காமை, அதிகமான வீட்டு வேலைகள் அதாவது அனைத்து பாடங்களிலும் பாட ஆசிரியர்கள் வீட்டில் பாடங்களை செய்து கொண்டு வரும்படி அடிக்கடி கூறுவதால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வீட்டு வேலைகளை முடிக்காத மாணவர்கள் பாடசாலைக்கு வருவதற்கு பயந்து ஏதாவது காரணங்களைக் கூறி வீட்டிலேயே இருப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இவை அனைத்தும் மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் விடயங்களாகும்.
இன்றைய நாகரிக வளர்ச்சியில் முழ்கிப் போகும் சமூக கலாசாரங்கள், பண்புகள், பழக்கவழக்கங்கள், மனித விழுமியப் பண்புகள், மனித விழுமியங்கள் என்ற போர்வையில் மாறிக்கொண்டிருக்கும் போது இச்சூழ்நிலையில் மாணவர் சமூகமும் மாறிக்கொண்டிருப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
இக்கலாசாரம் தொடருமானால் பல பிரச்சினைகளை யும், பாதிப்புக்களையும், ஆபத்துக்களையும் மாணவர் சமூகம் எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை.
சில மாணவர்களுக்கு சுயநம்பிக்கை, கட்டுப்பாடு, ஒழுக்கம், சுயமதிப்பீடு, கலாசாரம் போன்றன மாண வர் மத்தியில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
இதற்கான காரணங்களை தேடிப்பார்த்தால் பல விடயங்கள் தெளிவாகின்றன. அதாவது, மாணவர்கள் கைத்தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுதல் தேவையற்ற விடயங்களுக்கு கைத்தொலை பேசியை பயன்படுத்தல் என நேரத்தை வீணடிக்கின்றனர். பேஸ்புக் பாவனையால் சீரழிந்த மாணவர் சமூகமே அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு கணனி, இணையத்தள வசதிகள், ஸ்மார்ட் போன்களை வாங்கி கொடுக்கும்போது அவர்களுடைய பாவனை முறையை அவதானிக்க வேண்டும். கணனியை வீட் டில் பொதுவான இடத்தில் வைக்க வேண்டும். என்னத் தான் தங்களுடைய பிள்ளைககளாயினும் அவர்களுடைய நடத்தைகளை கண்கானிக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமான பாசமோ, அளவுக்கதிகமாக செலவுக்கு காசை கொடுப்பதையோ பெற்றோர்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகளுடைய நண்பர்களை இனங்காண வேண்டும்.
பிள்ளைகள் கேட்பதையெல்லாம் உடனுக்குடன் வாங்கிக் கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகளின் உடைகள் குறிப்பாக பெண்பிள்ளைகளின் உடைகளில் பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு தியானப் பயிற்சி, யோகா, உடற்ப யிற்சி என்பவற்றை சொல்லிக் கொடுப்பதற்கு ஏற்பாடு களை செய்ய வேண்டும்.
ஆசிரியர்களுக்கு மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு பாரிய பொறுப்பும் கடமையும் காணப்படுகின்றது. எனவே ஆசிரியர்கள் முன்மாதிரியாக நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பாடசாலையில் இணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலதிக வகுப்புக்களை பாடசாலையிலேயே நடத்துவதற்கு ஏற்பாடுகளை பாடசாலை நிர்வாகம் செய்ய வேண்டும்.
சாரணியம், கெடட், கூடைப்பந்தாட்டம், கிரிக்கெட், செஸ், கரப்பந்தாட்ட, வலைப்பந்தாட்டம், பெட்மிட் டன், கெரம், நூலாக்க குழு, முதலுதவிக் குழு, சுகாதா ரக் குழு, சுற்றாடல், இளம் கண்டுப்பிடிப்பாளர், இசைக்குழு, விளையாட்டுக் குழு, நலன்புரிக்குழு, நடனக்குழு போன்றவற்றை பாடசாலைகளில் ஏற்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க முயற்சிக்கவேண் டும்.
மாணவர்களுடைய திறமைகளையும், திறன்களை யும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இனங்கண்டு அதன்படி அவர்களை வழிநடத்தவேண்டும்.
நன்றி வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...