Headlines News :
முகப்பு » » பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 10 பேர் உயிரிழப்பு

பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 10 பேர் உயிரிழப்பு


பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய கல்கந்த பகுதியில் வீடொன்றின் மீது, மற்றுமொரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிககப்படுவதுடன், ஹெகொட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


மேலும், பஹலகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இன்னுமொரு பெண்ணும், பதுளை மகியங்கனை வீதியின், சிறிகெத்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வேவல்ஹிண்ண ரில்பொல மெதகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் சில வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த அனர்த்தத்தில் பலர் காணாமற்போயுள்ளதாக குறிப்பிடும், பதுளை பொலிஸார் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates