Headlines News :
முகப்பு » , » கண்டிச்சீமையிலே' கோப்பிக்கால வரலாறு 1823 - 1893

கண்டிச்சீமையிலே' கோப்பிக்கால வரலாறு 1823 - 1893


இரா. சடகோபனின் ‘கண்டிச்சீமையிலே’ கோப்பிக்கால வரலாற்று நூல் வெளிவந்துள்ளது. 1820களில் தமிழ் நாட்டின் பல கிராமங்களில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக இலட்சக்கணக்காக கூலிகள் சுமார் 130 மைல் தூரம் கால்நடையாகவே கண்டியை சென்றடைந்த இம்மக்கள் சென்ற வழியிலும், கண்டிச்சீமையிலும், சொல்லொணாத் துயரங்களை அனு பவித்து இலட்சக்கணக்கில் செத்து மடிந்து இந்நாட்டின் மலைச்சாரல்களில் மண்ணோடு மண்ணாகி கோப்பிச் செடிகளுக் கடியில் புதைந்து போன கண்ணீர்க் கதையைக் கூறுகிறது இந்நூல்.

அக்காலத்தில் (1823-1893) இயற்கை மரணங்களுக்கு அப்பால், வயிற்றோட்டம், பசி, பட்டினி, கொடிய மிருகங்கள் மற்றும் பாம்புக்கடி கடுங்குளிர் போன்றவற்றுக்கு சுமார் இரண்டு இலட்சம் பேர் பழியாகியதாக வரலாற்றாசிரியர் ஐ. எச். வண்டன் டிரைசன் (யி.சி. Vதினிளிரினி ளிஞியிஷிஷிலினி) கூறுகிறார்.

இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைத்து கஷ்டப்பட்டு உருவாக்கிய இம்மக்கள் கூட்டத்தினர் இன்றுவரை இந்நாட்டின் மக்களும், மக்கள் தலைவர்களும் “நன்றி” என்ற அந்த மூன்றெழுத்து வார்த்தையைக்கூட மனமுவந்து கூறியதில்லை. வெள்ளைக்காரன் கட்டிய சிறிய இருட்டறைகளான லயக் காம்பராக்களிலேயே இன்றும் அவர்கள் கூனிக்குறுகி வாழ்ந்து வருகின்றார்கள்.

அவர்களின் இந்த அவல வரலாற்றைச் சித்தரிக்கும் ‘கண்டிச்சீமையிலே’ என்ற இந்த வரலாற்று ஆவணத்தை கட்டாயம் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் இந்தியத் தமிழனும் வாசித்து தெரிந்து கொள்ளக்கடமைப்பட்டுள்ளான்.

352பக்கங்களில் தி4 வடிவத்தில் 190 வரலாற்றுக்கால படங்களை உள்ளடக்கி எல்லாப் பக்கங்களும் 2 வர்ணங்களில் மின்னும் காகிதத்தில் அச்சுப்பதிக்கப்பட்டுள்ள துன்பியல் காவியமான இந்நூலின் விலை ரூ 1800/= ஆகும். R.Shadagopan 152/1 Hulfsdrop street, Colombo-12 இந்நூலைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இந்நூலின் வெளியீட்டு விழா விரைவில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. மின்னஞ்சல் shadagopan@hotmail.com தொ.பே 0777679231.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates