காலம் 18 நவம்பர் 20017 (சனி)
மாலை 4 மணி – 8 மணி வரை
இடம் - Trinity Centre , East Avenue,
Eastham, London, E12 6SG
(Near the Eastham Station)
* அறிந்தவர்களும் அறியாதவையும்
(இலங்கையில் குறிப்பிடத்தக்க வெவ்வேறு துறைகளில், செல்வாக்கை செலுத்திய முக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இலங்கையின் காலனித்துவ கால வரலாற்றுக் குறிப்புகளின் அடியே தமிழில் வெளிவரும் முக்கிய நூல் இது . இதுவரை கிடைத்த ஆதாரங்களை உறுதிப்படுத்த பெரும் உழைப்பை செலவிட்டு, மேலும் புதிய தகவல்களுடன் பதிப்பிக்கப்பட்ட நூல் இது )
உரை. பா. நடேசன், மு. நித்தியானந்தன்
*1915 : கண்டிக் கலவரம்
( இலங்கையின் வரலாற்றை நுணுக்கமாக ஆராய்ந்து , பௌத்த – சிங்கள தேசியவாதம் இனவாதமாக எப்படி இலங்கையில் வேரூண்டியுள்ளது , அது எவ்வாறு வளர்ந்து நிற்கிறது என்பதை ஆதாரங்களுடன் எழுதி வருபவர் சரவணன். இலங்கையின் முதலாவது இனக்கலவரமான கண்டிக் கலவரத்தின் நூற்றாண்டு நினைவாக (1915-2015) தினக்குரல் பத்திரிகையில் 58 வாரங்களாக வெளிவந்த தொடர்கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.)
உரை - பீ.ஏ.காதர், எஸ். வேலு
அழைப்பு- தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்
தொடர்புகளுக்கு 07817262980,
தோழமையுடன் , அனைவரையும் அழைக்கிறோம்
ஏற்புரை- என். சரவணன் ( நூலாசிரியர், நோர்வே)
வழிப்படுத்தல் - எம். பௌசர்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...