Headlines News :
முகப்பு » , » “ஜெனீவா யோசனையை நிறைவேற்ற மாட்டோம்!” – இலங்கை அரசு

“ஜெனீவா யோசனையை நிறைவேற்ற மாட்டோம்!” – இலங்கை அரசு


ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்திருக்கும் அறிவித்தலில் “மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டிருந்த யோசனைகளை நடைமுறைப்படுத்தப் போவதில்லை” என்று முதற்தடவையாக அறிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் பிரதான யோசனையாக சர்வதேச நீதிமன்றம் தொடர்பிலான ரோம பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடவேண்டும் என்றும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்களையும், மனித உரிமைகள் காரியலாயத்தையும்,  உள்ளகப் பொறிமுறைகளையும் உருவாக்கும்படி அறிவித்திருந்தது.

ஆனால் அதனை தூக்கியெறிந்துள்ளது என்று பிரபல சிங்கள நாளிதழான “திவய்ன” பத்திரிகையின் இன்றைய ஞாயிறு இதழின் முதற் பக்கத்தில் செய்தியாகவும் வெளியிட்டுள்ளது. தமிழ் தரப்பை இன்னமும் இந்த செய்தி போதியளவு சென்றடையவில்லை என்று தெரிவிக்கிறது.

யுத்தம் நடந்து முடிந்து 8 வருடங்களாக இலங்கை அரசு குற்றங்களில் இருந்து தப்புவதற்காக நுட்பமாக பல்வேறு ராஜதந்திர திட்டங்களை மேற்கொண்டிருந்தது. இலங்கை அரசி அந்த வகையில் பெருமளவு வெற்றியை எட்டியிருக்கிறது என்றே கூற வேண்டும்.

இதற்கான ராஜதந்திர நகர்வுகளை “நல்லாட்சி அரசாங்கம்” மிகவும் கைதேர்ந்த அமைச்சரான மங்கள சமரவீரவை பயன்படுத்தி பெருமளவு வெற்றியீட்டியிருந்தது.

ஒவ்வொரு வருடமும் மனித உரிமைகள் கவுன்சிலில் சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிப்பது, இழுத்தடிக்கப்படும் காலத்தில் சம்பந்தப்பட்டவர்களை சரிகட்டுவது.

தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், மனித உரிமைகளை பாதுகாப்பதாகவும், இராணுவங்களை வெளியேற்றி காணிகளை மேலே ஒப்படைப்பதாகவும், அரசியல் தீர்வுக்கான வழிகளை மேற்கொண்டு வருவதாகவும் பாசாங்கு செய்து வந்தது அரசாங்கம்.

இதனை நம்பி ஜெனிவாவைல் பல நாடுகள் இலங்கை தொடர்பில் நிகில்வுப் போக்கைக் கையாண்டு வந்தன. கால அவகாசம் கேட்ட போதெல்லாம் கொடுத்து இந்த 8 ஆண்டுகளையும் இழுத்தடிக்க வழிவிட்டது.

அவற்றைக் கட்டி GSP பிளஸ் போன்ற தடைகளை நீக்குவதிலும் அரசாங்கம் வெற்றி பெற்றது. இந்த 8 வருட காலத்திற்குள் நீதி கோரிய தமிழ் மக்களின் ஆத்திரத்தையும் ஓர்மத்தின் அளவையும் குறைக்கப் பயன்படுத்தியது. அது போல சர்வதேச நாடுகள் வேறு பிரச்சினைகளில் தமது கவனத்தை திசைதிருப்பி இலங்கை பிரச்சினையின் மீதான கவனத்தின் அளவை குறைத்துக் கொண்டு வரவும் நேர்ந்தது.

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவின் ராஜதந்திர அணுகுமுறைகள் இந்த ஒன்றரை வருடத்தில் பெரும் வெற்றியை அடைந்திருக்கிறது என்றே கூறவேண்டும். இப்போது மங்கள சமரவீரவை அந்த அமைச்சுப் பதவிலிருந்து மாற்றி ரவி கருணாநாயக்கவுக்கு கொடுத்ததன் பின்னணியில் இந்த விடயங்களும் சமபந்தப்பட்டிருக்கின்றன என்றே கருத முடிகிறது.

வடக்கில் மாகாணசபை சர்ச்சைக்குள் தமது முழுக் கவனத்தையும் குவித்திருக்கும் தமிழ் அரசியல் தலைமைகளின் கவனத்துக்கும், தமிழ் ஊடகங்களின் கவனத்துக்கும் இது செல்வது மிகவும் அவசியம்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates