Headlines News :
முகப்பு » » "ஞானசார தேரரும் சிவாஜிலிங்கமும் மச்சான்மார்" சிங்களப் பத்திரிகைக்கு மனோ கணேசன்!

"ஞானசார தேரரும் சிவாஜிலிங்கமும் மச்சான்மார்" சிங்களப் பத்திரிகைக்கு மனோ கணேசன்!


"கலகொட எத்தே ஞானசார தேரரும் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமும் மச்சான்மார் போல" என்றும் அவர்கள் இருவரும் ஒரே பணியைத்தான் மேற்கொள்கிறார்கள் என்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் “ரிவிர”வுக்கு (சிங்கள நாளிதழின் முற் பக்கத்தில்) தெரிவித்துள்ளார்.

நாளை காலை (மே22) இலங்கையில் வெளிவரவிருக்கும் "ரிவிர" பத்திரிகைக்கே இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

வடக்கில் சிவாஜிலிங்கம் இனவாதத்துடன் செயற்ப்பட்டுக்கொண்டு வேறொரு அரசியலை முன்னெடுத்துக் கொண்டு போவதாகவும் அதேவேளை தெற்கில் கலகொட எத்தே ஞானசார தேரர் இனவாதத்தைத் தூண்டிக் கொண்டு இன்னொரு அரசியலை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த இருவரும் இரு மச்சான்மார்களைப் போல பாதிரமாற்றி வருவதாகவும் , சிவாஜிலிங்கத்தை நோக்கும் சகல மக்களும் கலகொட எத்தே ஞானசார தேரரையும் அதே விதத்தில் பார்ப்பது அவசியம் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

(சிங்களத்தில் இருந்ததை எந்த மாற்றமும் இன்றி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates