Headlines News :
முகப்பு » » மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட வேண்டியது அவசியம் - ஏ. லோரன்ஸ்

மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட வேண்டியது அவசியம் - ஏ. லோரன்ஸ்

ம.ம.முன்னணி செயலாளர் நாயகம் கோரிக்கை
(கொத்மலை நிருபர்)

மலையகத்தில் வறுமை நிலை அதிக மாகக் காணப்படுகின்றது. அதனைவிட அரசியல் வறுமையும் அதிகார வறுமையும் அதிகமாகக் காணப்படுகின்றது. இந்நி லையில் அரசியல் மற்றும் அதிகார வறுமை நிலை களையப்பட்டு மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படுதல் வேண்டும் என்று மலையக மக்கள் முன்ன ணியின் செயலாளர் நாயகம் ஏ. லோரன்ஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்கள் இந்நாட்டில் மிக நீண்ட வரலாற்றினைக் கொண்ட ஒரு சமூ கமாக இருக்கின்றனர். எனினும் இம் மக் கள் சோக வரலாற்றுக்கு சொந்தக்காரர்க ளாகவே இருந்து வருகின்றனர். இன்னும் பல அபிவிருத்தி இலக்குகளையும் இம் மக்கள் அடைந்து கொள்ள வேண்டிய ஒரு தேவையும் காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடமைப்பிற்கென காணி வழங்கப்பட வேண்டும் என்பதும் தனித்தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப் பட வேண்டும் என்பதும் இன்று கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. எனினும் இதனை துரிதப்படுத்தி முடித்துக் கொள்வது மலையக அரசியல்வாதிகளினதும் சிவில் அமைப்பு களினதும் பொறுப்பாக உள்ளது. ஒருவர் மீது ஒருவர் குறைகூறிக் கொண்டு இருப் போமானால் சாதக விளைவுகள் ஏற்படாது. அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் குரல் கொடுப்பதன் ஊடாகவே சாதகமான விளைவுகள் ஏற்படும் என்பதை மறந்து செயற்படுதல் கூடாது. 

பெருந்தோட்டங்களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக இருக்கின்றது. கம்பனிகள் தமக்கு நஷ்டம் ஏற்படு வதாக பஞ்சப்பாட்டு பாடி வருகின்றன. கம்பனிகள் சமர்ப்பிக்கும் புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை தொடர்பிலும் சந்தேகம் மேலோங்கிக் காணப்படுகின்றது. இந்நிலையில் ஒரு மாற்று முறைமைக்குச் செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது. மாற்று முறைமையின் அடிப்படையில் சிற்றுடமையாளர்கள் என்கின்ற வகையில் இருபது பேர்ச்சஸ் காணியாவது வழங்கப்பட்டு நிலவுடமையாளர்களாக மலையக சமூகத்தினர் மாற்றப்படுதல் வேண்டும். நாட்டில் ஏனைய சமூகத்தினருக்கு நிலவு டமை காணப்படுகின்றது. இந்நிலையில் மலையக சமூகத்தினர் நிலவுடமையாளர்களாக இல்லாதிருப்பது வருந்தத்தக்க விடயமாகும். இதேவேளை மலையக மக்களின் வீடமைப்பிற்காக இப்போது ஏழு பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இதனை இன்னும் அதிகரித்துக் கொள்ளவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். மலையகத் தில் வறுமை நிலை அதிகமாகக் காணப்படு கின்றது என்பதை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனைப் போன்றே அரசியல் மற்றும் அதிகாரம் என்பவற்றிலும் மலைய கத்தில் வறுமை நிலை காணப்படுகின்றது. நாம் எமது அரசியல் உரிமைகளை சரிவரப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். அதிகாரங்களையும் எமக்கு ரியவாறு பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பம் இதுவேயாகும். இனப் பிரச்சினை என்பது இந்த நாட்டில் நான்கு சமூகங் களையும் சார்ந்த ஒரு பிரச்சினையாகும். வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளை ஏனைய இனங்களுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்த ளித்து அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க முன்வருதல் வேண்டும். மலையக மக்கள் தொடர்ச்சியாக பல துறைகளிலும் புறக்க ணிக்கப்பட்டு வந்த வரலாறே காணப்படு கின்றது. இந்த வரலாறு இனியும் தொடர ஒரு போதும் இடமளிக்கலாகாது. ஆட்சி யில் இருந்த கடந்த கால அரசாங்கங்கள் மலையக மக்களின் பிரச்சினைகளைக் கண் டுகொள்ளவில்லை. அவற்றுக்கு உரியவாறு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முனையவும் இல்லை.

மலையக மக்களுக்கு அரசியல் மற்றும் அதிகார வறுமை இருப்பதனை அங்கீகரிக்க வேண்டும். இதனைத் தீர்த்து வைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு அழுத்தம் கொடுக்கப்படுதலும் வேண்டும். அரசியல் உரிமைகள் முதலாவதாக கரு தப்பட வேண்டும், அபிவிருத்தி என்பது இதற்கு அடுத்ததாக இடம்பெறுதல் வேண் டும் என்றார்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates