Headlines News :
முகப்பு » » உழைப்பையும் உதிரத்தையும் தாரைவார்க்கும் மலையகப் பெண்கள் - கௌஷிக்

உழைப்பையும் உதிரத்தையும் தாரைவார்க்கும் மலையகப் பெண்கள் - கௌஷிக்

எதிர்வரும்   ஆம் திகதி  மகளிர் தினம்

மார்ச் 8 மகளிர் தினம் என்­பது எல்­லோ­ருக்கும் தெரியும். எதற்­காக இந்த நாளைத் தேர்ந்­தெ­டுத்­தார்கள் என்­ப­தற்­கான கார­ணத்தை ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொ­ரு­வி­த­மாகக் கூறு­வார்கள். நவீன மனி­தனின் அசைக்­க­மு­டி­யாத ஆதாரம் என்று நம்­பப்­படும் இணை­யத்தில் மார்ச் 8 க்கு நூறு­வீ­த­மான வர­லா­றுகள் சொல்­லப்­ப­டு­கின்­றன. இவற்றில் எது சரி என்று தெரி­யா­த­தால்தான் மகளிர் தினத்தைக் கொண்­டாட பொருத்தமில்லாத வர்கள் எல்லாம் அதனைக் கொண்­டா­டு­கி­றார்கள். இலங்­கை­யிலும் கூட அனைத்துத் தரப்­பி­னரும் மார்ச் 8 ஐ கோலா­க­ல­மாகக் கொண்­டா­டு­வதைப் பார்க்­கிறோம்.

 இன, மத வேறு­பா­டின்றி எல்­லோ­ருமே எதற்­காகக் கொண்­டா­டு­கிறோம் என்­பதை அறி­யாமல் கொண்­டா­டு­கி­றார்கள். தொழி­லாளர் உரிமை தின­மான மே தினத்தை எவ்­வாறு முத­லா­ளித்­துவ கட்­சி­களும் சக்­தி­களும் தொழிற்­சங்­கங்­களும் குடியும் கூத்­து­மாகக் கொண்­டா­டு­கி­றார்­களோ அவ்­வாறே மகளிர் தினமும் மாறி விட்­டுள்­ளதைக் காணலாம்.

உண்­மை­யி­லேயே மகளிர் தினத்தைக் கொண்­டாடும் அரு­கதை மலை­யகப் பெண்­க­ளுக்கே உண்டு. தங்கள் உதி­ரத்­தையும், உழைப்­பையும் தந்து நாட்­டுக்­காக தங்­க­ளு­யிரைத் தாரை வார்க்கும் ஒரு கூட்­ட­மாக மலை­யக மகளிர் விளங்­கு­கி­றார்கள். மகளிர் தினத்தின் மகி­மையைத் தெரிந்து உணர்ந்து கொள்­ளும்­போது இவர்­களின் போராட்டம் இன்­னமும் அர்த்­த­முள்­ள­தாக மாற இட­முண்டு.

மார்ச் 8 இன் தாற்­ப­ரி­யத்தை இவர்­க­ளுக்கு எடுத்துக் கூறும் நிலையில் எமது தலை­மைகள் இருக்­கி­றதா என்­பதே பெரும் கேள்விக் குறி­யாகும். ஆண்­டு­தோறும் தொழி­லாளர் தினத்தைக் கொண்­டா­டு­கி­றார்கள். அத்­தி­னத்தின் வர­லாறு தலை­மை­க­ளுக்குத் தெரி­யுமா? அடுத்து வரும் ஜூன் மாதம் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு பலன் தரும் மாத­மாகும். சந்­தா­வுக்கு ஆள் பிடிக்கும் மாதம் ஜூனாகும்.

ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்கள் தான் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு அறு­வடை மாதங்கள். எனவே தத்­த­மது பலத்தைக் காட்டி தொழி­லா­ளர்­களை கவர்ந்­தி­ழுக்க மே தின கூட்­டத்தை பயன்­ப­டுத்திக் கொள்­வார்கள். அதே­போல்தான் இந்த மகளிர் தினமும் மாறி­விட்­டி­ருக்­கி­றது. ஏமாறும் அந்தக் காலம் மலை­யே­றி­விட்­டது. இன்று மலை­யகப் பெண்­களும் ஆண்­க­ளுக்கு நிக­ராக அறிவில் மேலோங்கி இருக்­கி­றார்கள். எனவே அவர்­களை ஓரி­டத்தில் ஒன்று சேர்த்து தங்கள் வாக்கு வேட்­டையை நடத்­தி­விடும் ஒரு வாய்ப்­பா­கவே தொழிற்­சங்­கங்­களும் அர­சியல் கட்­சி­களும் இந்த நாளை பயன்­ப­டுத்திக் கொள்­கின்­றன. கடந்த கால மகளிர் தினங்­களின் போது நடந்த கூத்­து­க­ளையும் கும்­மா­ளங்­க­ளையும் மீட்­டுப்­பார்ப்­பது பொருத்­த­மாக இருக்கும்.

ஆணுக்குப் பெண் சரி­நிகர் சமானம் என்­பதை உணர்த்­தத்தான் சிவனும் சக்­தியும் ஓரு­ட­லாக காட்­சி­ய­ளிப்­ப­தாகக் கூறு­வார்கள். மேலும் கல்வி, நிதி, பாது­காப்­புக்குப் பொறுப்­பாக சரஸ்­வதி, இலட்­சுமி, சக்தி என பெண் தெய்­வங்­களை உரு­வ­கப்­ப­டுத்­தி­னார்கள். பெண் தொழி­லா­ளர்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட எமது சமூ­கத்தில் எத்­த­னைபேர் தொழிற்­சங்­கங்­க­ளிலோ அல்­லது அர­சியல் கட்­சி­க­ளிலோ பொறுப்பு வகிக்­கி­றார்கள். ஓரி­ரு­வரை சுட்­டிக்­காட்­டி­னாலும் அவர்கள் தலை­வர்­களின் சொந்­தக்­கா­ரர்­க­ளா­கவே இருப்­பதைக் காணலாம்.  

பெண்­ண­டிமை குறித்துப் பாடிய பார­தியும் பார­தி­தா­சனும் பிறந்த தமிழ் நாட்­டிலும் பெண் தலை­மைக்கு இட­மில்லை. அத்தி பூத்­தாற்போல் ஒரு ஜெய­ல­லிதா இருந்தார். அவ­ரது சரித்­தி­ரமும் முடிந்­து­விட்­டது. மலை­ய­கத்தில் மகளிர் தினம் எப்­படி கொண்­டா­டப்­ப­டு­கி­றது? பெண்­க­ளுக்­கென பல்­வேறு போட்­டிகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. சமையல் போட்டி, கோலப்­போட்டி, தேங்காய் துருவும் போட்டி, அழகு ராணிப் போட்டி, மெல்­லிசைப் பாடல் போட்டி மற்றும் குத்­தாட்டப் போட்டி என பெண்­க­ளுக்­கெ­ன்று­தொன்று தொட்டு பிரித்­தொ­துக்­கப்­பட்ட செயல்­க­ளையே இந்த நவீன காலத்­திலும் செயற்­ப­டுத்­து­கின்­றனர்.  

நாட­கப்­போட்டி, நட­னப்­போட்டி, கிரிக்கட் போட்டி, கரப்­பந்­தாட்­டப்­போட்டி, சைக்கிள் ஓட்­டப்­போட்டி, மரதன் போட்டி போன்­ற­வற்றை ஒழுங்கு செய்தால் பெண்­களும் கலந்து கொள்­ள ­மாட்­டார்­களா? மக்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொண்டு பிர­தேச, மாகாண சபையில்

சொகுசு வாழ்க்கை நடத்திக் கொண்­டி­ருக்கும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு இது­போன்ற நிகழ்­வு­களை ஒழுங்கு செய்­யும்­படி தலை­மைகள் வேலை வாங்க முடி­யாதா? பிர­தேச செய­ல­கங்­களில் அபி­வி­ருத்தி வேலைகள் என்ற பெயரில் நிதி­களைப் பெற போராட்டம் நடத்­து­வது மட்டும் தான் மக்கள் பிர­தி­நி­தி­களின் வேலையா? நாற்­கா­லி­க­ளையும் கூரைத்­த­க­டு­க­ளையும், தண்ணீர்க் குழாய்­க­ளையும் தங்கள் தோட்டக் கமிட்டித் தலை­வர்­க­ளுக்கு வழங்கும் நிகழ்­வு­களை படம் பிடித்து ஊட­கங்­களில் வெளி­வரச் செய்­வது மட்­டுமே தங்கள் தொண்­டாக அவர்­களை நினைத்துக் கொள்ள விடக்­கூ­டாது. தலை­மை­களின் செலவில் செல்­வாக்கைத் தேடிக் கொண்­ட­வர்கள் தலைமை நிலைக்கு பய­னுள்­ள­வற்றை செய்ய வேண்டும்.

மலை­யகப் பெண்­களைக் காட்டி தொண்டு நிறு­வ­னங்­களில் இருந்து பணம் பண்ணும் கோஷ்­டி­களும் இருக்­கின்­றன. கர­காட்டம், காவ­டி­யாட்டம், காமன் கூத்து போன்­ற­வை­களை ஆட­வைத்து அவற்றை படம் பிடித்து வீடியோ செய்து வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி இலட்­சக்­க­ணக்கில் நிதி பெற்று சுக­போகம் அனு­ப­விப்­ப­வர்­களும் இருக்­கி­றார்கள். தலை­ந­க­ரங்­களில் நட்­சத்­திர ஹோட்­டல்­களில் உழைக்கும் வர்க்­கத்­தி­ன­ருக்­காக மகளிர் தினத்தைக் கொண்­டாடி மகிழும் கூட்­டத்­திற்கும் பஞ்­ச­மில்லை.

மகளிர் தின விழாக்­க­ளுக்கு கூட்­டத்தை அழைத்து வர வாக­னங்கள் ஏற்­பாடு செய்­வது, பக­லு­ணவு வழங்­கு­வது, பணப்­பட்­டு­வாடா செய்­வது என பல்­வேறு குழுக்­களின் திரு­வி­ளை­யா­டல்­க­ளுக்கும் குறைச்­ச­லில்லை. முதல் நாளே சமைத்த உணவு வழங்­கப்­பட்டு, பழு­தாகி வீதியில் வீசி­யெ­றியும் சாட்­சி­க­ளையும் காணாலாம். வீடு­களில் சாப்­பாட்டைக் காணா­த­வர்­களைப் போல எண்ணி அங்­கு­மிங்கும் அலை­ய­வி­டு­வது, சாப்­பிட வச­தி­யான இட­மில்­லாமல் தெரு­வோ­ரங்­களில் கூட்டம் முடிந்து செல்­லும்­போது அமர்ந்து சாப்­பிட எண்­ணு­வது, குடிப்­ப­தற்கு தண்­ணிரே இல்­லாமல் அவ­தியில் தவிக்­க­வி­டு­வது, ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­க­ளுக்கு கழி­வறை வச­தி­களை ஏற்­பாடு செய்­யாமல் விடு­வது என அத்­தனை கன்­றா­வி­க­ளையும் இந்த ஆண்டு விழாக்­க­ளிலும் நாம் காணலாம்.

மேடையில் கலை­நி­கழ்ச்­சி­களில் கலந்து கொள்ள தலை­ந­க­ரங்­களில் இருந்து இலட்­சக்­க­ணக்கில் பணத்தை வாரி­யி­றைத்து கலை­ஞர்­களை அழைத்து வரு­வார்கள். சினிமா நட்­சத்­தி­ரங்­க­ளைப்போல் அவர்கள் தங்கள் திற­மையை வெளிக்­காட்­டு­வார்கள். அதே மேடையில் எமது தோட்­டங்­களின் பெண்­களின் பயிற்­சி­யில்­லாத நிகழ்ச்­சி­க­ளையும் இடம்­பெறச் செய்­வார்கள்.

இரண்­டையும் ஒப்­பிட்டு எமது பெண்­களின் திற­மை­யினைக் கேலியும், கிண்­ட­லு­மாக மேடை­யி­லேயே பேசு­வார்கள். பெண்­களின் பிர­தி­நி­திகள் என ஒரு­சி­லரை சினிமா நடி­கை­களைப் போன்ற மேக்­கப்பில் கட்­அ­வுட்­களை சந்­தி­களில் நாட்டி வைத்து மகிழ்­வார்கள். வருடக் கணக்கில் அந்த கட்­ட­வுட்கள் காட்­சி­ய­ளித்துக் கொண்­டி­ருக்கும். ஸ்ரீபாத யாத்­திரை செல்லும் முழு நாட்டு மக்­களும் தொழி­லாளப் பெண்கள் இவ்­வ­ளவு சொகு­சாகவா வாழ்­கி­றார்கள் என பொறா­மைப்­படும் அளவு இவர்­களின் கூத்து அமைந்­து­விடும்.

ரஷ்­யாவில் ஜார் மன்­னனின் கொடுங்கோல் ஆட்­சிக்­கெ­தி­ராக புரட்சி வெடித்­தமை சரித்­திரப் பிர­சித்தி பெற்­றது. ஆண்­க­ளுக்கு நிக­ராக பெண்­களும் இந்த புரட்­சியில் பங்­கெ­டுத்­தனர். ரஷ்­யாவில் பெட்­ரோ­கிறாட் நகரில் பெண் தொழி­லா­ளர்கள் ஜார் மன்­ன­னுக்கு எதி­ரான புரட்­சியைத் தொடங்­கிய நாள் 1917 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திக­தி­யாகும். இந்த நாளை மகளிர் தினத்­துக்­கான நிரந்­தரத் திக­தி­யாக 1921 ஆம் ஆண்டில் நடந்த உலக கம்­யூனிஸ்ட் பெண்கள் மாநாடு அறி­வித்­தது. அதில் இருந்து மகளிர் தினம் மார்ச் 8 இல் கொண்­டா­டப்­ப­டு­கி­றது. இதற்கு முன்னால் 1908 மே 3 ஆம் நாளை மகளிர் தின­மாக சிக்­கா­கோவில் சோஷலிஸ்ட் கட்­சியின் பெண்கள் பிரிவு கடைப்­பி­டித்­தது எனவும் இதுவே முதல் முறை­யாகக் கடைப்­பி­டிக்­கப்­பட்ட மகளிர் தினம் என்றும் கூறப்­ப­டு­கி­றது.

சோவி­யத்தில் புரட்சி நடந்து அமைத்த சோஷ­லிஸ அரசில் பெண்­க­ளுக்­கான பல சீர்­தி­ருத்­தங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன. அப்­போது லெனின் “பெண்­களைத் தாழ்­வாக நடத்தும் இழி­வான சட்­டங்கள், நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்றை நொறுக்கித் தள்­ளி­விட்டோம். கட்­டடம் கட்­டு­வ­தற்­காக மனையைச் சுத்­தப்­ப­டுத்தி இருக்­கி­றோமே தவிர இன்னும் கட்­ட­டத்தைக் கட்­டி­வி­ட­வில்லை” என்றார். இங்கு சட்­டங்கள், நிறு­வ­னங்கள் நொறுக்­கப்­ப­ட­வில்லை. மனையும் சுத்­தப்­ப­ட­வில்லை. எது களம் என்­பதே நிர்­ண­யிக்­கப்­ப­ட­வில்லை. அத்­த­கைய களத்தை உருவாக்குவதே மகளிர் தினத்தில் நாம் எடுக்கும் சபதமாக இருக்க வேண்டும்.

மலையகத்தில் ஜார் மன்னர்களும், ஹிட்லர்களும், இடியமீன்களும் இன்னமும் தங்கள் இராஜ்ஜியங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் கம்பனிகள் நிறுவன ரீதியில் சுரண்டலை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக மலையகத்தில் கற்றுத் தேர்ந்த பெண்கள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். தொழிற்சங்க அரசியல் தலைமைகளைக் கையேற்க வேண்டும். குறைந்தபட்சம் தோட்டக் கமிட்டித் தலைமை, கோயில் கமிட்டி தலைமைகளையாவது கையேற்க வேண்டும். முன்னுதாரணங்களாக பல தோழியர் மலையகத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மீனாட்சி நடேசய்யர் நல்ல ஓர் உதாரணமாகும். 2017 இல் இருந்து சபதம் மேற்கொள்ள வேண்டும். சோற்றுப்பார்சலுக்கும் சோடாப் போத்தலுக்கும் ஏமாறுபவர்கள் நாங்கள் அல்ல என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates