Headlines News :
முகப்பு » » தோட்டங்கள் காடாக மாறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை - என்னென்ஸி

தோட்டங்கள் காடாக மாறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை - என்னென்ஸி


பெரும்பாலான தோட்டங்கள் போதிய பராமரிப்பின்றி காடுகளாக மாறிவரு-வதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக பெருந்தோட்டங்களுக்கான கொழுந்து அறுவடை குறைந்துள்ளதுடன் தொழிலாளர்-களால் தோட்டங்களில் பணிபுரிய முடியாததொரு நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

சில காலங்களுக்கு முன்புவரை பெருந்தோட்டக்கம்பனிகள் பெருந்தோட்டங்-களை நல்லமுறையில் பராமரித்து வந்தன. அதேநேரம் அரசாங்க நிறுவனங்-களினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் கவனிப்பாரற்ற நிலையில் புல் வளர்ந்து காடுகளாகக் காட்சியளித்தன.

ஆனால், இன்று பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்-களும் ஒரே மாதிரியாக காடுகளாகக் காட்சியளிக்கின்றன. இது பெருந்தோட்டத் தொழிற்றுறை படிப்படியாக கைவிடப்படுகின்றதோ என்ற அச்சத்தை தொழிலா-ளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

முன்னொரு காலத்தில், அதாவது களைநாசினி (புற்களை அழிக்கும் இரசா-யனம்) அறிமுகமாவதற்கு முன்னர் முற்றுமுழுதாக தொழிலாளர்களைக் கொண்டே புற்கள் வெட்டி அகற்றப்பட்டன. தின சம்பளத்துக்காக மட்டுமன்றி கொந்தராத்து (கொந்தரப்பு) முறையிலும் புல்வெட்டுவதற்கு தொழிலாளர்கள் பயன்-படுத்தப்பட்டனர். அந்தக் காலத்தில் பெருந்தோட்டங்கள் சுத்தமாகவும் அழகாக மட்-டுமன்றி அதிகளவில் தேயிலைக் கொழுந்து அறுவடையைத் தரக்கூடியதாகவும் இருந்தன. அது வெள்ளைக்காரன் காலம் என்பர்.அத்துடன் கிருமிநாசினி பயன்படுத்-தப்படாத, இரசாயனம் கலக்காத தேயிலையை பெறக்கூடியதாக இருந்தது.

பின்னர் குறித்த காலப்பகுதியில் புற்களை அழிப்பதற்காகப் பல்வேறு வகை-யிலான இரசாயனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனால், பெருந்தோட்டங்கள் சுத்தமாக, புற்கள் வளராமல் இருந்தன. தொழிலா-ளர்கள் ஓரளவு பாதுகாப்புடன் வேலை செய்து வந்தனர்.

அத்துடன் பெருந்தோட்டப் பயிர்களுக்கு போடப்படும் உரங்கள் நேரடியாக பயிர்களுக்கே கிடைக்கக்கூடியனவாக இருந்தது. தேயிலை, இறப்பர், தென்னை போன்ற பயிர்களும் ஓரளவு செழிப்புடன் வளர்ந்தன.

இதனைத் தொடர்ந்து வந்த காலத்தில் பெருந்தோட்டங்களில் புற்களை ஒழிப்பதற்கு களைகொல்லி இரசாயனங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்-பட்டது.

அதேவேளை, இரசாயனங்கள் பயன்படுத்தாத தேயிலைச் செய்கையும் சில தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில்தான் தேயிலை, இறப்பர், தென்னந்தோட்டங்களில் அதிக-ளவு புற்கள் பெருகி காடாக மாறத்தொடங்கின. இதேவேளை புற்களை அகற்றுவ-தற்கு அதிக தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டியநிலை ஏற்பட்டதுடன் பெருந்தொகை பணத்தையும் பெருந்தோட்டக் கம்பனிகள் செலவிடவேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆனால், பெரும்பாலும் தோட்டக்கம்பனிகள் அவ்வாறு செய்-யவில்லை.

புற்களை அகற்றுவதற்கு அதிகளவிலான பணத்தை செலவு செய்ய முடி-யாத நிலையில் இருப்பதாகக்கூறி அப்படியே விட்டுவிட்டன.

இந்த நிலையில், புற்கள் அதிகளவில் வளர்ந்து, புதர்களாக மாறி, காடாகக் காட்சியளிக்கின்றன. அதுமட்டுமன்றி அவை தேயிலைச் செடிகளின் வளர்ச்சியை ஒடுக்கி தேயிலையையே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளன. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களில் மட்டுமின்றி நுவரெலியா மாவட்டத்திலும் கூட இந்த மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சில தோட்டங்களில் தேயிலையைவிட புற்களே உயரமாக வளர்ந்து காணப்படுகின்றன.

தேயிலை எது, புல் எதுவென்று கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகி-றது.இதனால், தேயிலை, இறப்பர் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டத் தொழிலையே நம்பியிருக்கும் இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வாதாரம் முற்-றாக அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது.

இதனைப் பற்றி பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்கள் பெரும் விசனம் தெரி-வித்து வருகின்றனர்.

இதனிடையே சில பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கத் தலைவர்களும் அரசியல்வாதிகளில் இன்னும் ஐந்து வருடகாலத்தில் பெருந்தோட்டத்துறை குறிப்-பாக தேயிலைச் செய்கை முற்றாக அழிந்து போய்விடுமென்று பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான பேச்சுக்கள் தேயிலையை மட்டுமே நம்பி-யிருக்கும் தொழிலாளர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரு-கின்றது.

தோட்டத் தொழிலாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகக் கூறிக்-கொண்டு அவர்களின் சந்தாப் பணத்தில் சுகபோகம் அனுபவித்து வந்ததுடன் வரு-வதுடன் மட்டுமல்லாமல் அவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்தில் அமர்ந்தி-ருக்கும் தலைவர்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு நடவ-டிக்கை எடுக்காமல் அச்சுறுத்தி வருவது மனிதாபிமான செயற்பாடாகத் தெரிய-வில்லை.

தோட்டங்களை சீர்செய்து தொழிலாளருக்கு நிரந்தர வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதுடன் தேயிலைத் தொழிற்துறையையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அதுபற்றி விமர்சனம் செய்து வரும் தலைவர்கள் தொழி-லாளருக்கு தலைமைத்துவத்தை கொடுக்க முடியாதென்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தேயிலைத் தொழிலை பாதுகாப்பதன் மூலமே அதனையே நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வாழமுடியும். வேறு தொழிலோ அல்லது பிற பயிர்ச்செய்கை-கான காணிவசதியோ இல்லாத நிலையில் தேயிலைத் தொழில் அழிவடைந்தால் தொழிலாளரின் நிலைமை என்னவாகும் என்பதை மனிதாபிமானத்துடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மறுபுறத்தில் தொழிற்சங்ப அரசியல் தலைவர்களை மட்டும் நம்பியிராமல் தொழிலாளர்கள் சுயமாக சிந்தித்துச் செயற்பட வேண்டியதொரு நிலைமையும் ஏற்பட்டுள்ளதையும் இது வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தேயிலைத் தொழிலைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்வதுடன் தமது முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டிய காலமும் வந்துள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தோட்டங்கள் சிறுத்தைகள், காட்டு எருமை மாடுகள், பாம்புகள், பன்றிகள் மற்றும் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் வாழும் இடங்களாக மாறுவதிலிருந்து மீட்டு, இலாபமீட்டும் தொழில்துறையாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates