Headlines News :
முகப்பு » » தொடரும் குளவித் தாக்குதலிலிருந்து தொழி-லாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இ.சதீஸ்

தொடரும் குளவித் தாக்குதலிலிருந்து தொழி-லாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இ.சதீஸ்


தோட்டத் தொழிலாளர்கள் மழை, வெயில்பாராமல் தங்களுடைய வருமானத்திற்காக ஒவ்வொரு நாளும் தொழில் செய்யும் இடத்தில் பல இடர்களை சந்தித்து வருகின்றனர்.

மலையக தோட்டங்களில் தொடர்ச்சியாக குளவி கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வரும் தொழிலாளர்கள் வைத்திய-சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்புவது மட்டு மின்றி வருமான ரீதியா கவும் பாதிக்கப் படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு தோட்ட

நிர்வாகத்தால் முறையான சலுகைகள் வழங்கப்படுவதில்லை.

மாறாக அன்றைய தினம் மாத்திரமே சம்பளத்தை வழங்கும் தோட்ட நிர்-வாகத் தினர், தொழிலாளர்கள் 2 அல்லது 3 நாட்கள் தொடர் ச்சியாக வைத்தியசா-லையில் தங்கி சிகிச்சை பெரும் பட்சத்தில் அவர்களுக்கான எந்த

சலுகைகளும் வழங்குவதில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்-கின்றனர்.

தேயிலை செடிகளுக்கிடையில் குளவி கள் கூடு கட்டியுள்ளதால், தொழிலா-ளர்கள் கொழுந்து பறிக்கும் பொழுது நிம்மதியற்ற நிலையில் அச்சத்தில் தொழில் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தோடு பல்வேறு நோய்க்குள்ளான தொழி லாளர்களும் தோட்ட வேலை செய்கின்றனர். இவர்களை குளவிகள் துரத்தும் போது தப்பித்து ஓட முடியாத அள-விற்கு பல்வேறுபட்ட இடர்களை சந்திப்பதாகவும், இதனால் சிலர் உயிரிழக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் தேயிலை மலைக ளில் குளவிகளை அப்புறப்படுத்துவதற்கு அல்லது அதில் இருந்து தொழி-லாளர்கள் காப்பாற்றப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போதிலும் அந்த நடவடி க்கைகள் வெற்றியளிப்பதாக இல்லை. தவிர இதற்குப் பொறுப்பான-வர்கள் கூடிய அக்கறை காட்டுவதில்லை எனவும் தொழிலாளர்கள் விசனம் தெரி-விக்கின்றனர்.

எனவே, தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை மாத்திரம் நோக்காக கொண்டு

செயற்படும் அதிகாரிகள் தொழிலாளர்க ளின் பாதுக்காப்பில் கூடிய அக்-கறை செலு த்துவது கட்டாயமாகும்.

நாட்டில் பல்வேறுப்பட்ட தொழில்களை மேற்கொள்ளும் தொழிலாளர்க-ளுக்கு பாதுக்காப்புத் திட்டங்கள், காப்புறுதித் திட்டங்கள் இருக்கின்ற பொழுதிலும் மிகவும் ஆபத்தான தொழிலை மேற்கொள்ளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்-வித மான பாதுகாப்புத் திட்டங்களும் மேற்கொ ள்ளப்படுவதில்லை.

இதனால் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை மேற்கொள்-வதில் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இவ்வாறு குளவித்தாக்குதலிருந்து மக்களை பாதுகாக்க பேராதனை பல்க-லைக்கழக மாணவர்கள் சில வருடங்களு க்கு முன்னர் ஆய்வுகள் மேற்கொண்ட-தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் அந்த ஆய்வுகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர். ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் வெலிங்டன் தோட்ட பகுதியில் ஏப்ரல் மாதம் வேலை செய்துகொண்டிருந்தபோது குளவிக் கொட்டுக்கு இலக்கான 55 வயதுடைய மேற்படி தோட்டத்தை சேர்ந்த பத்-மநாதன் என்பவர் உயிரிழந்தார்.

கடந்த 06.06.2016 அன்று அக்கரப்பத்தனை ஹோம்மூட் தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டியிருந்த 13 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனு-மதிக்கபட்ட னர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 04 ஆண்கள், 09 பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

லிந்துலை மவுஸ்ஸாஎல்ல மேற்பிரிவு தோட்டத்தில் கடந்த 02.06.2016 அன்று தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 07 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இலக்காகியவர்களில் 07 பேர் பெண் தொழிலாளர்களாவர்.

கடந்த மாதம் 15ஆம் திகதி காலை வட்ட கொடை மடக்கும்புர மேற்பிரிவு தோட்ட த்தில் தேயிலைக் கொழுந்து பறிப்பதில் ஈடுபட்டிருந்த ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவி கொட்டியதினால் 05 பெண்களும் 5 ஆண்களுமாக 10 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மலையகத்தில் மட்டு-மின்றி வெளிமாவட்டங்களிலும் குளவிகளின் தாக்குதல் அதிகமாக காணப்படுகின்-றது.

கடந்த பொசன் காலத்தை முன்னிட்டு அதி கமான யாத்திரிகர்கள் அனுராத-புரம் மற்றும் மிஹிந்தலை புனித பிரதேசங்களுக்கு செல்வதால் அவர்களின் நன்மை கருதி அனுராதபுரம் வனஜீராசிகள் திணைக்கள அதிகாரி கள் அங்கு கற்கு-கைகள், கற்பாறைகளில் உள்ள குளவிக் கூடுகளை அகற்றும் போது மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகள் திடீ ரென கலைந்து அவர்களை தாக்கின. இதன் போது இரண்டு அதிகாரிகள் வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும் பினர்

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையில் 564 பேர் குளவிக் கொட்டினால் பாதிக்கப்பட்டதாகவும் மூவர் உயிரிழந்ததாகவும் தகவல் ஒன்று தெரி விக் கின்றது.

இவ்வாண்டிலும் ஜனவரி முதலாம் திகதி முதல் இது நாள் வரையில் 350இற்கும் மேட் பட்டவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கா கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், தோட்டத் தொழிலாளர் கள் தொழிலுக்குச் செல்வதற்கே அஞ்சு கின்றனர். மேலும் அச்சத்துடன் தொழில் செய்ய முடியாதெனவும் சுட்டிக் காட்டுகின் றனர்.

குளவிக் கூடுகளை அகற்றுவதற்கோ, அல்லது அழிப்பதற்கோ விரிவான நடவடி க்கைகள் எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் தொழிலாளர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates