Headlines News :
முகப்பு » , » வெள்ளையர்களின் அடக்கு முறைக்கு மத்தியில் தொழிலாளருக்காக செயற்பட்ட - தமிழ் துரை

வெள்ளையர்களின் அடக்கு முறைக்கு மத்தியில் தொழிலாளருக்காக செயற்பட்ட - தமிழ் துரை

குமார் ரட்ணவேல்
இந்நாட்டில் பெருந்தோட்டக் கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே தென்னிந்திய தொழிலாளர்களின் வருகை பெருகியது. இவ்வாறு இந்நாட்டுக்கு வருகை தந்த தொழிலாளர்கள் வெள்ளை க்கார துரைமார்களின் அடக்கு முறைகளு க்கு உள்ளானார்கள்.

வெள்ளைக்காரர்களின் அடக்குமுறை 1950கள் வரை நீடித்தது. இவ்வாண்டின் பின்னரே பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் அவசியம் உணரப்பட்டது. அதன் விளைவாக பல போராட்டங்கள் பாரியள வில் மலையகத்தில் இடம்பெற்றன. வெள்ளைக்கார முதலாளித்துவ அடக்கு முறைக்கு எதிராகவே தொழிலாளர் போராட்டங்கள் இடம்பெற்றன.

சகோதர சிங்கள விவசாயிகளின் மீது ஆங்கிலேய அரசாங்கம் விவசாய வரி, நெல் அறுவடை வரி என வரிகளை விதி த்து அட்டூழியம் செய்தது. இவ்வரி முறை க்கு எதிராகவும் சிங்கள மக்களுக்கு ஆதரவாகவும் 1860களில் ஆங்கிலேயரான ஜோர்ஜ் வோன் குரலெழுப்பினார். இதனால் இவர் சிங்கள, சகோதர இன மக்களால் சிங்கள சுத்தா என அழைக்கப்பட்டார்.

இவ்வாறே க. ரட்ணவேல் என்ற தமிழ் தோட்டத்துரை தமிழ் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்.

1955களுக்குப் பின்னர் பல தோட்டங் களின் ஐரோப்பிய துரைமார் இவரை TAMIL EUROPEAN SUPERIN (தமிழ் ஐரோ ப்பிய துரை) என அழைத்தனர்.

இந்திய வம்சாவளித் தோட்டத்தொழிலாளர்களோ இவரை வெள்ளைக்காரர் தமிழ் துரை என அழைத்தனர்.

குமார் ரட்ணவேல் இந்திய வம்சாவளித் தமிழராவார். இவரின் தகப்பனார் திருச்சி மாவட்டம் ஓக்கரை கிராமத்தைச்சேர்ந்தவர். அம்மா மீனாட்சி அம்மாள் ஆவார். 1900  1920ஆம் ஆண்டுகளிலே தென்னிந்திய தமிழர்கள் மாத்தளை, கண்டி மாவட்டங்களின் காணிகளை விலை கொ டுத்து பெற்று தேயிலை, மிளகு, இலவங்கப்பட்டை (CINNAMON), கொக்கோ பயிர்ச் செய்கை என்பனவற்றில் ஈடுபட்ட னர். 1930 களுக்குப் பின்னரே தென்னிந்தியத் தமிழர்கள் பெரியளவில் தேயிலை பெருந்தோட்டங்களை நிறுவினர்.

இவ்வாறான காலத்தில் ரட்ணவேலின் தகப்பனார் கருப்பையாபிள்ளை கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் மல்பான தோட்டத்தின் உரிமையாளரானார்.

ஐரோப்பிய தோட்டத்துரை குழந்தைகளின் கல்வி கற்றலுக்காக கண்டியில் புனித சின்னப்பர் கல்லூரி (ST.PAULS COLLEGE) தோற்றுவிக்கப்பட்டது. இக் கல்லூரியிலேயே ரட்ணவேல் கல்வி கற் றார்.

இது ஆங்கில மொழி மூலமான கல்லூரியாகும். இவ்வாறான மாற்று சூழலில் கல்வி கற்றமையால் இவரிடம் ஆங்கி லேயரின் கலாசார சூழல்கள் தொற்றிக் கொண்டன.

ரட்ணவேலின் 19ஆவது வயதில் தகப் பன் கருப்பையாபிள்ளை மரணத்தை தழுவ மல்பான தோட்ட நிர்வாகத்தை இவர் பொறுப்பேற்றார். தனது 19 வயதில் ரட்னவேல் தோட்டத்துரையானார்.

இவர் தோட்டத்தொழிலாளர்களை மதி த்து செயற்பட்டதால் தோட்டம் பெரும் வளர்ச்சியடைந்தது. மல்பான தோட்டத் தின் வளர்ச்சிகண்டு வெள்ளைக்கார துரை மார் பொறாமை கொண்டனர். வெள்ளை க்கார துரைமார்களுடன் பழகிய ரட்ண வேல் இத்தோட்டத்தை பொறுப்பெடுத் ததும் ஆரம்பத்தில் தொழிலாளர்கள் அச்சத்துடன் இருந்தனர். பின்னர் அவரது தந்தை கருப்பையாவின் பாதையில் இவரும் பயணிப்பதைக்கண்டு அவர்கள் அச்சம் நீங்கியது.

இவ்வாறான நிலையில் நியூ தம்புள்ள கம்பெனி லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரவுன்பங்களாத் தோட்டத் தில் 18051956 பெரும் போராட்டம் வெடித்தது. அக்காலத்தில் இ.தொ.கா.வை விட்டு விலகி ஜனநாய தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தை அமரர் அஸீஸ் ஸ்தாபித்தார்.

இத்தொழிற்சங்கத்தை இலங்கை தோட்ட முதலாளிமார் சங்கம் அங்கீகரிக்க மறுத்ததை தொடர்ந்தே இப்போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தின்போது இத்தோட்டத்தில் தொழிலாளியாக இருந்த ஏப்ரஹாம் சிங்கோ என்ற சிங்கள தோழர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இப்போராட்டத்தை தொடர்ந்து இக்கம் பெனிக்கு சொந்தமான 17 தோட்டங்க ளில் ஆங்கிலேய துரைமார்களின் அடக்கு முறை பெரியளவில் விஸ்தரிக்கப்பட்டது. தொழிலாளர்கள் அடக்கு முறைக்கு உள்ளானார்கள்.

இவ்வாறான நிலையில் இக்கம்பனியின் தோட்டமான ஆனைத் தோட்டத்தில் (Towysland Estate) தொழிலாளர்கள் வெள்ளைக்கார நிர்வாகத்துக்கு எதிராக செயற்பட்டனர். இத்தொழிலாளர்களை அடக்க இயலாது திண்டாடிய வெள்ளைக் கார நிர்வாகம் க.ரட்ணவேலின் உதவியை நாடியது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் இவரின் நண்பர்களான வி.அன்டர்சன். எம்.கெரி. ஜே.ராக்லிச் போன்றவர்களேயாவார்.

1959 இல் டயகம நகரத்துக்கு உச்சியில் காணப்படும் ஆனைத்தோட்டம் ரட்ணவேலிடம் திம்புல்ல கம்பெனியால் கையளிக்கப்பட்டது. தனது தகப்பனாரின் வழி நடத்தலில் தோட்டத் தொழிலாளர்களி டம் செயற்படும் முறைமையை தெரிந்து வைத்திருந்த ரட்ணவேல், ஆங்கிலேய நிர்வாகத்துடன் முரண்படக் காரணமான காரணிகளை இனங்கண்டு இத்தோட்ட நிர்வாகத்தினை அதிரடியாக மாற்றம் செய்தார்.

ஆங்கிலேயரின் கடுமையான கெடுபிடி க்குள் வதைபட்டு வாழ்ந்த ஆனைத்தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் பிரச்சினைகளை சுயமாக தோட்டத்துரையான ரட்ணவேலிடம் எடுத்துக்கூற வழிவகுத்தார். தொழிலாளர்களின் மொழிப்பிரச்சினையும் இல்லாது போயிற்று கங்காணி, கணக்குப்பிள்ளை போன்ற இடை தரகர்களின் செயற்பாடுகள் இல்லாமல்போயின.

தொழிலாளர்களை தனது அலுவலகத்திற்குள் வருகை தந்து முறைப்பாடுகளை தெரிவிக்கும் முறையை ஏற்படுத்தினார்.

ஆங்கிலேயரின் உடை, நடை, கலாசா ரம் இருந்தாலும் மது, சிகரட் பாவனை இல்லாது ஒரு உதாரண மனிதராக வாழ்ந்துள்ளார். இவ்வாறான ஒரு வித்தியாசமான நடைமுறையின் தாக்கத்தால் ஆனைத்தோட்ட மக்கள் இவரை வெள்ளைக்கார தமிழ் துரை என அழைத்துள் ளனர். இவ்வாறு பத்து வருடங்கள் ஆனைத்தோட்டத்தில் கடமையாற்றினார்.

திம்புல்ல தோட்டக் கம்பனிக்கு சொந்தமான சந்திரிகாமம் தோட்டத்தில் தோட்டத்துரையாக இருந்த ரஞ்சன் விஜேரத்ன இவரின் நெருங்கிய நண்பராவார்.

இவர் 15.02.1989 இல் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டி யல் மூலமாக அரசியலுக்குள கால்பதித்தவர். 18.02.1989 இல் ஐ.தே.கட்சி அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக வும் பிரதி பாதுகாப்பு அமைச்சராகவும் நியமனமானார்.

குறுகிய காலத்தில் பேசப்படும் அரசியல்வாதியாக மாறிய இவர் 02.03.1999 கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி காலமானார். இவர் 1968இல் விட்டோல்ஸ் தேயிலை தோட்டக் கம்ப னியில் ரட்ணவேலுவை இணைத்து விட்டார்.

இதற்கு முக்கிய காரணம் பல தேயிலைத் தோட்டங்களை கொண்ட விட்டோ ல்ஸ் கம்பனியின் கீழிருந்த பல தோட்டங் கள் நஷ்டத்தில் இயங்கின. இதை வருமா னம் ஈட்டும் தோட்டங்களாக மாற்றவே ரஞ்சன் விஜேரத்ன மூலமாக இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இக்கம்பெனிக்கு சொந்தமான ஓஸ் போன், மியனலிட்ட, ஓகியோ கிரேட் வெலி ஆகிய தோட்டங்களின் நிர்வாகத்தினை பொறுப்பேற்று தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து பெரும் இலாபம் பெறும் தோட்டங்க ளாக மாற்றியமைத்தார்.

23.07.1977 இல் ஜே.ஆர் அரசில் விவசாய காணி அமைச்சராக தெரிவான ஈ.எல். சேனநாயக்க, ரட்ணவேலுவை கண்டி மாவட்டத்தின் ஜனவசம நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளராக செயற்பட வைத்தார்.

இவ்வாறான பின்புலத்தைக் கொண்ட ரட்ணவேல், ஆங்கிலேயரோடு வாழ்ந்தா லும் தனது இறுதிக்காலம் வரை இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலா ளர்களின் நலனுக்காகவே வாழ்ந்ததுடன் தொழிலாளர் துயர் கண்டு வருந்திய தோட்ட அதிகாரியாக செயற்பட்டார்.

தோட்டத் தொழிலாளருக்காக போரா டிய மாத்தளை ரெலுகஸ் தோட்ட வெள் ளைக்கார துரை எம்.எ.எல் பிரேஸ் கேடில் போன்று ரட்ணவேல் ஆனைத் தோட்டம் முதல் பல தோட்டங்களில் வாழ்ந்த தொழிலாளர்களின் மனதிலிருந்து என்றுமே மறக்க முடியாத ஒருவராக வாழ்கிறார்.

1993 இல் தமிழகம் சென்ற தருணத்தில் திடீர் சுகவீனமுற்று க.ரட்ணவேல் அங்கு காலமானார். தனது 78 ஆவது வயதில் காலமான இவரின் பூதவுடல் கொழும்பு க்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப் பட்டது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates