Headlines News :
முகப்பு » » அதிபர் தரம் 111 பரீட்சைக்கான இலவச செயலமர்வு- பலாங்கொடை

அதிபர் தரம் 111 பரீட்சைக்கான இலவச செயலமர்வு- பலாங்கொடை


இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் எதிர்வரும் அதிபர் தரம் 111 க்கான போட்டிப் பரீட்சையை முன்னிட்டு ஹட்டன், கண்டி, பலாங்கொடை, பதுளை ஆகிய பிரதேசங்களில் இலவச செயலமர்வுகளை நடாத்த தீர்மானித்துள்ளது.
இதன் முதல் நிகழ்வு எதிர்வரும் யூன் 7 ஆம் திகதி(ஞாயிறு) அன்று பலாங்கொடை கனகராயன் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறும். இந்நிகழ்விற்கு பலாங்கொடை வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் செல்வி ஆர். கலாரமணி பிரதம அதிதியாகக் கலந்துக் கொள்வார். வளவாளர்களாக தேசிய கல்வி நிறுவக தவைமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதிநேர முகாமைத்துவ  ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொள்வார்கள். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார்(கையடக்க தொலைபேசி 0718533144) ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates