Headlines News :
முகப்பு » » தோட்டத் தொழிலாளர்களை கடனாளிகளாக்கும் அடகு நிறுவனங்கள்

தோட்டத் தொழிலாளர்களை கடனாளிகளாக்கும் அடகு நிறுவனங்கள்


சுமார் இரு நூறு வருடங்களுக்கு முன்னர் இந்திய தேசத்திலிருந்து இலங்கைத் தீவிற்கு கூலித்தொழிலாளிகளாக அடிமை இனமாக ஆங்கிலேயர்களால் நாம் கொண்டு வரப்பட்டோம்.

எமது ஏழ்மையையும் வறுமையையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் எம்மை இலங்கைத்தீவின் கோப்பி, தேயிலை, கொக்கோ தோட்டங்களில் காற்றோட்டமில்லாத லயன் காம்பிராக்களில் முடக்கி எமது வாழ்வை உழை ப்பை, நெற்றி வியர்வையை, எமது உதிர த்தை எமது ஊதியத்தை எல்லாம் கபடமாக கொள்ளையடித்தனர்.

அந்த சோகக்கதை எல்லாம் தற்போது பழங்கதையாகி நாம் மறந்தும் மரத்தும் போய்விட்டோம். எமது விசுவாசமான உழைப்பு, உண்மை, நேர்மையான மனப்பா ங்கு, கடுமையான முயற்சியின் மூலமாக நாம் தற்போது வெற்றியாளர்களாக தலை நிமிர்ந்து நிற்கும் அளவு உயர்ந்து விட் டோம்.

இது எமக்கு சற்று நிம்மதியளிக்கும் நிலையாகும். தற்போது நம்மவர்கள் வியாபாரிகளாக, வாகன உரிமையாளர்களாக சொந்த காணி வீடு உள்ளவர்களாக மேலும் அரச தனியார் துறைகளில் உயர் அதிகாரிகளாக பதவி வகித்து வருவது எமது சமூக வளர்ச்சி மேம்பாட்டுக்கு ஒரு தெம்பை ஊட்டுவதாக உள்ளது.

மலையக சமூகத்தின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தடுப்பதற்கும் வளங்களை சுரண்டுவதற்கும் அவர்களை மேலும் மேலும் கடனாளியாக்குவதற்கும், பல தனியார் நிறுவனங்களும், தனியார் வர்த்தகர்களும் வட்டமிடுவதை காணக்கூடியதாக உள்ளது. அவசர தேவைகளுக்கு பணத்தை பெற்று கொள்வதற்கும் தங்க நகைகளை அடமானம் வைக்கவும் அருகிலுள்ள தனியார் அடகுச்சேவையாளர்களையும், அடகு நிறுவனங்களையும் நாடி செல்கின்றனர் நம் மக்கள். குறித்த நிறுவனங்களும் நகையின் பெறுமதிக்கு ஏற்ப பணத்தை கொடுக்கின்றன.

அரச வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைக்க செல்லும் பொழுது குறைந்த அளவான பணமும் சில சட்ட திட்டடங்களுக்கும் கட்டுப்பட வேண்டியுள்ளதால் பலர் அரச வங்கிகளுக்கு செல்வதில்லை. ஆனால் இதன் பாதிப்பை பலர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.

அரச வங்கிகளில் தங்க நகை ஒன்றை சுமார் 1000 ரூபாவுக்கு அடகு வைத்தால் வருட இறுதியில் வட்டியும் முதலுமாக சுமார் 1150 ரூபாவை செலுத்தி நகையை மீட்டு விடலாம்.

ஆனால் தனியார் அடகுச்சேவை நிலையங்களில் தங்க நகைகளை அடகு வைக்கும் போது 1000 ரூபாவுக்கு நகையை அடகு வைத்தால் நகை அடகு வைக்கும் போதே முதல் மாத வட்டி பணத்தை எடுத்து கொள்வார்கள். மேலும் ஒரு வருடத்தின் பின் நகைகளை மீட்கும் போது வட்டியும் முதலுமாக 1000 ரூபாய்க்கு 1500 ரூபா வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இரண்டு வருடங்களுக்குள் திருப்பாது விட்டால் வட்டிக்கும் வட்டி சேர்க்கப்பட்டு இறுதியில் நகைகள் கிடைக்காத நிலைமை ஏற்படுகிறது. ஆனால் அரச வங்கிகளில் அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளுக்கு இவ்வாறான நிலைமை ஏற்படுவதில்லை. அரச வங்கிகளில் அடகு வைக்கும் நகைகளுக்கு போதிய ஈட்டுக் கடன் கிடைக்கா விட்டாலும் குறைந்த வட்டி வீதம், மீண்டும் நமது நகைககளை பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளது. அடுத்தபடியாக பலர் வாகனம் ஒன்றை வைத்திருப்பதற்கு விரும்புவது இயற்கை.

அதற்காக வருடக் கணக்கில் சேமித்து சுமார் 10 லட்சம் வரை கையில் வைத்துக்கொள்கின்றனர். பின் தனியார் நிதி நிறுவனங்களிடம் சென்று மேலும் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்று (finance) வாகனத்தைப் பெற்றுக் விடுகின்றனர். இதற்கு மாதாந்தம் வட்டி 24% முதல் 30% வரை. கணக்கிட்டுப் பார்க்கும் போது மாதம் 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.

இவ்வாறு மூன்று மாதம் தவணைப் பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் (finance company) வாகனத்தை பலவந்தமாக எடுத்துச்சென்று விடுவார்கள். அதன் பின் எந்தக் கொடுப்பனவும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. நீங்கள் வாகனத்திற்கு முதலிட்ட 10லட்சம் ரூபாவும் அதோகதிதான்.

பின் வாகன ஆசை நட்டத்தில் தோல்வி யில் முடிந்து விடும். அத்தோடு பலர் மனம் உடைந்து வாழ்க்கையில் விரக்தியுற்று குடிகாரராக, மன நோயாளர்களாக மாறி ஈற்றில் வாழ்க்கையை இழந்த சோகக் கதைகளை நாம் கண்டும் கேட்டும் இருக்கின்றோம்.

ஆனால் சில கட்டுப்பாடுகளுடனும் சிரமங்களுக்கும் மத்தியில் அரச வங்கிகளில் வாகனத்துடன் பெற்றுக் கொள்ளும்போது குறைந்த வட்டி விதத்தில் கடன் பெற்றுக் கொள்ள முடியும்.

வீட்டு உறுதிப்பத்திரம், காணி உறுதிப்பத்திரம் அல்லது அரச உத்தியோகஸ்தர்களின் பிணையின் மூலம் அரச வங்கிகளில் வாகனக்கடன் வியாபாரக்கடன் சிறு கடன் மனை திருத்த புதிய மனை நிர்மாணிக்க கடன் பெறலாம். கடனை குறைந்த வட்டியில் நீண்ட தவணையில் பெற்றுக் கொள்ள முடியும்.

நிறுவனங்களின் மூலமாக எம்மைத்தொடர்கின்றன. ஆயுள் காப்புறுதி என்ற போர்வையில் எம்மை ஏமாற்றி அவ்வளவு பணம் கிடைக்கும் இவ்வளவு பணம் கிடைக்கும் என்று எம்மை ஏமாற்றிக் காப்புறுதி செய்யத்தூண்டுவர்.
முறி முதிர்ச்சியடைந்து நாம் தொகை யைக் கோரும் போது நாம் செலுத்தியதை விடக் குறைவாகவே எமக்குக் கிடைக்கும் காரணம் கேட்டால் இது ஆயுள் காப்புறுதி ஆயுளுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால் மாத்திரமே முழுமையாக கிடைக்கும் என்று கூறி எம்மை ஏமாற்றுவர். செத்தபின் கைலா யம் செல்ல விரும்புவது போன்றதே ஆயுள் காப்புறுதியாகும்.

காப்புறுதி நிறுவனங்கள், தோட்ட நிருவாகிகள், இலிகிதர், ஏனைய மேலாளர்களுக்கு போனஸ் சலுகைகள் வழங்கி தோட்டத் தொழிலாளர்களைக் காப்புறுதி செய்யத் தூண்டுமாறு கட்டளை இடச் செய்
வர். காப்புறுதி செய்வதை விட காணி, தங்க நகை போன்றவற்றில் முதலீடு செய்வது லாபம் அளிப்பதாகும். மது விற்பனை நிலையங்களைப் பற்றி நாம் நினைவூட்டத் தேவையில்லை. தற்போது தொடர்ச்சியாக அதன் தாக்கம் பற்றிப் பேசப்படுகின்றது.

எமது தாய்மார்கள் வீதிக்கு இறங்கி மதுச்சாலைகளை மூட நடவடிக்கை மேற்கொள்வது பாராட்டத்தக்கதாகும். மேலும் தோட்ட மதுச்சாலைகள் பல எமது அரசியல் தலைவர்களினாலேயே நிர்வகிக்கப்படுகின்றன என்பதை எமது மலையகக் குழந்தைகள் கூட நன்கு அறியும்.

மதுச்சாலைகளை ஒழிக்க பாராளுமன்றத்திலும் குரல்கள் ஒலிக்கின்றன. ஆகவே மலையகத்தில் வாழும் படித்த இளைஞர் யுவதிகள், ஆசிரியர்கள், கல்விச் சேவையாளர்கள் இயன்றவரை எமது மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும். இயன்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

எம்மில் அக்கறையுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக நிலையங்கள் எமது மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என நாம் தாழ்மையாகக் கேட் டுக் கொள்கின்றோம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates