Headlines News :
முகப்பு » » மீரியபெத்தையில் உயிரிழந்தவர்களின் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை தேவை - விண்மணி

மீரியபெத்தையில் உயிரிழந்தவர்களின் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை தேவை - விண்மணி


மீரியபெத்த மண்சரிவில் குடும்பத்தை, உற்றார், உறவினர்களை, உடைமைகளை இழந்தவர்கள் இப்போது தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதிய இடங்களிலே குடியிருப்பு அமைக்கப்பட்டு தங்க வைக்கப்படுவார்கள் என நிச்சயமாக நம்பலாம். இழப்பீடுகளும் வழங்கப்பட லாம்.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளை அரசே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

இந்த அளவில் பொறுப்பு வாய்ந்தவர்கள் இவர்கள் தொடர்பில் தமக்குள்ள கடமைகளை முடித்து விட்டதாகத் திருப்தியுடன் ஓய்ந்து விடக்கூடும்.

ஆனால், இவர்கள் தொடர்பில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விடயம் இருக்கிறது. மண் சரிவில் புதையுண்டு உயிரி ழந்த தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் சேவைக்கால பணம் ஆகியவற்றை அவர்களின் சட்டபூர்வமான வாரிசுகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே அது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரின் கொடுப்பனவுகள் வங்கியிலிடப்பட்டு உரிய பராயத்தை அடைந்த தும் அதை அவர்கள் பெற்றுக் கொள்ள வழி வகை செய்யப்பட வேண்டும்.

எல்லாவற்றையும் இழந்து விட்டதாகச் சொல்லப்பட்ட போதும் இறந்து போனவர் கள் இந்தக் கொடுப்பனவுகளை தமது வாரிசுகளுக்கு விட்டுச் சென்றிருக்கின்றார்கள். இக் கொடுப்பனவுகள் உயிரிழந்தவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததும் சட்டப்படி உரி மை உடையனவும் ஆகும். இதன் காரணமாக அவர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கு உரித்துடையதுமாகும்.

இப்போது இது பற்றிக் கவனிக்காதிருந்து விட்டு பின்னர் இதற்காக முயல்வது பெரும் சிரமமான காரியமாகி விடும். பல்வேறு சட்டப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். இப்போதே இவர்கள் மேலுள்ள அனுதாபம் சில ஆண்டுகளின் பின்பு மங்கி மறைந்து போய்விட்டிருக்கும்.

சாதாரணமாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றை பெறுவத ற்கு பெரும் பாடுபடுவது நாமனைவரும் அறிந்த விடயம். பிறப்புச் சான்றிதழ் இரு க்காது, பிறப்புச் சான்றிதழ் இருந்தால் அடை யாள அட்டை இருக்காது, இரண்டும் இருந் தால் இரண்டிலும் பெயர் வித்தியாமாக் இருந் தால் இரண்டிலும் பெயர் வித்தியாமாக இரு க்கும், இவையிரண்டும் இருந்தால் திரும ணப் பதிவுச் சான்றிதழ் இருக்காது, அல்லது பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் வித்தியாசமாக இருக்கும், வெவ்வேறு தோட்டங்களில் பணி புரிந்திருந்தால் ஒவ்வொரு தோட்டத்திலும் பெயர் ஒவ்வொரு விதமாக எழுதப்பட்டிருக்கும்.

இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. சாதாரணமானவர்கள் ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது இந்த சிக்கல்களைப் பயன்படுத்தியே இது தொடர்பில் தோட்டத் தொழிலாளர் களிடம் சில தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இடைத்தரகர்களும் பெரும் பணம் கறந்து விடுகிறார்கள்.

இதைவிட சிலர் ஆள் மாறாட்டம் செய்தும் பணத்தைச் சுருட்டிக் கொள்கிறார் கள். தொடர்ச்சியாக பணிபுரிந்து வந்த பல்வேறு ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்கின்றவர்களுக்கே இந்நிலையானால், எந்தவித ஆவணங்களுமின்றி திடீரென இறந்து போனவர்களின் வாரிசு கள் பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வளவு சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் ?

இந்த விடயத்தில் காலம் தாழ்த்தினால் இந்தக் கொடுப்பனவுகள் பெரும்பாலும் முற்றாக கிடைக்காமல் போய்விடக் கூடிய வாய்ப்பு உண்டு.
ஆகவே, இந்த ஏதிலிகளுக்கு செய்கின்ற ஏனைய உதவிகளோடும் இந்த உதவியை யும் செய்து கொடுக்க பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்வர வேண்டும்.
வழமையான வழிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைய இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொடுக்க சாத்திய மில்லாதிருக்கலாம். அதனால் சட்ட திட்ட ங்களை சற்று தளர்த்தி விசேட ஏற்பாடுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும். இதற்காக இவ்விடயத்தை ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டு வருதல் அவசியம்.

இப்போது நிலவி வரும் பதற்ற நிலையின் காரணமாக தோட்ட அலுவலகத்திலிருந்து போதிய விவரங்களையும் ஆவணங்க ளையும் பெற்றுக் கொள்வது சிரமமாக இருக்கலாம். ஆனால் தொழில் திணைக்களத்திலிருந்து ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உறுப்பினர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதனடிப்படையில் முறையான விசாரணைகளை மேற்கொண்டால் முகாம்களில் இருப்பவர்களிடையே இறந்து போனவர்களின் சட்டபூர்வமான வாரிசுகள் யார் என்பதை நிரூபணம் செய்து கொள்ளலாம்.

உண்மையில் இவை பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத நிலையில்தான் இப்போது இந்தத் தொழிலாளர்கள் இருப்பார்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. எல்லாமே போன பின் இந்த காசு மட் டம் எதற்கு? என்று விரக்தியில் பேசவும் கூடும். ஆனால், அவர்கள் எப்போதும் இதே நிலையில் இருக்கப்போவதில்லை. இது தற் காலிகமானதுதான். காலம் காயங்களை ஆற்றிவிடும். அவர்கள் அறிவு பூர்வமாக சிந்தி த்து தமது வாழ்வை சீரமைத்துக் கொள்ள முற்படும் போது இந்தக் காசு அவர்களுக்கு உதவியாக இருக்கும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பேருதவியாக இருக்கும்.

இதில் 14 நாள் சல்லி என்று தோட்டத் தொழிலாளர்களின் பேச்சு வழக்கில் வழங் கும் சேவைக்காலக் கொடுப்பனவு (Work Mens (corporation) தோட்ட நிர்வாகம் செலுத்த வேண்டியதாகும். பெரும்பாலும் தோட்ட நிர்வாகம் இதனைக் கொடுக்காதிருக்கவே முயற்சிக்கும். இதனைப் பெற்றுக் கொள்ள தொழில் திணைக்களத்தின் தலையீடு அவசியமாகலாம்.

மண்சரிவில் புதையுண்டு போனவர்களின் எண்ணிக்கை என்ன என்பது இதுவரை சரியாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் 300– 400 பேர் வரை இருக்கலாம் என்று சொல் லப்பட்டது. படிப்படியாகக் குறைந்து இப்போது 45 பேர் வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எண்ணிக்கை சந்தேகத்தை ஏற்படுத் துவதாகவுள்ளது. முகாம்களில் தங்கியிருப்பவர்களிடம் முறையான தகவல்களைப் பெற்றால் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணி க்கையை மிகச் சரியாகக் கணக்கிட்டு விட லாம்.

உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை யையும் பெயர் விபரங்களையும் வெளி யிடுவது அரசின் பொறுப்பு ஆகும். அத் துடன் உயிரிழந்தவர்களுடைய இறப்புச் சான்றிதழ்கள் காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும். இச் சான்றிதழ்கள் அவர்களின் உறவினர்களுக்கு மேற்படி கொடுப்பனவுக ளைப் பெற்றுக் கொள்ள உதவும் என்பது டன் வங்கிக் கணக்குகளில் உள்ள காசு அடவு நகைகள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளவும் பின்னர் எழக்கூடிய பல்வேறு சட்டப் பிரச்சினைகளுக்கும் உதவும்.

ஆக்கபூர்வமாகச் சிந்தித்து செயற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு உரித்தான கொடுப்ப னவுகளை சட்டபூர்வமான உரிமையுடைய உறவினர்களுக்கு பெற்றுக் கொடுக்க பொறு ப்பு வாய்ந்தவர்கள் முன்வரா விட்டால் தெரிந்தே கோடிக் கணக்கான ரூபாக்களை அதே மண்ணில் போட்டு புதைத்ததிற்கு சமம் ஆகும்.

நன்றி - வீரகேசரி 23.11.2014
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates