Headlines News :
முகப்பு » » எதிர்கால மலையகம் பற்றி வெள்ளைக்கார தோட்டத்துரை ஒருவரின் கற்பனைச் சித்திரம் - சாரல் நாடன்

எதிர்கால மலையகம் பற்றி வெள்ளைக்கார தோட்டத்துரை ஒருவரின் கற்பனைச் சித்திரம் - சாரல் நாடன்

சாரல் நாடன்
மலையகத்தின் பிரபல எழுத்தாளரும் மலையக இலக்கிய ஆய்வாளருமான சாரல் நாடன் (க.நல்லையா) கடந்த வாரம் காலமானார். மலையக இலக்கியத்துறைக்கு பாரியளவு பங்களிப்பு செய்துள்ள அவரின் மறைவு மலையகத்துக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும். அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வீரகேசரி வார வெளியீட்டில் வெளிவந்துள்ளன.

அவர் மறைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீரகேசரிக்காக எழுதியனுப்பிய கட்டுரை ஒன்று இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.

சி.வி. என்ற மலையகக் கவிஞனின் நூற்றா ண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறத் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், வெள்ளைக்காரத்துரையொருவர் மலையகத்தின் எதிர்காலம் குறித்து எழுத்தில் வடித்திருக்கும் கற்பனை சித்திரம் குறித்து நமது பார்வையை செலுத்தலாம்.

இக்கற்பனை கே.எல். முர்ரே என்பவரால் 1936ஆம் ஆண்டு எழுதி அக்காலப்பகுதியில் பிரசித்தமானதாக இருந்த டைம்ஸ் பத்திரிகையால் வெளியிடப்பட்டது. டைம்ஸ் பத்தி ரிகை வெள்ளைக்காரர்களின் வேதப்புத்தகமாக எண்ணப்பட்ட காலம் ஆண்டுக்கு ஒரு முறை தான் வெளியிடும் கிறிஸ்மஸ் மலர்களை நினைவில் வைத்திருக்க வேண்டிய அரும்பெரும் சிருஷ்டிகளை கொண்டு அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. சிவியின் அமரத்துவம் பெறும் பல ஆக்கங்களை வெளியிட்டு புகழ் சேர்த்தது. முர்ரெயின் கற்பனை சித்திரமும் இத்தகையதே.

முர்ரே புகழ் வாய்ந்த ஒரு தோட்டத்துரையாவார். துரைமார் சங்கத்தின் நடவடிக்கைகளில் இவர்களின் பணிகள் இணைந்து காணப்படுகின்றன. அதன் தொழிலாளர் குறி த்து பல நடவடிக்கைகளுக்கு இவரின் சிந்தனைகள் தூண்டு கோலாய் இருந்தன. பூண்டுலோயா பகுதியில் உள்ள கைப்புக்கலை தோட்டத்தின் உருவாக்கத்தில் இவரின் பணிகள் பளிச்சிடுகின்றன.

சுற்றிவர 18 சிறு தோட்டங்களை அணிக ளாகக் கொண்டு 'கட்டுத்தொரபட்டி' என்றறியப்பட்ட நகரத்தில் புகழ்மிக்க ஒரு தோட்ட மாக விளங்கிய கைப்புக்கலை தோட்டத் தில் முர்ரேயின் நிர்வாகம் 1940களிலும் தொடர்ந்திருந்ததை ஆவணங்கள் மெய்ப்பிக்கின்றன. சிங்கள விவசாய கிராமங்களைச் சுற்றியும் கொண்டிருந்த தோட்டப்பகுதியில் துரையாக இருந்த ஒருவர் நுற்றாண்டு கற்பனை சித்திரம் வரைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

பிளாண்டிங் இன் 2036எனும் மகுடத்தில் இக்கட்டுரை 1936 கிறிஸ்மஸ் மலரில் வெளியாகியுள்ளது. இப்போதிருப்பதை விட இன்னும் நூற்றாண்டு கடந்து தோட்டத் தொழில் காண இருக்கும் முன்னேற்றங்கள் குறித்து அங்கு இடம்பெற இருக்கும் மாற்றங்கள் குறித்து ஆரோக்கியமான சிந்தனையை அக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

தோட்டப்புறத் தொழிலாளர்கள் பரம்பரை பரம்பரையாக ஒரே லயக்காம்பராவில் வாழ்வதை இன்றும் காணலாம். தாத்தா; பாட் டன், முப்பாட்டன் என்று மூன்று தலைமுறையினர் அதே லயக்காம்பராவில் அடுப்புச்சூடு காம்பராவின் உள்ளே இதமாக இருக்கும்படி அமைக்கப்பட்ட சுகவாசத்திற்கு ஏற்றதாக 1877இல் கட்டப்பட்ட பழைய மோஸ்தரில் ஒரே வரிசையில் அமைந்த இருபது லயக்காம்பராக்களில் வாழ்வதை முர்ரே விரும்பவில்லை. அவர்களுக்கென்று வீடு கள் அமைப்பதற்கு தோட்டக்காணிகள் புதி தாக இல்லாத நிலையில் இருக்கும் லயக் காம்பராக்களை வரிசையில் அமைத்து மாடி க்கட்டமாக மாற்ற நினைத்தார். 2036இல் லயக்காம்பராக்கள் இல்லாது ஒழிந்து மாடிக்கட்டமாக அவை எழுந்து நிற்பதை கண் டார்.

அவர் காலத்தில் அது முற்போக்கான சிந்தனையாக இருந்தது. பெருகி வரும் தோட்ட சனத்தொகையை இருக்கும் இடத்துக்குள்ளாகவே, வசதியோடு வாழ அதைவிட சிறந்த வழி வேறொன்றுமில்லை. தோட்ட த்து சனங்கள் பிறரைப் போல காற்றோட்ட மான, விசாலமான மாடிக்கட்டிடத்தில் வாழுகிறார்கள் என்பது எத்தனை சுகமான கற்பனை.

அவர்கள் கல்வி அறிவு பெற்று சமூக அந்தஸ்துடன் வாழும் போது, தோட்டத்துரை மார்கள் ஒன்றுகூடும் கிளப்களில் அவர்களு க்கு இடம் அளிக்கப்படுகின்றது. அந்த நாள் வரை தேயிலைத்தளிர் ஆயும் தொழில் ஒன்றுக்கே லாயக்கானவர்களாக கருதப்பட்ட பெண்கள், கிளப்களில் அனுமதிக்கப்படுகிறார்கள். தோட்டத்துரைமார்களுடன் இணைந்து அவர்கள் நடனமாடுகிறார்கள். அது நாள் வரை அவர்களை வெறும் அடிமைகளாக எண்ணி, ஏசிப்பேசி எள்ளி நகையாடி வந்தவர்கள் அவர்களை தம்முடன் சமமாகப் பாவிக்கும் நிலைமை உருவாகிறது. அவர்களிடையே அதுநாள் வரை நிலவிய வர்க்க வேறுபாடு, முதலாளி, தொழிலாளி உணர்வு மறைந்து விடுகிறது. தோட்டத்துப்பெண்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.

அங்கு தொழில்புரிய வரும் ஆண்கள் அத்தனை பேரும் மோட்டார் சைக்கிளில் தான் வருகிறார்கள். தோட்டம் என்பது சுற்று வட்டமான ஒரு பொது நிலப்பரப்பை கொண்டிருந்தாலும், அதற்குள் ஏற்றம் இரக்கம் என்று விரிந்து, இடையில் ஆறுகள், அதை கடக்க பாலங்கள் என்று அமைத்து பத்து மைல் காத தூரம் பாதைகள் அமைந்து விடுவது ண்டு. பாதைகள் பெரும்பாலும் குதிரைகள் செல்ல வசதியாக அமைந்த பாதைகள் தாம். இவைகளை கருத்தில் கொண்டு தான் தோட்டங்கள் எங்கும் மனிதர்கள் நடக்கும் குறுக்குப்பாதைகள் அமைந்தன. குறுக்குப்பாதைகளை பின்னாட்களில் விசாலமாக்கி பாதைகள் அமைத்ததுண்டு. ஆனால் ஆரம்பத்தில் இப்பாதைகளில் மோட்டார் சைக்கிள் போக முடியும் என்பதை ஆங்கிலேய துரைமார்கள் நடைமுறைப்படுத்தினர். அவைகளை கண்டு வந்த முர்ரே, தொழிலாளர்கள் மோட்டார் சைக்கிளில் தமது வீடுகளில் இருந்து காலையில் பிரட்டுக்களம் சென்று பின்னர் தொழிலுக்கு போவதாக கற்பனை பண்ணினார்கள். மோட்டார் சைக் கிள்கள் அத்தனையும் ஓரிடத்தில் தரித்து வைப்பதற்கு பொதுவான ஒரு கராஜும் கட் டப்படுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இப் போது ஒவ்வொரு லயக்காம்பராவிலும் கொழுந்து கூடைகள் வீட்டு வாசலில் தொங் குகின்றன. முர்ரேயின் கற்பனை உலகில் எழுபதேக்கர் பரப்பளவில் கட்டப்பட்டி ருக் கும் கரேஜில் அவற்றுக்கான இடம் ஒதுக் கப்பட்டிருக்கிறது. நடைமுறைக்கு சாத்தி யமான ஒரு கற்பனையில் முர்ரே போன்ற ஆங்கிலேய துரைமார்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு இக்கட்டுரை ஓர் உதாரணமாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates