Headlines News :
முகப்பு » » கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - பகுதி 3 (இறுதி) - இரா சடகோபன்

கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - பகுதி 3 (இறுதி) - இரா சடகோபன்


ஆரம்பத்தில் கோப்பித்தோட்டங்களில் வேலை செய்ய ஆண்களே அதிகமாக வந்தனர். பின்னர் 1860, 1870களையொட்டிய தசாப்தங்களிலேயே பெண்க குறிப்பிட்ட அளவு பிரசன்னமாகி இருந்தனர்.

கோப்பித் தோட்டங்களில் தொழில் பார்த்த ஆண்களை ராமசாமி அல்லது கறுப்பன் என்று துரைமாரும் வெளைக்கார அதிகாரிகளும் அழைத்ததைப்போல் இங்கு தொழில்புரிந்த பெண்களை ‘மீனாட்ஷி’ அல்லது ‘மீனாக்ஷி’ என்றே அழைத்தனர். தமிழ்நாட்டிலிருந்து வந்து மலைநாட்டில் குடியேறிய எல்லாப் பெண்களும் அவர்களுக்கு மீனாட்சிகளாகவே தெரிந்தனர்.

கோப்பித்தோட்டங்களில் வேலை செய்த ஆண்களையும் பெண்களையும் பற்றி கருத்துத் தெரிவித்த கோப்பித்தோட்ட முன்னோடிகளில் ஒருவரான ஆர்.டபியூ.ஜென்கின்ஸ் என்பவர் கோப்பித்தோட்ட மலைகளில் அவர்க வேலை செய்தபோது ஆண்களையும் பெண்களையும் பிரித்துப் பார்க்கமுடியவில்லை என்றும் அவர்க ஒரேமாதிரியான கருத்த செம்மறியாட்டு மந்தைபோல் இருந்தனரென்றும் குறிப்பிட்டுளார். அவர்க மனிதர்களாக இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. குளிரானதும் மழைக்காலங்களிலும் இவர்களை தடுமனும் இருமலும் தொற்றிக்கொளும். அப்போது இவர்களைப் பாதுகாக்க உடல் முழுவதும் போர்த்தியிருந்த கருப்பானகம்பளிக (செம்மறியாட்டு மயிரால் நெய்யப்பட்ட போர்வை) மாத்திரமே இருந்தன என்றும் குறிப்பிட்டார். மலைநாட்டுக் கோப்பித்தோட்டத்து பெண்களைப்பற்றி வேறு சிலரும் கருத்துத் தெரிவித்துளனர். ஜேர்மனிலிருந்து வந்திருந்த இயற்கைச் சூழலியலாளர் எர்னஸ்ட்ஹெக்கல் ஜென்கின்சுக்கு விரோதமாகப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘கோப்பித்தோட்ட இளம் பெண்களின் உடல், உருவமைப்பு கிரேக்க நாட்டு அழகிகளின் உருவ அமைப்பை ஒத்திருந்தது. எனினும் அவர்க முகத்திலும் கண்களிலும் அப்படியொரு சோகம் அப்பிப்போயிருந்தது. சிங்கள மக்க மத்தியில் வழக்கமாக இருந்த புன்னகையும் சிரிப்பும் இவர்க எவரிடமும் காணமுடியவில்லை.’

மற்றுமொரு கோப்பித் தோட்ட சொந்தக்காரரான வில்லியம் பொயிட் என்பவர் கூறியிருப்பதாவது: ‘இப்பெண்க இளமையின் தோற்று வாயில் இருக்கும்போது இனி இல்லை எனும்படிக்கு மிக அழகாக இருக்கின்றனர். ஆனால் ஆங்கிலப்பெண் தன் இளமையின் உச்சத்தை அடையும் வயதில் இவர்க உடல் சுருங்கிக் கிழடு தட்டிப் போய் விடுகிறார்க. இந்த நிலையில் இவ்வுலகில் அருவருக்கத்தக்க ஜந்துக்களாக இவர்க மாறிப் போய்விடுகிறார்க.’ கடின உழைப்பு, வெயில், மழை, கடுங்குளிர் என்பன இவர்களை எவ்வாறு குரூபிகளாக ஆக்கிவிடுகின்றன என்பதைப் பற்றி இவர்க எவரும் ஒன்றும் கூறவில்லை. நமக்கு ஏன் வம்பு என்று நினைத்திருக்கக்கூடும்.

***
கோப்பிக் காலத்து தமிழ் தொழிலாளர்கள் தொடர்பில் அக்காலத்தில் பெரும் ஆராய்ச்சியே இடம்பெற்றது. இவர்களின் குணம், நிறம், தோற்றம், பழக்கவழக்கங்க, உணவுமுறை, நம்பகத்தன்மை, பார்வை, கீழ்ப்படிவு, போராட்ட குணம், அப்பாவித்தனம் போன்ற அம்சங்க பற்றி அப்போதைய ஆளுநர், அவரின் அரச செயலாளர்கள், சமூக ஆய்வாளர்கள், தோட்டத்துரைமார்க பலவகைகளில் கருத்துத் தெரிவித்துளனர். ஆய்வு எல்லாமே இவர்களை வைத்து எந்தளவுக்கு இலாபம் சம்பாதிக்கலாம் என்பதைக் குறியாகக் கொண்டிருந்தது. இந்தத் தொழிலாளர்கள் எந்தளவுக்கு உபயோகமானவர்க, இவர்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் விவாதம் எழுந்த போது சேர் வில்லியம் கிரகெரி (1872 1877) என்ற ஆளுநர் கூறியதாவது: இவர்க என்னதான் தவறு செய்தாலும், இவர்களைப் பார்த்த மாத்திரத்தில் யாரும் விரும்பாமல் இருக்கமாட்டார்க. இவர்களின் சுறுசுறுப்பு, குறைந்த வசதிகளில் திருப்தியடைதல், எதற்கும் உடனடியாகப் பணிந்துபோதல், ஓர் அன்பான எஜமானுடன் ஐக்கியப்பட்டு இரண்டறக் கலந்து போதல் என்பன இவர்க மீது பல பாவங்களைச் செய்ய துணைபோயின. இவருக்கு முன்பிருந்த ஆளுநர் சேர் ஹெர்குலிஸ் ரொபின்ஸன் இவர்களைப் பற்றி குறிப்பிடும்போது, ‘உலகிலேயே மிக எளிமையானவர்க இந்தத் தமிழ் கூலிக தான். இவர்க நினைத்த மாத்திரத்தில் தம் நடத்தையை மாற்றிக்கொவர். ஏனைய கீழ்த்திசை மக்களைவிட நல்லவர்க.

இவர்களது குழந்தைத்தனம் காரணமாக ஓர் அதிகாரத்துவ வழி காட்டல் எப்போதும் தேவைப்படுகின்றது. பெற்றோர் குழந்தைக மீது அதிகாரம் செலுத்துவதுபோல அவர்க மீதும் அதிகாரம் செலுத்தப்பட வேண்டும்’.

ஆளுநர்களின் இத்தகைய சாதகமான கருத்துகளுக்கு மத்தியில் வில்லியம் சபோடினேயர் என்ற கோப்பித்தோட்ட துரை கூறியதாவது:

இவர்க நம்பத்தகாதவர்க. இந்த நம்பத்தகாத தன்மை இவர்களுக்கு தாய்ப்பாலில் இருந்தே வந்துவிடுகின்றது. இவர்களது கூற்றுக எப்போதும் பொய்கலந்தவையாகவே இருந்தன. அவற்றை நம்பி ஒன்றுமே செய்ய முடியாது.

இவற்றுக்கெல்லாம் மேலாக அப்போது புகழ்பெற்ற மிஷனரியாக இருந்த வண. சி.எப். அன்வூவ்ஸ் கூறியுள கூற்று கவனிக்கத்தக்கது:

நான் அவர்களின் சோகக்கதைகளை அவர்களின் வாய்மூலமே கேட்டிருக்கிறேன். இவர்களது கண்களும் பார்வையும் வேட்டையாடப்படும் மிருகத்தை ஒத்திருக்கும். இவர்க நைந்து போனவர்களாக, விரக்தியடைந்தவர்களாக, பயந்தவர்களாக, அதிர்ச்சியடைந்தவர் களாக, மனங்குன்றிப் போனவர்களாக இருந்தனர். இவர்களின் கதையை எழுதினால், அதனை எழுதிய பக்கங்க கோபத்தால் தீப்பிடித்து எரிந்து போய்விடும்''

***
தூரதேசத்தில் இருந்து வந்து தமக்கு முற்றிலும் புதிதான சூழலிலும், காலநிலையிலும் வாழப்பழகிக்கொண்ட மலையக மக்க ஒரு நாளும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. ஒவ்வொரு காலத்திலும் ஏதோ ஒரு பிரச்சினை பூதாகரமாக வந்து இவர்களை அச்சுறுத்தியது. ஒரு முறை வாந்திபேதி வந்தால் மறுமுறை ஜன்னி காய்ச்சலால் நடுக்க முற்றனர். வதந்திகளை நம்பி அல்லலுற்ற சந்தர்ப்பங்க ஏராளம். 1860களைத் தொடர்ந்து கோப்பிப் பயிர்ச்செய்கை உச்சநிலை அடைந்திருந்தது. இதனால், மலையகத்தை நோக்கிய புகையிரதப் பாதைகளும், பெருந்தெருக்களும் விஸ்தரிக்கப்பட்டன. 1871 ஆம் ஆண்டு கண்டிக்கும் மாத்தளைக்குமான ரயில் பாதையை விஸ்தரிக்க ஏற்பாடுக ஆரம்பமாகின. இச்சந்தர்ப்பத்தில் தொழிலாளர்கள்ளிடையே ஒரு வதந்தி பரவியது. இவ்வீதி அமைப்பை வெற்றிகரமாக மேற்கொவதற்கும், பாலங்களை பாதுகாக்கவும் 1000 தொழிலாளர்கள் தெய்வங்களுக்குப் பலி கொடுக்கப்படவுளனர் என்பதே அந்த வதந்தி. இதனால், இப்பகுதியிலிருந்த தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாகத் தாயகத்துக்குக் கிளம்பினர். இவர்களை நிறுத்த தோட்டத் துரைமார் பெரிதும் சிரமப்பட்டனர். கிபோன் என்ற கம்பளை, உடவளையைச் சேர்ந்த தோட்டத்துரை, இந்த வதந்திகளுக்குக் காரணமான ஒரு தொழிலாளியைப் பிடித்து விசாரித்து தண்டனை வழங்கியதாகத் தெரிகின்றது.

1861ஆம் ஆண்டு ஒரு சமயம் கோப்பித்தோட்டங்களில் வேலை செய்வதற்காக இவர்க மன்னாரில் வந்திறங்கியவுடன் கடத்தப்படுகிறார்க என்றும், இப்படிக் கடத்தப்படுபவர்களை பிரிட்டிஷ் இரா வேறு நாடுகளுடன் யுத்தம் செய்யும்போது படையினருக்கு சிறு பணிகள் செய்வதற்காக அனுப்புவதாகவும் வதந்தி பரவியதால் தொழிலாளர்கள் கலவரமடைந்துளனர் என்றும் இது தொடர்பில் விழிப்புடன் இருக்கும்படியும் மன்னார் உதவி அரசாங்க அதிபருக்கு கொழும்பிலிருந்த ராஜாங்கச் செயலாளர் செய்தி அனுப்பி இருந்தார். ரொபின்சன் என்பவர் கவர்னராக இருந்தபோது இத்தகைய வதந்தி ஒன்று பரவியது. இச்சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் இராμஷீத்துக்கும் சீனாவுக்குமிடையில் யுத்தம் மூண்டுளதாகவும் பிரிட்டிஷ் படைகளின் முகாம்களில் பணிபுரிவதற்காக அரசாங்கம் பலாத்காரமாக தொழிலாளர்கள்ளை அனுப்புவதாகவும் வதந்தி பரவியிருந்ததாக தனது குறிப்பில் ரொபின்சன் எழுதிவைத்துளார். இதனால், தொழிலாளர் பதற்றமடைந்து தமது தாய்நாட்டுக்கு ஓடிச்சென்றனர் என்றும் முன்பு 1861 ஆம் ஆண்டு ஏற்பட்ட சம்பவம் போன்றதே இது என்றும் குறிப்பிட்டுளார். இப்படி வதந்திக இவர்களின் வாழ்வைப் பிடித்து ஆட்டின.

***
தேயிலை பெருந்தோட்டங்க ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இந்திய வம்சாவளித் தமிழர்க தோட்டங்களில் நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினர். கோப்பிக்காலத்தில் கோப்பி அறுவடை செய்வதற்காக மாத்திரம் வந்து போகும் பருவகாலத் தொழிலாளர்கள்ளாக மாத்திரமே இவர்கள் இருந்தனர். பெருந்தோட்டத் தொழிலாளர் மத்தியில் 14 வகையான மரணங்க வழக்கமாக நிகழ்கின்றன என்றும் ஏனைய சமூகத்தவர்களிலும் பார்க்க இவர்க மத்தியில் அதிக சதவீத மரணங்க நிகழ்வதாகவும் 1859ஆம் ஆண்டு ஏ.எம். பெர்கியூசன் தெரிவித்தி ருந்தார். பெர்கியூசன் கைநூல் அப்போது பிரபலமான தகவல் களஞ்சியமாக இருந்தது. இவர் தனது அறிக்கையில் 1837ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் பத்து இலட்சம் இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்துளனர் என்றும் அவர்களில் 2,50,000 பேர் கல்லறைகளில் சமாதியாகிவிட்டனர் என்றும் தெரிவித்தார்.

நோயுற்ற தொழிலாளர்கள் தோட்டங்களில் இருந்து அதிகாரிகளால் விரட்டப்பட்டனர் என்றும் அவர்க பாதையோரம் விழுந்து இறந்து கிடந்தனர் என்றும் எந்த விசாரணையும் இன்றி அவர்க உடல்கள் வீசப்பட்டன என்றும் இது மிகப் பரிதாபகரமானது என்றும் அப்போது கிறிஸ்தவ கூலி மிஷன் அமைப்புக்குப் பொறுப்பாக இருந்த அருட்திரு. செப்டிமஸ் ஹொப்ஸ் "ஒப்சேவர்' பத்திரிகைக்கு எழுதினார். கோப்பித் தொழிலாளர் மத்தியில் நிகழ்ந்த 14 வகையான மரணங்களில் அதிக அளவில் நிகழ்ந்த மரணங்க, கொலரா, மலேரியா, போதிய மருத்துவ வசதியின்மை, பிரசவத்தின்போது, கடுமையான காலநிலை, பாம்புக்கடி என்பவற்றாலேயே ஏற்பட்டன. சுகவீனம் காரணமாக தோட்டத்தில் வேலை செய்ய முடியாதவர்க தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவ்விதம் சுகவீனமுற்றவர்க மருத்துவ வசதியின்றி பாதையோரங்களில் மரணித்தனர். இத்தகைய மரணங்களின்போது அதிகாரிக " இறந்திருக்கக் காணப்பட்டான்.

காரணம் தெரியவில்லை. என்று குறிப்பெழுதி இரண்டு தொழிலாளர்களைக் கொண்டு அவ்விடத்திலேயே குழிவெட்டி புதைப்பார்க. அல்லது பளங்களில் போட்டு மூடிவிடுவார்க. இவர்களின் மரணங்க பதிவாளருக்கு அறிவிக்கப்படாததால் எவ்வளவு பேர் இறந்தனர் என்பதைச் சரியாக அறிய முடியவில்லை.

இத்தகைய மரணங்க 17ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட கருப்பின அடிமைக மத்தியில் அதிகம் நிகழ்ந்த போது எஜமானர்க சுகவீனமுற்ற அடிமைகளை கைவிடக்கூடாது என்றும் இத்தகைய மரணங்களுக்கு எஜமானர்க பொறுப்புக் கூற வேண்டுமென்றும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இரண்டு நூற்றாண்டின் பின்னர் இது இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர் மத்தியில் நிகழ்ந்த போது இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க எவருமேஇருக்கவில்லை.

***
மலையகப் பெருந்தோட்ட மக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு வளர்ச்சிப்படி நிலைகளைத் தாண்டி வந்துளனர். இன்றுங்கூட ஏனைய சமூகத்தினருடன் ஒப்பிடுகையில் மிகப் பின்தங்கியே காணப்படுகின்றனர். இக்கால கட்டங்களில் இவர்களை பல பட்டப்பெயரிட்டு அழைத்து சமூகத்தில் ஓரங்கட்டி வைத்திருந்தனர். அத்தகைய பெயர்களை மீண்டும் சொல்வதற்கே கூச்சமாக உளது. கூலிகள், வந்தேறு குடிக, வடக்கத்தியான், களத் தோணி, இந்தியாக்காரன், கறுப்பன், நாடற்றவன், டி.ஆர்.பி. என்பன அவற்று சில. இவற்றுள் கூலி என்ற பெயரே நீண்ட காலம் நீடித்த பெயர். "கூலி' என்ற பெயரை புறந்தள்ளி "தொழிலாளர்' என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொடுக்க, முதல் மலையகத் தொழிற்சங்கத் தலைவர் என்று பெயர் பெற்ற கோ.நடேசய்யரால் கடுமையாகப்போராட வேண்டியிருந்தது.

1917 களைத் தொடர்ந்து சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட சோஷலிசப் புரட்சியை அடுத்து, மூன்றாம் உலக நாடுகளில் சமத்துவம் கோரி போராட்டங்க நடைபெற்றன. இத்தகைய போராட்டங்களை இலங்கையில் இடதுசாரித் தலைவர்க முன்னின்று நிகழ்த்தினர். 1917 தொடக்கம் 1927 வரை இலங்கையின் முன்னோடித் தொழிற்சங்கத் தலைவர் ஏ.ஈ. குணசிங்கவுடன் இணைந்து கோ.நடேசய்யரால் தொழிலாளர்கள்ளும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இவற்றில் துறைமுகத் தொழிலாளர் போராட்டம், அச்சுத் தொழிலாளர் போராட்டங்க பிரசித்தி பெற்றன. எனினும் ஏ.ஈ. குணசிங்கவின் சிங்கள பேரினவாதக் கொகையால் வெறுப்புற்ற கோ. நடேசய்யர் அவருடன் பிரிந்து சென்று இந்திய தோட்டத் தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்பதற்காக 1931ஆம் ஆண்டு இந்தியத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற தொழிற்சங்கத்தை முதன் முதல் தோற்றுவித்தார்.

இக்காலத்தில் நகர்புறத்தைச் சேர்ந்த துறைமுக, ரயில்வே , அச்சக தொழிலாளர்கள் என்போர் தொழிலாளர்கள் என இனங்காணப்பட்டிருந்தனர். எனினும் தோட்டத்தொழிலாளர்கள்ளை பலரும் அங்கீகரிக்க மறுத்தனர். கோ.நடேசய்யர் இந்த அந்தஸ்தினை தோட்டத் தொழிலாளர்கள்ளுக்கு பெற்றுக்கொடுக்க சட்ட நிறுவன சபையிலும் இராஜ்யசபையிலும் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

1942ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசர் சேர். பிரான்சிஸ் சோர்ட்ஸ் அவர்களின் முன்னிலையில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஆறு தோட்டத் தொழிலாளர்கள் சி.ஏ.ஜி. போப் என்ற தோட்டத்துரையை கொலை செய்த குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டனர். அச்சமயம் இவர்களை "கூலிக' என்று பிரஸ்தாபிக்கப்பட்ட போது, "கூலி' என்ற வார்த்தையை மன்றில் மனிதர்களை அழைக்கப்பயன்படுத்தக்கூடாது என்றும் "தொழிலாளர்' என்று அழைக்குமாறும் நீதியரசர் ஆவணங்களில் திருத்தம் செய்தார். அதனைப் பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தார். என்றாலும்கூட "கூலி' என்ற வார்த்தை இப்போதும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

முற்றும் 

முந்திய தொடர்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates