Headlines News :
முகப்பு » » பெண் தொழிலாளியை தாக்கிய தோட்ட நிர்வாக அதிகாரி...

பெண் தொழிலாளியை தாக்கிய தோட்ட நிர்வாக அதிகாரி...








ரொசல்ல டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் 03.03.2014 அன்று குறித்த தோட்டத்தின் அதிகாரி ஜானக தொழிலாளிகளிடம் பிற்பகல் 3 மணியளவில் 20 கிலோ கொழுந்து பறிக்கும் படி கூறியுள்ளார். 20 கிலோ கொழுந்து பறித்தால் தான் இன்றைய நாளுக்கான ஊதியம் கிடைக்கும் என அதிகாரி தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கதைப்பதற்கு தனது அலுவலகத்திற்கு தொழிலாளிகளை வரும்படி தெரிவித்துள்ளார். அதன் பின் தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும்போது புஸ்பராணி என்ற தொழிலாளியை தோட்ட அதிகாரி தீடிரென தாக்கியுள்ளார். 

காரணம் :- குறித்த தொழிலாளி அதிகாரியிடம், ஒரு நாளொன்றுக்கு கூட்டு ஒப்பந்தத்தின்படி 16 கிலோ தான் கொழுந்து பறிக்கவேண்டும். நீங்கள் 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்று கூறுகின்றீர்கள் என்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும்போது தோட்ட அதிகாரி குறித்த தொழிலாளியை தாக்கியுள்ளார். 

தோட்ட அதிகாரி வட்டவளை பொலிஸ் நிலையத்தில் தம்மை தொழிலாளிகள் தாக்கியதாக முறைப்பாடு செய்ததோடு அவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொழிலாளி புஸ்பராணியை தோட்ட அதிகாரி தாக்கியதாக வட்டவளை பொலிஸாரிடம் தொழிலாளர்கள் முறைபாடு செய்துள்ளனர். குறித்த தொழிலாளி புஸ்பராணி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தோட்ட தொழிலாளர்கள் 04.03.2014 அன்று வேலைக்கு செல்லும்போது தோட்ட நிர்வாகம் தொழிலாளிகளுக்கு வேலை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது. எனவே வட்டவளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

க.கிஷாந்தன்

நன்றி - malayagam.lk
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates