Headlines News :
முகப்பு » » சிவனு மனோகரனின் கோடாங்கி சிறு கதைத் தொகுப்பு விமர்சனம் - சை. கிங்ஸ்லி கோமஸ்

சிவனு மனோகரனின் கோடாங்கி சிறு கதைத் தொகுப்பு விமர்சனம் - சை. கிங்ஸ்லி கோமஸ்


மக்கள் இலக்கியங்களில் தோன்றும் வாழ்வியல் சார்ந்த அழகுணர்வை மக்கள் மத்தியில் இருந்து தோற்றம் பெரும் படைப்புக்களே எடுத்துக் காட்டுகின்றன. அவையே மக்களை இலகுவில் சென்றடைந்து வெற்ற, பெற்ற, மக்கள் இலக்கியங்களாகவும் நாம் கண்டுள்ளோம். இதனூடாக இலக்கியங்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போகாமல் மக்களுடன் சங்கமிக்குமானால் அதுவே படைப்பின் வெற்றியாகும்.

மலையகத்தின் அண்மைய கால படைப்புகளில் சிலவற்றை நோக்கும் போது மக்கள் எதுவுமே அறியாதவர்கள் என்னும் கருத்தினை போலவும் படைப்பாளி யாவும் அறிந்த ஞானி என்னும் சிந்தனையைய் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதனையும்பல படைப்புக்களில் தர்சிக்கக் கூடியதாய் உள்ளது. படைக்கப்பட்ட இலக்கியங்கள் எந்த அளவிற்கு மக்களுக்கு பிரயோசனமாக படைக்கப்பட்டது என்பதனைக் கருத்தில் கொண்டு சிவனு மனோகரனின் கோடாங்கி சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனத்தினை செய்வது சிறப்பானதாகும் என எண்ணுகிறேன்.

கோடாங்கி படைப்பாளியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாகும். இவரின் முன்னைய தொகுப்பான ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும் என்ற தொகுப்பில் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்திருப்பதுடன் விமர்சகர்களின் விமர்சனங்களையும் கருத்தில் கொண்டிருப்பது வரவேற்கக் கூடிய விடயம் மாத்திரம் அன்றி படைப்பாளியின் அனுபவ முதிர்ச்சியினையும் பறை சாற்றி நிற்கின்றது.

தொகுப்பின் மொத்த கதைகள் 17 இல் 08 கதைகள் பெண்ணியம் சார்ந்த கருத்தக்களை ஏந்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது சக்தி கரகம், நிமிர்வு, பாப்பா புள்ள, மட்டத்து கத்தி, ஒரு அந்த புரத்தின் அந்த ரங்கம், அம்மாயி, விட்டில்கள் ஆகிய கதைகளே பெண்ணிய கருத்தியல்களை அடிநாதமாக கொண்ட கதைகளாகும்.

விட்டில்கள்
மலையகத்தின் மாறாதிருக்கும் வறுமையும் பல கலாச்சார சீரழிவுகளும் மூட நம்பிக்கைகளும் ஆண்டாண்டு காலமாய் தலை முறை தலை முறையாய் மலையக மக்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கியுள்ளது என்பது படைப்பாளி வாசகனின் சிந்தனைக்குக்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது’இங்கப் பாரு இந்த சனியன் கொஞ்ச நாளைக்கு கொழும்பில போய் இருக்கட்டும் வேல கூடப் பேசிட்டேன்’ என்னும் வார்த்தைகள் பல வருட காலமாக ஏமாற்றப்பட்டு காட்டி கொடுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் கீழ் மட்ட பொருளாதார நிலைமையும் வாழ்க்கை செலவுப் புள்ளியை விட மட்டமான சம்பள உயர்வுகளும் கல்வி கற்க வேண்டிய பிள்ளைகளை தலைநகரின் பணக்கார வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பப் படுவதும் இது வறுமைக்கான விமோசனம் என்று எண்ணிய போதும் வீட்டு வேலைக்கு அனுப்பப் பட்டவர்களின் மர்மமான மரணங்கள் தொடர்ந்துக் கொண்டிருப்பதும் இது தொடர்பான மலையக தொழிற்சங்கங்களின் பாராமுகமான போக்கினையும் அடையாளப்படுத்துகின்றது விட்டில்கள்-பழமைத் தகர்ப்பு.

நிமிர்வு
அண்மைய காலங்களில் எழுத்தாளன் வாழும் பிரதேசங்களில் இனவாத அரசியல் பிரச்சாரங்களின் விளைவாக மனித நேயமற்ற தாக்குதல்கள் இடம் பெற்றதுவும் தினமும் பதட்டமான சூழ்நிலை தோன்றியிருப்பதுவும்; துரதிஸ்ட வசமான விடயமாகும் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் சிலரின் சுய நலத்திற்காய் விதைக்கப்பட்ட இன வாத நச்சு விதைகள் இன்று சிறப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றது வழமையாக விதைத்தவன் நெருப்பு எரியும் போது நாட்டை விட்டு ஓடி போய் வேறு ஒரு நாட்டில் பதுங்கிக் கொள்வான். சாதாரண பண்டாவும் பாலாவும் அன்வரும் பழியாகிப் போவார்கள்.மக்கள் இதனை உணர வேண்டும் என்ற பிரக்ஞையினால் எழுதப்பட்ட நிமிர்வு என்னும் கதை சிறப்பாக படைக்கப் பட்டுள்ளது. இனம், மதம், சாதி, வர்க்கம் என்பவற்றிற்கப்பால் மனிதம் விதைக்கப் படைக்கப் பட்ட கதை என்ற வகையில் சிறப்பானது. படைப்பாளியின் மத்திய தர சிந்தனை அங்கங்கே தலை நிமிர்த்துவது தவிர்க்கப் பட்டிருக்கலாம். நிமிர்வு- காலத்தின் தேவை.

ஒரு அந்தப் புரத்தின் அந்தரங்கம்
கதையின் கரு கதை சொல்லும் பானி கதாப்பாத்திரப் படைப்பு அனைத்துமே பின் நவீனத்துவ வாதியும் அண்மைய காலங்களில் அதிகமானவர்களால் விமர்சிக்கப் படுபவருமான ஜெய மோகனின் பாணியில் படைக்கப் பட்டிருப்பது விமர்சனத்துள்ளாகின்றது. சிவனு மனோகரனின் அனேகமான கதைகளிலே காணக் கூடியதான இவ்விடயம் இவரின் எதிர்கால எழுத்துக்கள் தொடர்பான சந்தேகத்தினை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது இது சாதிய சாக்கடைகளை அகற்றவா?ஆளப்படுத்தவா?ஒரு அந்தப் புரத்தின் அந்தரங்கம் – விசம் , ஆணாதிக்கம்.

கோடாங்கி
கதை வாசகனுக்கா? எழுத்தாளனுக்கா?
கார்ட்டுன் தொடரைப் போன்ற கதை பூசாரியன் பிற் போக்குத்தனத்தை விட எழுத்தாளனின் சிதைவுற்ற சிந்தனைகள் சீர்த்திருத்தம் என்னும் பெயரில் சீரழிவு, பின்நவீனததுதவ போக்கினை பறைசாற்றும் மற்றுமொரு படைப்பு கோடாங்கி- யதார்த்தத்திற்கு அப்பால்
கூட்டாஞ்சோறு
மலையக அரசியலையம் வாழ்வியலையம் விமர்சிக்கும் சிறப்பான கதை மக்கள் ஐக்கியத்தை சீரழிக்கும் கொடூர மனப்பாங்கினை எடுத்துக்காட்டும் உவமைக் கதையாக காணப்படுகின்றது கூட்டாஞ்சோறு- தோல்வி, விரக்தி.
சக்தி கரகம்-பெண்  விடுதலை கேள்வி.
படர்த்தாமரை- விரக்தியின் உச்சம்.

பாப்பா புள்ள
மலையக மக்களின் வறுமையின் ரணங்களும் ஏமாற்றுத் தலைமைகளின் பொய்யான தம்பட்டங்களும் வாக்குறுதிகளும் அம்பலம் பாப்பா புள்ள- திரும்பிப் பார்க்க வைக்கும் சலனங்கள்.

மட்டக் கத்தி
ஆயுதத்தைத் தூக்கி எறிவதனூடாக படைப்பாளி எதைக் கூற முனைகின்றார் என்பது கேள்விக் குறி. மலையக மக்களின் இருப்பு இன்றும் நிலைத்திருப்பது உழைப்பிற்காய் நாம் கையில் ஏந்தும் ஆயுதங்களால் தான். உழைப்பாளர்களின் உலக அடையாளமே அறுவாள் சம்மட்டி என்பது குறிப்பிடத்தக்கது இந்த அடையாளத்தை எவறாளும் தூக்கி எறிய முடியாது. அது போலவே மட்டக்கத்தி மட்டக்கத்தி –பேதமை

புள்ளையார் பந்து
கதை எம்மை ஆடுகளத்திற்கே அழைத்து செல்வது சிறப்பம்சமாகும் வாசிக்கப்பட வேண்டிய கதை.
புள்ளையார் பந்து-புதுமை நம்பிக்கை

லயத்து குருவிகள்
வழமைக்கு மாறான கதையோடட்ம் முட்டைப்பாண்டி, தோட்டத்து தலைவர், அம்மா, அப்பா, கதை சொல்பவன் என்னும் கதாப்பாத்திரங்கள் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன் லயத்து குருவிகளின் வாழ்வியலுடன் மலையக பிற்போக்கு அரசிலுக்கான விமர்சனமும் புகுத்தப்பட்டுள்ளமை ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுள் ஒருவரான எஸ் அகஸ்தியர் எழுதிய ஒரு கோடீஸ்வரப் பிரபுவுடன் ஒரு சந்திப்பு என்னும் கதையை ஞாபகபடுத்கின்றது லயத்து குருவிகள்-அனுபவப் பகிர்வு

காவி நிறத்தினிலே
தாயகம் சஞ்சிகையிலே பிரசுரிக்கப்பட்ட சிறந்த கதை அனைவராலும் வாசிக்கப் பட வேண்டிய கதை இது அனைத்து துறவிகளுக்கும் புதிதாக வரும் காலான் சமயங்களுக்கும் புதிய புதிய சாமியார்களுக்கும் விமர்சனமாய் அமைந்த கதை.காவி நிறத்தினிலே-தூற்றப் படும் துறவு.
தவலைகள் உலகம்

தவலைகளுடனும் நண்டுகளுடனும் மாத்திரம் கதை புனையப்பட்டு முடிவுற்று இருக்குமானால் சிறப்பாக அமைந்திருக்கும். கதை சொல்பவனாய் வரும் கதாபாத்திரமானது யதார்த்தமற்ற நிலையில் காணப்படுகின்றது. முற்றும் முழுதும் ஜெய மோகன் பாணியிலான கதை. மக்களுக்கு விளங்காதகதை போக்கு.தவலைகள் உலகம்-வாசகனின் விமர்சனத்திற்காய்
பச்ச பங்களா-யதார்த்தம், சினிமாத்தனம்.
கருவுலகம்-பெண்மை, பாசம, வேதனை.

அம்மாயி
சிறப்பான கதை வாசகர்களை தேயிலைத் தோட்டத்து தொழிலாளர் வாசஸ் தலமான லயத்திற்கு அழைத்து சென்றிருக்கும் கதை . படைப்பாளியின் வர்க்கக் குணாம்சம் அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டிருககின்றது வெறுமனே பக்கத்து வீட்டில் இருந்த பழகிய எனக்கே இப்படித் துடிக்கும்போது என்னும் வார்த்தைகள் தோடட்த் தொழிலாளர்களின் வாழ்வியளில் இருந்து தன்னை அந்நியப் படுத்தி காட்ட முனையும் நிலைமையினைவெளிக்காட்டுகின்றது. எழுத்தாளன் தன்னை அம்மாயியிளுன் பேரன் என்று யாரும் எண்ணி விடக் கூடாது என்பதில் அக்கறை செலுத்தும் அளவுக்கு கதையின் கருத்தியலில் அக்கறை செலுத்த வில்லை என்பது பல உண்மைகளை கூறி நிற்கின்றது. அம்மாயி-கழட்டப்பட்ட முகத்திரை.

இந்திர லோகத்தில் தோட்ட காட்டான்-வாசகர்களின் என்னத்திற்கும் விமர்சனத்திற்கும் தோட்ட காட்டான் என்னும் வார்த்தைபயன் படுத்துவது தவிர்க்கப் படல் வேண்டும்
இலக்கியம் என்பது மனித வாழ்வு சார்ந்தது என்னும் அடிப்படையில் சகல கதைகளுக்குமான ஓவியங்கள் சற்று சிந்தனையை ஸ்தம்பிதம் அடைய செய்திருக்கின்றது. பச்ச பங்களா என்னும் கதைக்காய் வரையப்பட்ட ஓவியம் வர்க்க ஏற்ற இறக்கங்களை எடுத்து காட்டும் வகையில் வரையப்பட்டுள்ளது ஓவியர் என்.எம். தங்கேஸ்வரன் பாராட்டப் பட வேண்டியவராவார் அவசரம் இல்லாமல் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தால்; உயிரோட்டம் நிறைந்த ஓவியங்களை பிரசவித்திருக்கலாம.

கோடாங்கி மலையக வாழ்வியலை ஆவணப்படுத்தியிருக்கும் மற்றும் ஒரு படைப்பாகும். மக்களோடு உறவாட துணிந்துள்ள படைப்பாளி மக்களின் வாழ்வியலை பேசத் துணிந்த அளவு மக்களின் விடுதலை நோக்கி அல்லது மானிட வாழ்வியல் மாற்றங்கள் தொடர்பாக பேசத்துணியாதது மக்கள் இலக்கியம் என்பது வெறுமனே ஆவணப்படுத்தவா?

அல்லது மனித மனங்களில் ஆள ஊடுருவி குறைந்தப்பட்ச விடுதலை விதைகளையாவது விதைக்கச் செய்யவா? என்னும் கேள்விகளுடன் சில கதைகளைத்தவிர மற்றய கதைகள் வாசிக்கப் பட வேண்டும் விமர்சனத்துக்குள்ளாக்கப் படவும் வேண்டும்.

மலையக எழுத்தாளர்களில் அனேகமானவர்கள் தங்களின் நடுத்தரவ வர்க்க சிந்தனைகளையும் தங்களின் படைப்புக்களில் தங்களை அறியாமலே அடையாளம் காட்டி யிருப்பதனை காணலாம்.

படைப்பாளியின் கதைகளிலும் இவ்வாரான வர்க்க குணாம்சம் அங்காங்கே தலை காட்டீயிருப்பதனை படைபபுக்களில் அவதானிக்கக் கூடியதாய் உள்ளது அப்போது முட்டைப்பாண்டியின் மறைவிற்காய் தோட்டமே கூடி நின்று அழுது புலம்பியது என்னால் அவனுக்காய் அழ முடியவில்லை என்னும் வார்த்தைகள் மக்களில் இருந்து படைப்பாளி அந்நியப்பட்டவன் என்பதனை முன்னிருத்தி நிற்க்கின்றது இந்நிலைமையானது குண்டுகளைப் போட்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தப்பின் தெரு நாய்களை கொள்ளக் கூடாது என்னும் தர்மப் போதனைக்கு ஒத்ததாக காணப் படுகின்றது .

அட்டைப்படத்தில் மலையக பூசாரிக்கும் சித்தர்களுக்குமான வித்தியாசம் மிகவும் குறிப்பிடத்தக்கது வர்ணாசிரமத்திற்கு எதிராக இயங்கியவர்கள் சித்தர்கள் மலையக பூசாரிகள் பம்மாத்து வித்தைகள் செய்பவர்கள்.
எதிர்காலத்தில் சிவனு மனோகரனின் படைப்புகள், மனித நேயத்தை அடிநாதமாக கொண்ட படைப்புக்களாகவும் படைப்பாளியும் படைப்புக்களும் மக்களில் இருந்து அந்நியப்படாத மக்கள் இலக்கிய பண்புகளையும் வெளிப்பாடுகளையும் கொண்டமைய வாழ்த்துக்கள்.
நன்றி - இனியொரு
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates