Headlines News :
முகப்பு » , , » பதுளையில் லெனின் மதிவானனின் ஊற்றுக்களும் ஓட்டங்களும் வெளியீடு

பதுளையில் லெனின் மதிவானனின் ஊற்றுக்களும் ஓட்டங்களும் வெளியீடு



பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் ஈழத்து இலக்கிய ஆய்வாளரும் விமர்சகருமான லெனின் மதிவானம் அவர்கள் எழுதிய ´ஊற்றுக்களும் ஓட்டங்களும்´ எனும் நூலின் அறிமுக விழா எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அமைப்பின் தலைவர் வை.தேவராஜாவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந்நூலின் அறிமுகவுரையை நூலின் பதிப்பாசிரியர் பாக்யா பதிப்பகத்தின் நிறுவுனர் மல்லியப்புசந்தி திலகர் அவர்களும், நூல் நயவுரையை எஸ்.சேதுரட்ணம் அவர்களும், கருத்துரையை கலை இலக்கிய வட்டத்தின் உப தலைவர் கே.திருலோகசங்கர் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். 

இவ்வறிமுக நிகழ்வில் பதுளையிலுள்ள இலக்கிய ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தக பிரமுகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

இருபது இலக்கிய திறனாய்வு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வந்திருக்கும் ´ஊற்றுக்ககளும் ஓட்டங்களும்´ (மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கி வரை) உயர்தரத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு மிகவம் பயனுள்ளது. அத்துடன் பல்வேறு இலக்கிய ஆளுமைகள் பற்றிய பதிவாகவும் இந்த நூல் அமைந்துள்ளது. 

துரைவி பதிப்பகம் 2012ம் ஆண்டு முதல் அதன் நிறுவுனர் அமரர் துரை.விஸ்வநாதன் நினைவு விருதினை அறிமுகப்படுத்தியுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வு நூலுக்கான துரைவி விருதினை லெனின் மதிவானம் எழுதிய ஊற்றுக்களும் ஓட்டங்களும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates